முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

இலக்கியம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அகரம்

" அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு " ஒரு திருக்குறள் சொல்லேன் என்று யாராவது சொன்னால், நமக்கு உடனே நினைவுக்கு வருவது இந்த குறள் தான். இந்த குறளைப் பற்றி நமக்கு என்னென்ன வெல்லாம் தெரியும் என்று கொஞ்சம் பார்க்கலாமா?

கமல் : இடதுசாரியா? வலதுசாரியா?

​ கமல் தன்னுடைய கட்சியின் தொடக்க நிகழ்ச்சியில், கட்சியின் கொள்கைகளை அறிவிப்பார் என்று காத்திருந்த எல்லோருமே ஏமாந்துபோனார்கள் என்றுதான் சொல்லவேண்டும். தான், ஒரு இடதுசாரியா? வலதுசாரியா? என்று  சொல்லாவிட்டாலும் பரவாயில்லை. நான், இரண்டுக்கும் 'மய்ய' த்தில் இருக்கிறேன் என்று சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்? நீங்க நல்லவரா? இல்ல கெட்டவரா? என்று கேட்டால், தெரியலையேப்பா என்று சொன்னால் ஏற்றுக்கொள்ளலாம். ' இரண்டுக்கும் நடுவானவன் ' என்று சொல்லும்போது எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்? இடதுசாரிகளின் கொள்கைகள் எவை? வலதுசாரிகள் யார்? இவர்களில் யார் நல்லவர்கள்? இந்தக் கேள்விகளுக்கான விடைகள், இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஃபிரான்சில் தொடங்குகின்றன. 1789 முதல் 1799 ஆம் ஆண்டுகளில் நடந்த ஃபிரெஞ்சுப் புரட்சியின்போது, அந்நாட்டின் அரசவையில் (இந்தியாவின் பாராளுமன்றம் போன்றது), முடியாட்சியின் பெயரிலான முதலாளித்துவ சர்வாதிகாரத்தை ஆதரித்தவர்கள் வலதுபக்க இருக்கைகளிலும், குடியரசின் மக்கள் அதிகாரத்தை ஆதரித்தவர்கள், இடது பக்க இருக்கைகளிலும் அமர்ந்திருந்தனர். இடது வலது என்ற சொல்லாடல் இ...

வினைமுற்று விகுதி

    ஒருநாள் கலைஞர் தொலைக்காட்சியில், பேராசிரியர் சுப.வீ. அவர்கள், தான் படித்த ஒரு புத்தகத்தின் மீதான தனது மதிப்புரையை வழங்கிக்கொண்டிருந்தார். புத்தகத்தின் ஆசிரியர், தமிழில்  சில தேவையற்ற இலக்கண விதிகள் உள்ளதாகவும், மலையாளப் பேச்சு வழக்கு போல அவை மாற்றப்படவேண்டும் என்றும் எழுதியிருந்ததை பேராசிரியர் அவர்களும் ஏற்றுக்கொள்வது போல பேசியது, எனக்கு சற்றே அதிர்ச்சி ஏற்படுத்துவதாக இருந்தது. குறிப்பாக வினைமுற்று விகுதிகளைப் பற்றித்தான் பேசினார்.

உவமையணி

உவமை அணிக்கான இலக்கணம் : ஒரு பொருளை அல்லது செயலை, எடுத்துக்காட்டோடு சிறப்பாகச் சொல்வதே உவமையணி ஆகும். மேலும், உவமை அணியில் "போல" என்னும் உவம உருபு வெளிப்படையாக அமைந்திருக்கும். உவமையணி பற்றிய விளக்கத்தை, என் மகனின் பத்தாம் வகுப்பு தமிழ்க்குறிப்பேட்டில் தற்செயலாகக் கண்டேன். இனி, குறிப்பேட்டில் உள்ளபடி. கீழ்க்கண்ட குறளில் பயின்றுவரும் அணி எது? கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து அணிச்சுட்டல் :     இதில் உவமையணி பயின்று  வந்துள்ளது. அணியிலக்கணம் :     ஒரு பொருளை அதே தன்மையுடைய மற்றொரு பொருளோடு ஒப்பிட்டு கூறுவது உவமையணி எனப்படும்.    இதில் உவமை, உவமேயம், உவம உருபு வெளிப்படையாய் வரும். குறள் விளக்கம் :     வாய்ப்பற்ற காலத்தில் கொக்கைப்போல் அமைதியாக காத்திருத்தல் வேண்டும். உரிய காலம் வாய்த்ததும் கொக்கைப்போல் விரைந்து செயலைச் செய்து முடித்தல் வேண்டும். பொருத்தம் உவமானம் :         "கொக்கொக்க கூம்பும் பருவத்து"     வாய்ப்பற்ற காலத்தில் கொ...

இந்திய வானம்

நண்பர் எஸ்.லோகநாதன், சமீபத்தில் படித்த நூலின் சிறுபகுதியை நமக்கு மின்னஞ்சல் செய்துள்ளார். அவர் அனுப்பிய செய்தி, அப்படியே தரப்படுகிறது. இந்திய வானம்-21 எஸ்.இராமகிருஷ்ண ஓவியங்கள்: ரமேஷ் ஆச்சார்யா இட்லி ஒழிக! ஒடிசாவில் உள்ள சில்கா ஏரியைக் காண்பதற் காகச் சென்றிருந்தேன். மிகப் பெரிய ஏரி அது. படகில் சென்றால் டால்பின்கள் துள்ளுவதைக் காணலாம். கடலைப்போல கண்கொள்ள முடியாத பரப்பளவு தண்ணீர் விரிந்துகிடக்கிறது. குளிர்காலத்தில் வெளிநாட்டுப் பறவைகள் இங்கே கூட்டம் கூட்டமாக வந்து சேர்கின்றன. சில்கா ஏரியில் சிறியதும் பெரியதுமாக நிறையத் தீவுகள் உள்ளன. ஒன்றில் பெரிய காளி கோயில் இருக்கிறது. காலை 10 மணி அளவில் படகில் ஏறி, மதியம் வரை சுற்றிக்கொண்டே இருந்தோம். டால்பின்கள், கண்கள் முன்னே துள்ளியோடி மறைந்தன. சில்கா ஏரி கடலில் சங்கமிக்கும் சத்படா பகுதிக்குப் போய் இறங்கி, மணலில் நடந்து சுற்றினோம். மதியம் 2:30 மணி இருக்கும். நல்ல பசி. சில்கா கெஸ்ட் ஹவுஸில் சாப்பிடச் சென்றோம். ஆட்கள் யாருமே இல்லை. காத்திருக்கவைத்து, சாப்பிடுவதற்காக ரொட்டியும் தால் மக்கனியும் கடாய் பனீரும் தந்தார்கள். அவ்வளவு நேரம் காத்தி...

ஆட்டுக்குட்டி

 சமீபத்தில், 'கெத்து'  படத்திற்கு வரிவிலக்கு அளிப்பது தொடர்பான வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்தது. கெத்து என்ற சொல் , தமிழே அல்ல என்று தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது .கெத்து என்ற சொல், திருப்புகழில் உள்ளது என்று தயாரிப்பாளர் தரப்பில் வாதிடப்பட்டது. நிறைய பிறமொழிச்சொற்கள் தமிழில் கலந்துள்ளன. அவற்றையெல்லாம் தமிழாகக்கருதமுடியாது என்று சொல்லி எடுத்துக்காட்டிற்கு மேசை என்ற சொல் அரசின் தமிழ்த்துறை  சார்பில் சொல்லப்பட்டது. கொடுமை என்னவென்றால், மேசை என்ற சொல் தூய தமிழ்ச்சொல்லாகும். சற்று உயர்ந்த இடத்தை அல்லது பகுதியை 'மிசை' என்ற வேர்ச்சொல் குறிக்கும். 'சிந்து நதியின் மிசை' என்பதில் மிசை என்பது, நதியின் அருகே உள்ள, நதியைவிட சற்று உயர்ந்த கரைப்பகுதியைக் குறிக்கும். தமிழை விட வடமொழியே சிறந்தது என்று நினைத்த ஏமாளிகள் இன்றைவிட முற்காலத்தில் அதிகம் இருந்தனர்.  அவர்கள், தேவையின்றி   ஜ, ஷ, ஸ, ஹ  போன்ற எழுத்துக்களை தமிழ்ச்சொற்களில் சேர்த்துப்பேசினர்.  அவர்கள்தான் மேசையை 'மேஜை' ஆக்கினர். சமீபத்திய தமிழ் ஆர்வலர்கள், table என்ற சொல்லுக்கு , வடமொழியில் ...

பழமொழி அறிவோம்!

1.உயர உயரப்பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.    A hog is armour but still hog. 2.சூடு கண்ட பூனை அடுப்பண்டை போகாது.    A burnt child dreads fire. 3.புயலுக்குப்பின் அமைதி.    A calm before the storm. 4.ஒரு வேலைக்கு இரு வேலை.    A work ill done must be twice done. 5.சிறு துறும்பும் பல் குத்த உதவும்.    All fish that comes to the best.

மாணவன் திறமை

மாணவன் திறமை : ஒரு மாணவனின் கல்விப்புலமை எப்போது முழுமை பெறுகிறது என்று பவணந்தி முனிவர் கீழ்க்கண்டவாறு விளக்குகிறார். “ஒருகுறி கேட்போன் இருகால் கேட்பின் பெருக நூலில் பிழைபா டிலனே”   (42) ஒரு பாடத்தை ஒருமுறைக்கு இருமுறை கேட்டவன் பெரும்பாலும் பிழையில்லாமல் கற்றுக்கொள்வான். ***** “முக்கால் கேட்பின் முறையறிந் துரைக்கும்”   (43) ஒரு பாடத்தை மூன்று முறை கேட்டவன் தான் கற்றதோடு, பிறர்க்கும் முறையோடு கற்றுத்தரும் திறமை பெறுவான். ***** “ஆசான் உரைத்தது அமைவரக் கொளினும் காற்கூ றல்லது பற்றல னாகும்”    (44) ஆசான் உரைத்ததை குற்றமறக்கற்றவன் எனினும், அவருடைய திறமையில் கால் பங்கையே பெற்றிருப்பான். அதற்கதிகமாகப்பெற முடியாது. ***** “அவ்வினை யாளரொடு பயில்வகை ஒருகால் செவ்விதின் உரைப்ப அவ்விரு காலும் மையறு புலமை மாண்புடைத் தாகும்”   (45) உடன் பயிலும் மாணவர்களோடு சேர்ந்து பயில்வதால், மேலும் கால் பங்கு அறிவு பெறுவான். தானே மற்றவர்க்கும் பாடம் சொல்லுதலால், முழுப்புலமை பெறுவான்.

இரட்டுற மொழிதல்

ஆடும் குதிரையும் கொம்புஇலையே  தீனிதின்னும்  கொண்டதன்மேல்  வெட்டுதலால் அம்புவியில்  நல்நடையது  ஆதலால் - உம்பர்களும் தேடுநல்  சோலைத்  திருமலைரா  யன்வரையில் ஆடும்  குதிரையும்நேர்  ஆம்.                                                -கவி  காளமேகம். (கி.பி. 15ஆம் நூற்றாண்டு) உம்பர்கள் - தேவர்கள் தேவர்களும் விரும்பி வரக்கூடிய, சோலைகள் நிறைந்த திருமலைராயன் மலையில் ஆடும் குதிரையும் சமமாகும். ஆடு :            நுனிக்கொம்பில் உள்ள இலைகளை இரையாகத்தின்னும். (கொம்புஇலையே  தீனி) இடையனிடமிருந்து விலைக்கு வாங்கிய பிறகு, இறைச்சிக்காக வெட்டப்படும். (தன்மேல்  வெட்டுதலால்)  நல்ல கால்நடைச்செல்வமாகும். (நல்நடையது) குதிரை :    ...

கவி காளமேகம்

வினா விடைப்பாட்டு  இரட்டுற மொழிதல் மற்றும் வஞ்சப்புகழ்ச்சி அணிகளில் செய்யுட்களைப்பாடுவதில் புகழ் பெற்றவர் காளமேகப்புலவர் என்பது, நாமனைவரும் அறிந்ததே. அதேபோல், கேட்ட கேள்விக்கு, பொட்டிலடித்ததுபோல் விடையளிப்பதிலும் அவருக்கு நிகர் அவரே. ஸ்ரீரங்கத்தில், ஒரு வைணவர், 'பெருமாள் உலகத்தை உண்டபோது, சிவன் எங்கேயிருந்தார்' என்று காளமேகரிடம் கேட்டார். அதற்கு, "அருந்தினான் அண்டம்எலாம் அன்றுமால் ஈசன் இருந்தபடி ஏதுஎன்று இயம்பப் - பொருந்திப் பருங்கவளம் யானைகொளப் பாகன்அதன் மீதே இருந்தபடி ஈசன்இருந் தான்" என்று பதில் சொன்னார். 'பெருங்கவளமாகிய உணவை யானை உட்கொள்ளும்போது, யானையின் பாகன், யானையின்மீதே அமர்ந்திருந்ததுபோன்ற நிலையில் சிவனும் இருந்தார் ' என்பது பொருள். இந்த நேரத்தில் ஒரு கதை நினைவுக்கு வருகிறது. பொன்னியின் செல்வனில், கல்கி அவர்கள், கதைக்குள் கதையாக ஒரு கதை சொல்லியிருப்பார். சைவ,வைணவச்சண்டைகள் நிறைந்த ஒரு காலத்தில், ஒரு வைணவன், சிவன் கோயில் ஓரமாகச்சென்றுகொண்டிருந்தான். அப்போது, அவன் தலையில் ஒரு கல் வந்து விழுந்தது. கோபமாக நிமிர்ந்து பார்த்தான். கோயிலின...

நன்னூல் (எழுத்ததிகாரம்)

ஆசிரியர் குறிப்பு :       தமிழின் இலக்கண நூலாகிய நன்னூலை எழுதியவர் பவணந்தி முனிவர்.     இவர் சமண சமயத்தைச்சார்ந்தவர் என்று அறியப்படுகிறது. பழங்காலத்திய தென்னாட்டுச்சமணர்களின் பெயர்கள் நந்தி என்ற சொல்லுடன் இணைந்தேயிருக்கும்.     பவணந்தி எழுதிய நன்னூல், தொல்காப்பியத்தை அடிப்படையாகக்கொண்டது. எழுத்தின் பிறப்பு :     தமிழ் எழுத்துக்கள் உச்சரிக் கப்படும்போது, அவை நம் உடலின் எந்த பாகத்திலிருந்து உற்பத்தியாகின்றன என்பதை இவ்வாறு விளக்குகிறார்.     "அவ்வழி,     ஆவி இடைமை இடமிட றாகும்     மேவு மென்மைமூக் குறம்பெறும் வன்மை"     பொருள் :     உயிரெழுத்துக்களும் ய,ர,ல,வ,ழ,ள எனும் இடையின எழுத்துக்களும் கழுத்தில் (தொண்டை)தோன்றும்.     ங,ஞ,ண,ந,ம,ன எனும் மெல்லின எழுத்துக்கள் மூக்கில் தோன்றும்.     க,ச,ட,த,ப,ற எனும் வல்லின எழுத்துக்கள் நெஞ்சிலிருந்து பிறக்கும்.     ஆயுத எழுத்து தலையில் பிறப்பெடுக்கும். ...