முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

கவிதைகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சிரிப்பதை நிறுத்து

கேவலம்..... மனிதக் கூட்டம் நாங்கள்.

காட்டு நதி

காட்டு நதி   இந்தப்பயணம் குறிக்கோளில்லாமல் தொடங்கியதுதான்.              --------- என்னைப்பெற்றெடுத்த புனித வயிறு, சிறு குன்றுதான் என்றாலும் எனக்கதுதான் இமயம்.            --------- காதலனுடன் ஓடிவந்த கன்னிப்பெண்ணின் பயம் கலந்த ஆர்வம், நான் ஓடிவந்தபோது எனக்குமிருந்தது. பாறைகளில் குதித்தோடி வந்த எனக்கு, மலையடிவாரம் முடிந்ததும் திசை தெரியவில்லை. சரிவுகளில் திசை திருப்பப்பட்டேன். சமவெளிகளில் மனம் போனபடி பயணம் செய்தேன். வழிதவறிய குழந்தையிடம் பரிவுகாட்டும் பெரியவரைப்போல் அந்தக்காடுகள்தான் என்னை அரவணைத்தன. யாருக்கும் வழிவிடாத காடுகள், தலவனைக்கண்ட தொண்டரைப்போல் எனக்குப் பாதை தந்தன. என் இளமை முழுதும் அந்தக் காடுகளிலேயே கழிந்தது, பால காண்டம், ஆரண்ய காண்டம் இரண்டுமே எனக்கு சுந்தர காண்டம்தான். யுத்த காண்டமும் தொடங்கியது. நான் தடுக்கப்பட்டேன். திருப்பப்பட்டேன். திருடப்ப...

காயங்கள் ஆறட்டும்

நம்மிருவருக்கும் புதிதல்ல நெருப்பு. ஒருவரையொருவர் வார்த்தைகளால் சுட்டுக்கொண்டோம். பார்வைகளால் எரித்துக்கொண்டோம். வெம்மை தாங்காமல் விலகிச்சென்றோம். பாதையில் சந்திக்க நேர்ந்தால் பழைய நினைவுகள் சுடும்.  *   *   * காதல் யாகம் செய்ததற்காக, சாதி ... நம் வீட்டுக்கூரையில் தீ வைத்தது. உன்னைக்காப்பற்ற நான் நினைத்தேன். எனவே... காதலைத்தொடர்ந்தேன். என்னைக்காப்பற்ற நீ நினைத்தாய். எனவே...உன் காதலை மறைத்தாய். அதன் பின், ஒருவரையொருவர் வார்த்தைகளால் சுட்டுக்கொண்டோம். பார்வைகளால் எரித்துக்கொண்டோம். வெம்மை தாங்காமல் விலகிச்சென்றோம். ஒருவழியாய்... நாமிருவரும் சேர்ந்து... காதலுக்குத்தீ வைத்தோம்.                                                 ...

கலை வாணியே!

மங்கல நல்வீணை        கரங்களில் ஏந்தியே  கல்வியருள் புரிவாய்        கலை வாணியே... மெய்ஞ்ஞானப் பார்வை        யொளி தினம் வீசியே.. அஞ்ஞானம் போக்கிடுவாய்        கலை வாணியே... வெண்தாமரையி லமர்ந்த        செந்தாமரையே... சான்றோர் நாவிலமர்ந்த        விண்தாமரையே... உலகொளி நீக்கி        அனைவர்க்கும் உள்ளோளி  அருள்வாய்        கலைவாணியே..!