முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கமல் : இடதுசாரியா? வலதுசாரியா?




கமல் தன்னுடைய கட்சியின் தொடக்க நிகழ்ச்சியில், கட்சியின் கொள்கைகளை அறிவிப்பார் என்று காத்திருந்த எல்லோருமே ஏமாந்துபோனார்கள் என்றுதான் சொல்லவேண்டும். தான், ஒரு இடதுசாரியா? வலதுசாரியா? என்று  சொல்லாவிட்டாலும் பரவாயில்லை. நான், இரண்டுக்கும் 'மய்ய' த்தில் இருக்கிறேன் என்று சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்?

நீங்க நல்லவரா? இல்ல கெட்டவரா? என்று கேட்டால், தெரியலையேப்பா என்று சொன்னால் ஏற்றுக்கொள்ளலாம். ' இரண்டுக்கும் நடுவானவன் ' என்று சொல்லும்போது எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்?

இடதுசாரிகளின் கொள்கைகள் எவை? வலதுசாரிகள் யார்? இவர்களில் யார் நல்லவர்கள்?
இந்தக் கேள்விகளுக்கான விடைகள், இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஃபிரான்சில் தொடங்குகின்றன. 1789 முதல் 1799 ஆம் ஆண்டுகளில் நடந்த ஃபிரெஞ்சுப் புரட்சியின்போது, அந்நாட்டின் அரசவையில் (இந்தியாவின் பாராளுமன்றம் போன்றது), முடியாட்சியின் பெயரிலான முதலாளித்துவ சர்வாதிகாரத்தை ஆதரித்தவர்கள் வலதுபக்க இருக்கைகளிலும், குடியரசின் மக்கள் அதிகாரத்தை ஆதரித்தவர்கள், இடது பக்க இருக்கைகளிலும் அமர்ந்திருந்தனர். இடது வலது என்ற சொல்லாடல் இப்படித்தான் ஆரம்பித்தது.
கார்ல் மார்க்சும், ஃபிரெடெரிக் ஏங்கெல்சும் 1848ஆம் ஆண்டு வெளியிட்ட கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை உலகையே அதிரச்செய்தது. இடதுசாரிகளின் முற்போக்குச் சிந்தனை வளர்ச்சியின் முழுமையான இறுதி வடிவமாக கம்யூனிசம் எழுந்தது. பாட்டாளி வர்க்கத்தின் விடுதலை அல்ல. பாட்டாளி வர்க்கத்தின் அதிகாரமே இடதுசாரிகளின் இலக்கு.

மறுபக்கம், வலதுசாரிகள் நீண்ட பாரம்பரியம் கொண்டவர்கள். அவர்கள், மன்னர்களாக, பிரபுக்களாக, பெரும் பணக்காரர்களாக அறியப்பட்டார்கள். மக்கள் சிந்திக்கத் தொடங்கியபோது, கடவுளர்களையும், மறுபிறவிக் கொள்கைகளையும், மதங்களையும், குருமார்களையும் உருவாக்கினார்கள். மதங்கள் கேள்விக்குள்ளாக்கப்பட்டபோது, இறுதியாக, மக்களாட்சி என்ற சாக்லேட்டையும் கண்டுபிடித்தார்கள்.

வரலாறு இப்படி இருக்கும்போது, இவ்விரண்டு கொள்கைகளுக்கும் பொதுவாக ஒரு மனிதன் வாழவே முடியாது. எப்படி ஆள முடியும்?

தமிழ்நாட்டிலுள்ள அரசியல் விமர்சகர்களும் நியாயவாதிகள் என்று சொல்வதற்கில்லை. விஜயகாந்த் கட்சி ஆரம்பித்தபோது, அவரிடம் யாரும், நீங்கள் இடதா? வலதா? என்று கேட்கவில்லை.
நம்மக்களும் கொள்கைகளைப்பற்றி கவலைப்படுவதில்லை. தமிழகத்தில் கொள்கைதான் முக்கியம் என்றால், தோழர் நல்லக்கண்ணுவோ, சீமானோ, திருமாவளவனோ இந்நேரம் முதல்வராகியிருக்க வேண்டும். எனவே, கொள்கை என்பதே அவசியமில்லை என்று கமல் நினைத்திருப்பாரேயானால், தமிழர்கள் இன்னும் கொஞ்ச காலத்திற்கு வெட்கப்பட்டே ஆகவேண்டும்.

                             
                                    வாழிய செந்தமிழ்!
                                    வாழ்க நற்றமிழர்!!
                                    வாழிய பாரதமணித் திருநாடு!!!
                                    வாழிய வாழியவே!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உவமையணி

உவமை அணிக்கான இலக்கணம் : ஒரு பொருளை அல்லது செயலை, எடுத்துக்காட்டோடு சிறப்பாகச் சொல்வதே உவமையணி ஆகும். மேலும், உவமை அணியில் "போல" என்னும் உவம உருபு வெளிப்படையாக அமைந்திருக்கும். உவமையணி பற்றிய விளக்கத்தை, என் மகனின் பத்தாம் வகுப்பு தமிழ்க்குறிப்பேட்டில் தற்செயலாகக் கண்டேன். இனி, குறிப்பேட்டில் உள்ளபடி. கீழ்க்கண்ட குறளில் பயின்றுவரும் அணி எது? கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து அணிச்சுட்டல் :     இதில் உவமையணி பயின்று  வந்துள்ளது. அணியிலக்கணம் :     ஒரு பொருளை அதே தன்மையுடைய மற்றொரு பொருளோடு ஒப்பிட்டு கூறுவது உவமையணி எனப்படும்.    இதில் உவமை, உவமேயம், உவம உருபு வெளிப்படையாய் வரும். குறள் விளக்கம் :     வாய்ப்பற்ற காலத்தில் கொக்கைப்போல் அமைதியாக காத்திருத்தல் வேண்டும். உரிய காலம் வாய்த்ததும் கொக்கைப்போல் விரைந்து செயலைச் செய்து முடித்தல் வேண்டும். பொருத்தம் உவமானம் :         "கொக்கொக்க கூம்பும் பருவத்து"     வாய்ப்பற்ற காலத்தில் கொ...

வினைமுற்று விகுதி

    ஒருநாள் கலைஞர் தொலைக்காட்சியில், பேராசிரியர் சுப.வீ. அவர்கள், தான் படித்த ஒரு புத்தகத்தின் மீதான தனது மதிப்புரையை வழங்கிக்கொண்டிருந்தார். புத்தகத்தின் ஆசிரியர், தமிழில்  சில தேவையற்ற இலக்கண விதிகள் உள்ளதாகவும், மலையாளப் பேச்சு வழக்கு போல அவை மாற்றப்படவேண்டும் என்றும் எழுதியிருந்ததை பேராசிரியர் அவர்களும் ஏற்றுக்கொள்வது போல பேசியது, எனக்கு சற்றே அதிர்ச்சி ஏற்படுத்துவதாக இருந்தது. குறிப்பாக வினைமுற்று விகுதிகளைப் பற்றித்தான் பேசினார்.

அகரம்

" அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு " ஒரு திருக்குறள் சொல்லேன் என்று யாராவது சொன்னால், நமக்கு உடனே நினைவுக்கு வருவது இந்த குறள் தான். இந்த குறளைப் பற்றி நமக்கு என்னென்ன வெல்லாம் தெரியும் என்று கொஞ்சம் பார்க்கலாமா?