முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

சிந்தனை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்தியாவின் முதல் ஐந்தாண்டுத் திட்டம்: வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான அடித்தளம்

ஜவஹர்லால் நேரு 1951 இல் தொடங்கப்பட்ட இந்தியாவின் முதல் ஐந்தாண்டுத் திட்டம், நாட்டின் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்தை நோக்கிய பயணத்தில் குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியது. உயரிய கொள்கைகளை நோக்கிய இத்தகைய திட்டம் புதிதாக சுதந்திரம் பெற்ற நாடு எதிர்கொள்ளும் அழுத்தமான சவால்களை எதிர்கொள்ளவும், நவீன, தன்னிறைவு மற்றும் வளமான தேசமாக மாற்றுவதற்கான அடித்தளத்தை அமைக்கவும் வடிவமைக்கப்பட்டது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் வழிகாட்டுதலின் கீழ் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், வறுமையைப் போக்குவதற்கும், தொழில்மயமாக்கலை அதிகரிப்பதற்கும், குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் இலக்காகக் கொண்ட தொடர்ச்சியான முன்முயற்சிகள் மற்றும் கொள்கைகளை கொண்டிருந்தது. இந்தியாவின் முதல் ஐந்தாண்டுத் திட்டத்தின் நோக்கங்கள், சாதனைகள் மற்றும் எல்லைகளை ஆழமாக ஆராய்வோம். முதல் ஐந்தாண்டுத் திட்டத்தின் நோக்கங்கள் விவசாய வளர்ச்சி இந்தியாவின் மக்கள் தொகையில் கணிசமான பகுதியினர் தங்கள் வாழ்வாதாரத்திற்காக விவசாயத்தை நம்பியிருந்தனர். முதல் ஐந்தாண்டுத் திட்டத்தின் முதன்மை இலக்கு விவசாய வளர்ச்சியை ஊக்குவிப்பது...

கல்விக் கொள்கை ஆலோசனைகள்

   மதிப்பிற்குரிய சான்றோர்களுக்கு வணக்கம். நம் மாநிலத்தின் பள்ளிக் கொள்கைகளுக்காக, என்னுடைய நீண்ட நாள் கனவுகளை, என்னுடைய ஆலோசனைகளாகத் தெரிவிக்கிறேன்.  1.கணிதம், அறிவியல், சமூக அறிவியல், ஆகிய பாடங்கள் மூன்றாம் வகுப்பு முதல் ஆங்கில வழியில் கற்பிக்கப்பட வேண்டும். தமிழில் கற்பிக்க முடியும் என்றாலும் தமிழ்நாட்டுக்கு வெளியே என்ன பலன் கிடைத்துவிடும்?   2. ஐந்தாம் வகுப்பு முதல் ஆங்கில மொழியுடன் இந்திமொழியும் அறிமுகம் செய்யப்பட வேண்டும். 10 முதல் 25 மதிப்பெண்கள் இந்திக்கு என்று அளிக்கலாம். இதன் மூலம் ஒன்றிய அரசிலும் ஒன்றிய அரசின் வேலைவாய்ப்புகளிலும் தமிழர்கள் கோலோச்ச முடியும். இந்தி ஆசிரியர்கள் கட்டாயம் தமிழ் இலக்கணம் அறிந்திருக்க வேண்டும். அரசியல் கட்சிகள் கட்டாயம் எதிர்ப்பார்கள். ஆனால், மக்கள் கண்டிப்பாக மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வார்கள்.   3. மற்ற பாடங்கள் ஆங்கிலத்தில் நடத்தப்படுவதால் இயற்கையாகவே ஆங்கில அறிவு கிடைத்துவிடும். எனவே, 9 மற்றும்10 ஆம் வகுப்பில் ஆங்கிலம், இந்திக்கு தலா 50 மதிப்பெண்கள் என்று தேர்வு நடத்தலாம்.   4. எனினும், பள்ளி மாணவர்கள் அதி...

அகரம்

" அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு " ஒரு திருக்குறள் சொல்லேன் என்று யாராவது சொன்னால், நமக்கு உடனே நினைவுக்கு வருவது இந்த குறள் தான். இந்த குறளைப் பற்றி நமக்கு என்னென்ன வெல்லாம் தெரியும் என்று கொஞ்சம் பார்க்கலாமா?

ஹமுராபியின் சட்டங்கள்

நம்முடைய பள்ளிப் பாடப்புத்தகத்தில், ஹமுராபி என்ற மன்னரைப்பற்றி சில வரிகள் படித்திருப்போம். பாபிலோனின் அரசரான ஹமுராபி, அவருடைய பெருமைமிகு சட்டங்களால் வரலாற்றில் நிலைபெற்று வாழ்கிறார். இந்த உலகம் அறிந்த வரை, உலகத்தின் மிகப் பழமையான ஆவணப்படுத்தப்பட்ட சட்டங்கள், ஹமுராபியின் சட்டங்களே.

ரஜினியின் குரல் - 2

" சீருடை அணிந்த காவலர்களின் மேல் கை வைப்பது என்பது வன்முறையின் உச்சம் " இதுதான் தலைவரின் சமீபத்திய உளறல். நமக்கு எழும் முதல் கேள்வி இதுதான் : சீருடை அணியாத காவலர்கள் மேல் கை வைத்தால் பரவாயில்லையா? இந்தக் கேள்வி ஏதோ வீம்புக்காகக் கேட்கப்படுவதாகத் தோன்றலாம். இந்த நாட்டின் உண்மையான காவலர்கள், சீருடை எதுவும் அணிவதில்லை. அவர்களுக்கு, உழைப்பாளிகள், பாட்டாளிகள், விவசாயக்கூலிகள் என்று பல பெயர்கள் உள்ளன. அவர்களிடம் உறிஞ்சப்பட்ட இரத்தம்தான், சீருடை மனிதர்களுக்கும், அவர்களின் எஜமானர்களுக்கும் சம்பளம் என்ற பெயரிலும், மது எதிர்ப்பு போராட்டம் எஜமானர்களின் எஜமானர்களான கார்பரேட் முதலைகளுக்கு லாபம் என்ற பெயரிலும் பிரித்துக்கொள்ளப்படுகிறது. இப்போது சொல்லுங்கள். சீருடை அணியாத காவலர்கள் மேல் கை வைத்தால் பரவாயில்லையா? சரி. வன்முறையின் உச்சம் என்பது எது? சகல அதிகாரமும் ஆயுத பலமும் கொண்ட ஒரு கூட்டம், அப்பாவிகளின் மேல் நடத்தும் கொலை வெறித்தாக்குதலா? அல்லது எதிர் தாக்குதலா? எது வன்முறையின் உச்சம்? செம்மரம் வெட்ட வந்தார்கள் என்று சொல்லி, கூலித்தொழிலாளர்களை கொன்று சாய்த்தார்களே...அதுதான் வன்முறைய...

கமல் : இடதுசாரியா? வலதுசாரியா?

​ கமல் தன்னுடைய கட்சியின் தொடக்க நிகழ்ச்சியில், கட்சியின் கொள்கைகளை அறிவிப்பார் என்று காத்திருந்த எல்லோருமே ஏமாந்துபோனார்கள் என்றுதான் சொல்லவேண்டும். தான், ஒரு இடதுசாரியா? வலதுசாரியா? என்று  சொல்லாவிட்டாலும் பரவாயில்லை. நான், இரண்டுக்கும் 'மய்ய' த்தில் இருக்கிறேன் என்று சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்? நீங்க நல்லவரா? இல்ல கெட்டவரா? என்று கேட்டால், தெரியலையேப்பா என்று சொன்னால் ஏற்றுக்கொள்ளலாம். ' இரண்டுக்கும் நடுவானவன் ' என்று சொல்லும்போது எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்? இடதுசாரிகளின் கொள்கைகள் எவை? வலதுசாரிகள் யார்? இவர்களில் யார் நல்லவர்கள்? இந்தக் கேள்விகளுக்கான விடைகள், இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஃபிரான்சில் தொடங்குகின்றன. 1789 முதல் 1799 ஆம் ஆண்டுகளில் நடந்த ஃபிரெஞ்சுப் புரட்சியின்போது, அந்நாட்டின் அரசவையில் (இந்தியாவின் பாராளுமன்றம் போன்றது), முடியாட்சியின் பெயரிலான முதலாளித்துவ சர்வாதிகாரத்தை ஆதரித்தவர்கள் வலதுபக்க இருக்கைகளிலும், குடியரசின் மக்கள் அதிகாரத்தை ஆதரித்தவர்கள், இடது பக்க இருக்கைகளிலும் அமர்ந்திருந்தனர். இடது வலது என்ற சொல்லாடல் இ...

சிரிப்பதை நிறுத்து

கேவலம்..... மனிதக் கூட்டம் நாங்கள்.

ரஜினியின் குரல்

    " நான் வந்துட்டேன்னு சொல்லு " என்று சூப்பர் ஸ்டார் குரல் கொடுத்ததும் அரங்கமே அதிர்கிறது. என்ன காரணம்? அவரது ரசிகர்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. ஆனால், தமிழ்நாட்டு ரசிகர்களைப் பற்றி பணம் பண்ணும் கும்பல் நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறது.

வினைமுற்று விகுதி

    ஒருநாள் கலைஞர் தொலைக்காட்சியில், பேராசிரியர் சுப.வீ. அவர்கள், தான் படித்த ஒரு புத்தகத்தின் மீதான தனது மதிப்புரையை வழங்கிக்கொண்டிருந்தார். புத்தகத்தின் ஆசிரியர், தமிழில்  சில தேவையற்ற இலக்கண விதிகள் உள்ளதாகவும், மலையாளப் பேச்சு வழக்கு போல அவை மாற்றப்படவேண்டும் என்றும் எழுதியிருந்ததை பேராசிரியர் அவர்களும் ஏற்றுக்கொள்வது போல பேசியது, எனக்கு சற்றே அதிர்ச்சி ஏற்படுத்துவதாக இருந்தது. குறிப்பாக வினைமுற்று விகுதிகளைப் பற்றித்தான் பேசினார்.

உவமையணி

உவமை அணிக்கான இலக்கணம் : ஒரு பொருளை அல்லது செயலை, எடுத்துக்காட்டோடு சிறப்பாகச் சொல்வதே உவமையணி ஆகும். மேலும், உவமை அணியில் "போல" என்னும் உவம உருபு வெளிப்படையாக அமைந்திருக்கும். உவமையணி பற்றிய விளக்கத்தை, என் மகனின் பத்தாம் வகுப்பு தமிழ்க்குறிப்பேட்டில் தற்செயலாகக் கண்டேன். இனி, குறிப்பேட்டில் உள்ளபடி. கீழ்க்கண்ட குறளில் பயின்றுவரும் அணி எது? கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து அணிச்சுட்டல் :     இதில் உவமையணி பயின்று  வந்துள்ளது. அணியிலக்கணம் :     ஒரு பொருளை அதே தன்மையுடைய மற்றொரு பொருளோடு ஒப்பிட்டு கூறுவது உவமையணி எனப்படும்.    இதில் உவமை, உவமேயம், உவம உருபு வெளிப்படையாய் வரும். குறள் விளக்கம் :     வாய்ப்பற்ற காலத்தில் கொக்கைப்போல் அமைதியாக காத்திருத்தல் வேண்டும். உரிய காலம் வாய்த்ததும் கொக்கைப்போல் விரைந்து செயலைச் செய்து முடித்தல் வேண்டும். பொருத்தம் உவமானம் :         "கொக்கொக்க கூம்பும் பருவத்து"     வாய்ப்பற்ற காலத்தில் கொ...

நீட் (NEET) தேர்வு

நீட் (NEET) தேர்வு : நரியின் சாயம் வெளுத்தது ! in கல்வி, தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம், நீதிமன்றம், புதிய ஜனநாயகம், மருத்துவம் by வினவு , September 30, 2016 தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட்) தகுதியும் திறமையும் கொண்ட மாணவர்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம் என்று உச்சநீதி மன்றம் உருவாக்கிய தோற்றம், வெறும் வார்த்தை ஜாலமென்றும் மோசடியென்றும் அம்பலமாகிவிட்டது.

காஷ்மீர் இடைத்தேர்தல்

காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் பாராளுமன்ற தொகுதிக்கு 2014– ம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் ஆளும் மக்கள் ஜனநாயக கட்சி வேட்பாளராக தாரிக் ஹமீது காரா போட்டியிட்டு வெற்றி பெற்றார் . கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தை சேர்ந்த பர்கான் வானி கொல்லப்பட்டதால் காஷ்மீரில் வன்முறை வெடித்தது . இந்த வன்முறை, தொடர்ந்து பல நாட்கள் நீடித்தது . இதை தடுக்க ஆளும் கட்சி தவறியதாக கூறி தாரிக் ஹமீது காரா தன்னுடைய எம் . பி . பதவியை ராஜினாமா செய்தார் . பின்னர் அவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார் . இதையடுத்து ஸ்ரீநகர் பாராளுமன்ற தொகுதிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி இடைத்தேர்தல் நடந்தது . இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்ததாக ஊடகங்கள் மூலம் தெரிவிக்கப்பட்டது . எனினும் அதையும் மீறி பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தன . பல்வேறு இடங்களில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவங்களில் 8 பேர் பலியாகினர் . பொதுமக்கள் பலர் காயம் அடைந்தனர் . பல வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன . ஸ்ரீநகர் தொகுதியில் தொட...