முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

சிறுகதைகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

துறவு

  துறவு - ஜெயகாந்தன் " எங்கே , போனவங்களெ இன்னங் காணலியே ....." என்று முனகிக்கொண்டே , வாசற்படியை ஒரு கையால் பற்றியவாறு , பாதித்தெருவரை உடம்பை வளைத்து நீட்டித் தெருக்கோடி வரை பார்த்தாள் பங்கஜம் அம்மாள் . அப்பொழுதுதான் அடுத்த வீட்டு வாசலில் , சேலைத் தலைப்பில் ஈரக் கையைத் துடைத்துக்கொண்டு வந்து நின்றாள் மரகதம் . " என்ன மரகதம் .... பகலெல்லாம் காணவே இல்லியே ? வேலை சாஸ்தியோ ?" என்று ஆரம்பித்தாள் பங்கஜம் . " அதெல்லாம் ஒண்ணுமில்லே அக்கா ; என்னவோ நெனப்பிலேயே நேரம் போயிடுச்சி ..." அந்த இரண்டு வீடுகளையும் இணைக்கும் அல்லது பிரிக்கும் அந்தச் சாய்வுத் திண்ணையின் இரு புறங்களிலும் இருவரும் உட்கார்ந்து கொண்டனர் . …இரண்டு பெண்கள் கூடிப் பேசுவதென்றால் அந்தப் பரஸ்பர இன்பம் அவர்களுக்கல்லவா தெரியும் ? " மணி எட்டு இருக்குமா ?" என்றாள் பங்கஜம் . " இப்பத்தானே ஏழரை அடிச்சிது ? வேலையெல்லாம் ஆச்சுதா ?..." " ஆச்சு .... வேலை ஆயி என்ன பண்றது ? ' பொழுதோட வீட்டுக்கு வந்தமா...