முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ரஜினியின் குரல் - 2


" சீருடை அணிந்த காவலர்களின் மேல் கை வைப்பது என்பது வன்முறையின் உச்சம் " இதுதான் தலைவரின் சமீபத்திய உளறல்.
நமக்கு எழும் முதல் கேள்வி இதுதான் : சீருடை அணியாத காவலர்கள் மேல் கை வைத்தால் பரவாயில்லையா?

இந்தக் கேள்வி ஏதோ வீம்புக்காகக் கேட்கப்படுவதாகத் தோன்றலாம். இந்த நாட்டின் உண்மையான காவலர்கள், சீருடை எதுவும் அணிவதில்லை. அவர்களுக்கு, உழைப்பாளிகள், பாட்டாளிகள்,
விவசாயக்கூலிகள் என்று பல பெயர்கள் உள்ளன. அவர்களிடம் உறிஞ்சப்பட்ட இரத்தம்தான், சீருடை மனிதர்களுக்கும், அவர்களின் எஜமானர்களுக்கும் சம்பளம் என்ற பெயரிலும்,
மது எதிர்ப்பு போராட்டம்
எஜமானர்களின் எஜமானர்களான கார்பரேட் முதலைகளுக்கு லாபம் என்ற பெயரிலும் பிரித்துக்கொள்ளப்படுகிறது. இப்போது சொல்லுங்கள். சீருடை அணியாத காவலர்கள் மேல் கை வைத்தால் பரவாயில்லையா?

சரி. வன்முறையின் உச்சம் என்பது எது?
சகல அதிகாரமும் ஆயுத பலமும் கொண்ட ஒரு கூட்டம், அப்பாவிகளின் மேல் நடத்தும் கொலை வெறித்தாக்குதலா? அல்லது
எதிர் தாக்குதலா? எது வன்முறையின் உச்சம்?
செம்மரம் வெட்ட வந்தார்கள் என்று சொல்லி, கூலித்தொழிலாளர்களை கொன்று சாய்த்தார்களே...அதுதான் வன்முறையின் உச்சம்.
டாஸ்மாக் கடை வேண்டாமென்று போராடிய பெண் மீது நடுரோட்டில், பட்டப்பகலில், பேய்வெறித் தாக்குதல் நடத்தினானே...அவனுக்கும் அஜ்மல் கஸாப்புக்கும் என்ன வித்தியாசம்?
கல்லூரி மாணவி மீது குண்டர் சட்டம் ஏவினார்களே...இவர்கள் இடிஅமீனை விட நல்லவர்களா?
தனக்கோ தன் இனத்துக்கோ ஆபத்து வரும்போது, எதிர்த்துத் தாக்குவதென்பது உயிர்களின் இயற்கை நியதி. சில கால் நக்கி மனிதர்களைத் தவிர, இது எல்லா உயிர்களுக்கும் பொருந்தும்.

கடைசியாக, நாட்டுக்கே ஆபத்து என்று ஒப்பாரி வைக்கிறார். அய்யா..கன்னடத்து நாயகரே...உண்மைதான்...ஆபத்துதான்...ஆனால், நாட்டுக்கு அல்ல. உலகத்துக்கே ஆபத்து.

தேசப்பற்றின் பெயரால், மக்களின் பெயரால், மதத்தின் பெயரால், சீருடைகளின் பெயரால், வளர்ச்சியின் பெயரால், விளையாட்டின் பெயரால் மக்களை போதையில் ஆழ்த்தி, மக்கள் இரத்தத்தில் வயிறு வளர்க்கும் பண
முதலைகளின் உலகத்துக்கே ஆபத்து. உங்கள் எஜமானர்களிடம் சொல்லி கடுமையான சட்டம் போடச் சொல்லுங்கள். எப்போதாவது உங்களுக்கு உதவலாம்.
கடைசியாக ஒன்று....
புரட்சியின் தொடக்கம், அதிகாரத்தின் கண்களுக்கு வன்முறையின் உச்சமாகத்தான் தெரியும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உவமையணி

உவமை அணிக்கான இலக்கணம் : ஒரு பொருளை அல்லது செயலை, எடுத்துக்காட்டோடு சிறப்பாகச் சொல்வதே உவமையணி ஆகும். மேலும், உவமை அணியில் "போல" என்னும் உவம உருபு வெளிப்படையாக அமைந்திருக்கும். உவமையணி பற்றிய விளக்கத்தை, என் மகனின் பத்தாம் வகுப்பு தமிழ்க்குறிப்பேட்டில் தற்செயலாகக் கண்டேன். இனி, குறிப்பேட்டில் உள்ளபடி. கீழ்க்கண்ட குறளில் பயின்றுவரும் அணி எது? கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து அணிச்சுட்டல் :     இதில் உவமையணி பயின்று  வந்துள்ளது. அணியிலக்கணம் :     ஒரு பொருளை அதே தன்மையுடைய மற்றொரு பொருளோடு ஒப்பிட்டு கூறுவது உவமையணி எனப்படும்.    இதில் உவமை, உவமேயம், உவம உருபு வெளிப்படையாய் வரும். குறள் விளக்கம் :     வாய்ப்பற்ற காலத்தில் கொக்கைப்போல் அமைதியாக காத்திருத்தல் வேண்டும். உரிய காலம் வாய்த்ததும் கொக்கைப்போல் விரைந்து செயலைச் செய்து முடித்தல் வேண்டும். பொருத்தம் உவமானம் :         "கொக்கொக்க கூம்பும் பருவத்து"     வாய்ப்பற்ற காலத்தில் கொ...

வினைமுற்று விகுதி

    ஒருநாள் கலைஞர் தொலைக்காட்சியில், பேராசிரியர் சுப.வீ. அவர்கள், தான் படித்த ஒரு புத்தகத்தின் மீதான தனது மதிப்புரையை வழங்கிக்கொண்டிருந்தார். புத்தகத்தின் ஆசிரியர், தமிழில்  சில தேவையற்ற இலக்கண விதிகள் உள்ளதாகவும், மலையாளப் பேச்சு வழக்கு போல அவை மாற்றப்படவேண்டும் என்றும் எழுதியிருந்ததை பேராசிரியர் அவர்களும் ஏற்றுக்கொள்வது போல பேசியது, எனக்கு சற்றே அதிர்ச்சி ஏற்படுத்துவதாக இருந்தது. குறிப்பாக வினைமுற்று விகுதிகளைப் பற்றித்தான் பேசினார்.

அகரம்

" அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு " ஒரு திருக்குறள் சொல்லேன் என்று யாராவது சொன்னால், நமக்கு உடனே நினைவுக்கு வருவது இந்த குறள் தான். இந்த குறளைப் பற்றி நமக்கு என்னென்ன வெல்லாம் தெரியும் என்று கொஞ்சம் பார்க்கலாமா?