ஒருநாள் கலைஞர் தொலைக்காட்சியில், பேராசிரியர் சுப.வீ. அவர்கள், தான் படித்த ஒரு புத்தகத்தின் மீதான தனது மதிப்புரையை வழங்கிக்கொண்டிருந்தார். புத்தகத்தின் ஆசிரியர், தமிழில்
சில தேவையற்ற இலக்கண விதிகள் உள்ளதாகவும், மலையாளப் பேச்சு வழக்கு போல அவை மாற்றப்படவேண்டும் என்றும் எழுதியிருந்ததை பேராசிரியர் அவர்களும் ஏற்றுக்கொள்வது போல பேசியது,
எனக்கு சற்றே அதிர்ச்சி ஏற்படுத்துவதாக இருந்தது. குறிப்பாக வினைமுற்று விகுதிகளைப் பற்றித்தான் பேசினார்.
எடுத்துக்காட்டாக,
' முருகன் வந்தான் '
என்று தமிழில் சொல்லப்படுவதை, மலையாளத்தில்,
' முருகன் வந்நு ' ( ' வந்து ' அல்ல )
என்று சொல்கிறார்கள். வாக்கியத்தின் முதலிலேயே ஓர் ஆண்மகனைப்பற்றிய செய்தி என்று முடிவு செய்யப்பட்டுவிட்டது. பிறகு, வினைச்சொல்லிலும் ' ஆன் ' எனும் ஆண்பால்
வினைமுற்று விகுதி தேவையா? என்பது அவர்களது கேள்வி. அவர்களது கருத்தை ஏற்றுக்கொண்டாலும் எப்படி நடைமுறைப்படுத்துவது?
' முருகன் வந்து '
என்று எழுதினால் ' வினையெச்சம் ' ஆகத்தான் இருக்கும்.
' பாலபாரதி வந்நு '
என்று மலையாளத்தில் சொல்லும்போது, பாலபாரதி என்பவர் ஆணா? பெண்ணா? என்று கேள்வி எழுகிறது.
' முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி வந்நு '
என்று விளக்கமாகக் கூறினால் பாதித் தமிழ்நாட்டிற்குத் தெரியும். மேலும், பாலபாரதி என்பவர் ஒரு பெண் என்ற காரணத்திற்காக,
' பாலபாரதி வந்தாள் '
என்று நாம் சொல்வதில்லை. ' அர் ' என்ற பலர்பால் வினைமுற்று விகுதியைப் பயன்படுத்தி ' வந்தார் ' என்று மரியாதையாய்ச் சொல்கிறோம்.
பெரியார், சில தொண்டர்களின் குழந்தைகளுக்கு ஜெர்மனி, மாஸ்கோ என்றெல்லாம் பெயர் வைத்ததாகச் சொல்வார்கள்.
' ஜெர்மனி பாடினான் '
' மாஸ்கோ ஆடினாள் '
என்று தெளிவாகச் சொன்னால்தான் செய்தி முழுமையடைகிறது.
ஒரு வகுப்பில், பிரசன்னா என்ற மாணவன் இருக்கிறான். பிரசன்னா என்ற மாணவியும் இருக்கிறாள். ஒருநாள், தலைமை ஆசிரியர், வகுப்பாசிரியரிடம் கேட்கிறார், "பிரசன்னா வந்நா?".
இப்போது ஆசிரியர் பதில் சொல்வாரா? அல்லது ' எந்த பிரசன்னா? ' என்று கேள்வி கேட்பாரா?
மேலும், வினைமுற்று விகுதி என்பது, ஆணா? பெண்ணா? என்று மட்டும் தெரிவிக்கவில்லை.
தன்மை, முன்னிலை மற்றும் படர்க்கை என்று மூன்று இடங்களையும் ( first person, second person and third person ),
ஒருமை மற்றும் பன்மையையும் ( singular and plural ),
ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் எனும் ஐவகைப் பாலினங்களையும்
ஒரேயொரு விகுதியில் விளக்கமாகச் சொல்லிவிடமுடியும்.
புத்தக ஆசிரியரை பாராட்டுவதற்காகவே, பேராசிரியர் சுப.வீ. அவர்கள் அவ்வாறு பேசியிருப்பார் என்பதைப் புரிந்துகொள்ளமுடிகிறது. எனினும், தவறான கருத்தை ஆதரிப்பது, தமிழுக்கு அழகல்ல. ஆபத்து.
இறுதியாய் ஒரு செய்தி...
தங்கள் மேலான கருத்துக்களை எதிர்நோக்குகிறேன்.
நன்றி!
சில தேவையற்ற இலக்கண விதிகள் உள்ளதாகவும், மலையாளப் பேச்சு வழக்கு போல அவை மாற்றப்படவேண்டும் என்றும் எழுதியிருந்ததை பேராசிரியர் அவர்களும் ஏற்றுக்கொள்வது போல பேசியது,
எனக்கு சற்றே அதிர்ச்சி ஏற்படுத்துவதாக இருந்தது. குறிப்பாக வினைமுற்று விகுதிகளைப் பற்றித்தான் பேசினார்.
எடுத்துக்காட்டாக,
' முருகன் வந்தான் '
என்று தமிழில் சொல்லப்படுவதை, மலையாளத்தில்,
' முருகன் வந்நு ' ( ' வந்து ' அல்ல )
என்று சொல்கிறார்கள். வாக்கியத்தின் முதலிலேயே ஓர் ஆண்மகனைப்பற்றிய செய்தி என்று முடிவு செய்யப்பட்டுவிட்டது. பிறகு, வினைச்சொல்லிலும் ' ஆன் ' எனும் ஆண்பால்
வினைமுற்று விகுதி தேவையா? என்பது அவர்களது கேள்வி. அவர்களது கருத்தை ஏற்றுக்கொண்டாலும் எப்படி நடைமுறைப்படுத்துவது?
' முருகன் வந்து '
என்று எழுதினால் ' வினையெச்சம் ' ஆகத்தான் இருக்கும்.
' பாலபாரதி வந்நு '
என்று மலையாளத்தில் சொல்லும்போது, பாலபாரதி என்பவர் ஆணா? பெண்ணா? என்று கேள்வி எழுகிறது.
' முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி வந்நு '
என்று விளக்கமாகக் கூறினால் பாதித் தமிழ்நாட்டிற்குத் தெரியும். மேலும், பாலபாரதி என்பவர் ஒரு பெண் என்ற காரணத்திற்காக,
' பாலபாரதி வந்தாள் '
என்று நாம் சொல்வதில்லை. ' அர் ' என்ற பலர்பால் வினைமுற்று விகுதியைப் பயன்படுத்தி ' வந்தார் ' என்று மரியாதையாய்ச் சொல்கிறோம்.
பெரியார், சில தொண்டர்களின் குழந்தைகளுக்கு ஜெர்மனி, மாஸ்கோ என்றெல்லாம் பெயர் வைத்ததாகச் சொல்வார்கள்.
' ஜெர்மனி பாடினான் '
' மாஸ்கோ ஆடினாள் '
என்று தெளிவாகச் சொன்னால்தான் செய்தி முழுமையடைகிறது.
ஒரு வகுப்பில், பிரசன்னா என்ற மாணவன் இருக்கிறான். பிரசன்னா என்ற மாணவியும் இருக்கிறாள். ஒருநாள், தலைமை ஆசிரியர், வகுப்பாசிரியரிடம் கேட்கிறார், "பிரசன்னா வந்நா?".
இப்போது ஆசிரியர் பதில் சொல்வாரா? அல்லது ' எந்த பிரசன்னா? ' என்று கேள்வி கேட்பாரா?
மேலும், வினைமுற்று விகுதி என்பது, ஆணா? பெண்ணா? என்று மட்டும் தெரிவிக்கவில்லை.
தன்மை, முன்னிலை மற்றும் படர்க்கை என்று மூன்று இடங்களையும் ( first person, second person and third person ),
ஒருமை மற்றும் பன்மையையும் ( singular and plural ),
ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் எனும் ஐவகைப் பாலினங்களையும்
ஒரேயொரு விகுதியில் விளக்கமாகச் சொல்லிவிடமுடியும்.
புத்தக ஆசிரியரை பாராட்டுவதற்காகவே, பேராசிரியர் சுப.வீ. அவர்கள் அவ்வாறு பேசியிருப்பார் என்பதைப் புரிந்துகொள்ளமுடிகிறது. எனினும், தவறான கருத்தை ஆதரிப்பது, தமிழுக்கு அழகல்ல. ஆபத்து.
இறுதியாய் ஒரு செய்தி...
" நன்கு வரையறுக்கப்பட்டதைத்தான் அறிவியல் ஏற்றுக்கொள்ளும் "
தங்கள் மேலான கருத்துக்களை எதிர்நோக்குகிறேன்.
நன்றி!
கருத்துகள்
கருத்துரையிடுக