முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காஷ்மீர் இடைத்தேர்தல்




காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் பாராளுமன்ற தொகுதிக்கு 2014–ம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் ஆளும் மக்கள் ஜனநாயக கட்சி வேட்பாளராக தாரிக் ஹமீது காரா போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தை சேர்ந்த பர்கான் வானி கொல்லப்பட்டதால் காஷ்மீரில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறை, தொடர்ந்து பல நாட்கள் நீடித்தது. இதை தடுக்க ஆளும் கட்சி தவறியதாக கூறி தாரிக் ஹமீது காரா தன்னுடைய எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் அவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.

இதையடுத்து ஸ்ரீநகர் பாராளுமன்ற தொகுதிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்ததாக ஊடகங்கள் மூலம் தெரிவிக்கப்பட்டது. எனினும் அதையும் மீறி பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தன.
பல்வேறு இடங்களில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவங்களில் 8 பேர் பலியாகினர். பொதுமக்கள் பலர் காயம் அடைந்தனர். பல வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.

ஸ்ரீநகர் தொகுதியில் தொடர்ந்து நடந்த வன்முறை சம்பவங்களால் வாக்குப்பதிவு மிகவும் மந்தமாக இருந்தது. சுமார் 12½ லட்சம் வாக்காளர்கள் உள்ள இந்த பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் 7.14 சதவீத ஓட்டுகளே பதிவாகி இருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி சாந்தனு தெரிவித்துள்ளார்.

ஆர் கே நகரில் பணப்பட்டுவாடாவை காரணம் காட்டி தேர்தலை தள்ளிவைத்த தேர்தல் ஆணையம்,
பெரும்பான்மை மக்களால் வாக்களிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதைக் கருத்தில் கொண்டு, மறு தேர்தல் நடத்துமா?
வாக்காளர்களுக்கு பாதுகாப்பு தரமுடியாத தேர்தல் ஆணையம் கலைக்கப்படுமா?
ஒரு இடைத்தேர்தலைக்கூட நடத்த முடியாத ஜம்மு-காஷ்மீர் மாநில அரசும், ஒன்றிய அரசும் பதவி விலகுமா?
           அப்படி என்னதான் வேண்டும் காஷ்மீர் மக்களுக்கு என்று, ஒரு கருத்து கேட்பு நடத்தக்கூடாதா? மக்களின் கருத்தறியாமல் நடப்பதற்குப் பெயர் மக்களாட்சியா? சிந்திப்போமா?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உவமையணி

உவமை அணிக்கான இலக்கணம் : ஒரு பொருளை அல்லது செயலை, எடுத்துக்காட்டோடு சிறப்பாகச் சொல்வதே உவமையணி ஆகும். மேலும், உவமை அணியில் "போல" என்னும் உவம உருபு வெளிப்படையாக அமைந்திருக்கும். உவமையணி பற்றிய விளக்கத்தை, என் மகனின் பத்தாம் வகுப்பு தமிழ்க்குறிப்பேட்டில் தற்செயலாகக் கண்டேன். இனி, குறிப்பேட்டில் உள்ளபடி. கீழ்க்கண்ட குறளில் பயின்றுவரும் அணி எது? கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து அணிச்சுட்டல் :     இதில் உவமையணி பயின்று  வந்துள்ளது. அணியிலக்கணம் :     ஒரு பொருளை அதே தன்மையுடைய மற்றொரு பொருளோடு ஒப்பிட்டு கூறுவது உவமையணி எனப்படும்.    இதில் உவமை, உவமேயம், உவம உருபு வெளிப்படையாய் வரும். குறள் விளக்கம் :     வாய்ப்பற்ற காலத்தில் கொக்கைப்போல் அமைதியாக காத்திருத்தல் வேண்டும். உரிய காலம் வாய்த்ததும் கொக்கைப்போல் விரைந்து செயலைச் செய்து முடித்தல் வேண்டும். பொருத்தம் உவமானம் :         "கொக்கொக்க கூம்பும் பருவத்து"     வாய்ப்பற்ற காலத்தில் கொ...

வினைமுற்று விகுதி

    ஒருநாள் கலைஞர் தொலைக்காட்சியில், பேராசிரியர் சுப.வீ. அவர்கள், தான் படித்த ஒரு புத்தகத்தின் மீதான தனது மதிப்புரையை வழங்கிக்கொண்டிருந்தார். புத்தகத்தின் ஆசிரியர், தமிழில்  சில தேவையற்ற இலக்கண விதிகள் உள்ளதாகவும், மலையாளப் பேச்சு வழக்கு போல அவை மாற்றப்படவேண்டும் என்றும் எழுதியிருந்ததை பேராசிரியர் அவர்களும் ஏற்றுக்கொள்வது போல பேசியது, எனக்கு சற்றே அதிர்ச்சி ஏற்படுத்துவதாக இருந்தது. குறிப்பாக வினைமுற்று விகுதிகளைப் பற்றித்தான் பேசினார்.

அகரம்

" அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு " ஒரு திருக்குறள் சொல்லேன் என்று யாராவது சொன்னால், நமக்கு உடனே நினைவுக்கு வருவது இந்த குறள் தான். இந்த குறளைப் பற்றி நமக்கு என்னென்ன வெல்லாம் தெரியும் என்று கொஞ்சம் பார்க்கலாமா?