முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பல்சுவை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்தியாவின் முதல் ஐந்தாண்டுத் திட்டம்: வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான அடித்தளம்

ஜவஹர்லால் நேரு 1951 இல் தொடங்கப்பட்ட இந்தியாவின் முதல் ஐந்தாண்டுத் திட்டம், நாட்டின் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்தை நோக்கிய பயணத்தில் குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியது. உயரிய கொள்கைகளை நோக்கிய இத்தகைய திட்டம் புதிதாக சுதந்திரம் பெற்ற நாடு எதிர்கொள்ளும் அழுத்தமான சவால்களை எதிர்கொள்ளவும், நவீன, தன்னிறைவு மற்றும் வளமான தேசமாக மாற்றுவதற்கான அடித்தளத்தை அமைக்கவும் வடிவமைக்கப்பட்டது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் வழிகாட்டுதலின் கீழ் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், வறுமையைப் போக்குவதற்கும், தொழில்மயமாக்கலை அதிகரிப்பதற்கும், குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் இலக்காகக் கொண்ட தொடர்ச்சியான முன்முயற்சிகள் மற்றும் கொள்கைகளை கொண்டிருந்தது. இந்தியாவின் முதல் ஐந்தாண்டுத் திட்டத்தின் நோக்கங்கள், சாதனைகள் மற்றும் எல்லைகளை ஆழமாக ஆராய்வோம். முதல் ஐந்தாண்டுத் திட்டத்தின் நோக்கங்கள் விவசாய வளர்ச்சி இந்தியாவின் மக்கள் தொகையில் கணிசமான பகுதியினர் தங்கள் வாழ்வாதாரத்திற்காக விவசாயத்தை நம்பியிருந்தனர். முதல் ஐந்தாண்டுத் திட்டத்தின் முதன்மை இலக்கு விவசாய வளர்ச்சியை ஊக்குவிப்பது...

கல்விக் கொள்கை ஆலோசனைகள்

   மதிப்பிற்குரிய சான்றோர்களுக்கு வணக்கம். நம் மாநிலத்தின் பள்ளிக் கொள்கைகளுக்காக, என்னுடைய நீண்ட நாள் கனவுகளை, என்னுடைய ஆலோசனைகளாகத் தெரிவிக்கிறேன்.  1.கணிதம், அறிவியல், சமூக அறிவியல், ஆகிய பாடங்கள் மூன்றாம் வகுப்பு முதல் ஆங்கில வழியில் கற்பிக்கப்பட வேண்டும். தமிழில் கற்பிக்க முடியும் என்றாலும் தமிழ்நாட்டுக்கு வெளியே என்ன பலன் கிடைத்துவிடும்?   2. ஐந்தாம் வகுப்பு முதல் ஆங்கில மொழியுடன் இந்திமொழியும் அறிமுகம் செய்யப்பட வேண்டும். 10 முதல் 25 மதிப்பெண்கள் இந்திக்கு என்று அளிக்கலாம். இதன் மூலம் ஒன்றிய அரசிலும் ஒன்றிய அரசின் வேலைவாய்ப்புகளிலும் தமிழர்கள் கோலோச்ச முடியும். இந்தி ஆசிரியர்கள் கட்டாயம் தமிழ் இலக்கணம் அறிந்திருக்க வேண்டும். அரசியல் கட்சிகள் கட்டாயம் எதிர்ப்பார்கள். ஆனால், மக்கள் கண்டிப்பாக மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வார்கள்.   3. மற்ற பாடங்கள் ஆங்கிலத்தில் நடத்தப்படுவதால் இயற்கையாகவே ஆங்கில அறிவு கிடைத்துவிடும். எனவே, 9 மற்றும்10 ஆம் வகுப்பில் ஆங்கிலம், இந்திக்கு தலா 50 மதிப்பெண்கள் என்று தேர்வு நடத்தலாம்.   4. எனினும், பள்ளி மாணவர்கள் அதி...

மாணவர்களுக்கு கணிதம்

தமிழ் நாட்டுப் பள்ளி மாணவர்களுக்கு கணிதம் கற்றுத்தரும் எண்ணிலடங்கா சேனல்கள் ( You Tube Channels) யூ ட்யூபில் காணக்கிடைக்கின்றன. அவற்றில் ஒன்று, Fun Maths .

அகரம்

" அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு " ஒரு திருக்குறள் சொல்லேன் என்று யாராவது சொன்னால், நமக்கு உடனே நினைவுக்கு வருவது இந்த குறள் தான். இந்த குறளைப் பற்றி நமக்கு என்னென்ன வெல்லாம் தெரியும் என்று கொஞ்சம் பார்க்கலாமா?

ஹமுராபியின் சட்டங்கள்

நம்முடைய பள்ளிப் பாடப்புத்தகத்தில், ஹமுராபி என்ற மன்னரைப்பற்றி சில வரிகள் படித்திருப்போம். பாபிலோனின் அரசரான ஹமுராபி, அவருடைய பெருமைமிகு சட்டங்களால் வரலாற்றில் நிலைபெற்று வாழ்கிறார். இந்த உலகம் அறிந்த வரை, உலகத்தின் மிகப் பழமையான ஆவணப்படுத்தப்பட்ட சட்டங்கள், ஹமுராபியின் சட்டங்களே.

கமல் : இடதுசாரியா? வலதுசாரியா?

​ கமல் தன்னுடைய கட்சியின் தொடக்க நிகழ்ச்சியில், கட்சியின் கொள்கைகளை அறிவிப்பார் என்று காத்திருந்த எல்லோருமே ஏமாந்துபோனார்கள் என்றுதான் சொல்லவேண்டும். தான், ஒரு இடதுசாரியா? வலதுசாரியா? என்று  சொல்லாவிட்டாலும் பரவாயில்லை. நான், இரண்டுக்கும் 'மய்ய' த்தில் இருக்கிறேன் என்று சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்? நீங்க நல்லவரா? இல்ல கெட்டவரா? என்று கேட்டால், தெரியலையேப்பா என்று சொன்னால் ஏற்றுக்கொள்ளலாம். ' இரண்டுக்கும் நடுவானவன் ' என்று சொல்லும்போது எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்? இடதுசாரிகளின் கொள்கைகள் எவை? வலதுசாரிகள் யார்? இவர்களில் யார் நல்லவர்கள்? இந்தக் கேள்விகளுக்கான விடைகள், இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஃபிரான்சில் தொடங்குகின்றன. 1789 முதல் 1799 ஆம் ஆண்டுகளில் நடந்த ஃபிரெஞ்சுப் புரட்சியின்போது, அந்நாட்டின் அரசவையில் (இந்தியாவின் பாராளுமன்றம் போன்றது), முடியாட்சியின் பெயரிலான முதலாளித்துவ சர்வாதிகாரத்தை ஆதரித்தவர்கள் வலதுபக்க இருக்கைகளிலும், குடியரசின் மக்கள் அதிகாரத்தை ஆதரித்தவர்கள், இடது பக்க இருக்கைகளிலும் அமர்ந்திருந்தனர். இடது வலது என்ற சொல்லாடல் இ...

ரஜினியின் குரல்

    " நான் வந்துட்டேன்னு சொல்லு " என்று சூப்பர் ஸ்டார் குரல் கொடுத்ததும் அரங்கமே அதிர்கிறது. என்ன காரணம்? அவரது ரசிகர்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. ஆனால், தமிழ்நாட்டு ரசிகர்களைப் பற்றி பணம் பண்ணும் கும்பல் நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறது.

உவமையணி

உவமை அணிக்கான இலக்கணம் : ஒரு பொருளை அல்லது செயலை, எடுத்துக்காட்டோடு சிறப்பாகச் சொல்வதே உவமையணி ஆகும். மேலும், உவமை அணியில் "போல" என்னும் உவம உருபு வெளிப்படையாக அமைந்திருக்கும். உவமையணி பற்றிய விளக்கத்தை, என் மகனின் பத்தாம் வகுப்பு தமிழ்க்குறிப்பேட்டில் தற்செயலாகக் கண்டேன். இனி, குறிப்பேட்டில் உள்ளபடி. கீழ்க்கண்ட குறளில் பயின்றுவரும் அணி எது? கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து அணிச்சுட்டல் :     இதில் உவமையணி பயின்று  வந்துள்ளது. அணியிலக்கணம் :     ஒரு பொருளை அதே தன்மையுடைய மற்றொரு பொருளோடு ஒப்பிட்டு கூறுவது உவமையணி எனப்படும்.    இதில் உவமை, உவமேயம், உவம உருபு வெளிப்படையாய் வரும். குறள் விளக்கம் :     வாய்ப்பற்ற காலத்தில் கொக்கைப்போல் அமைதியாக காத்திருத்தல் வேண்டும். உரிய காலம் வாய்த்ததும் கொக்கைப்போல் விரைந்து செயலைச் செய்து முடித்தல் வேண்டும். பொருத்தம் உவமானம் :         "கொக்கொக்க கூம்பும் பருவத்து"     வாய்ப்பற்ற காலத்தில் கொ...

காவலர் தேர்வு

சில நாட்களுக்கு முன் தினத்தந்தி நாளிதழில், காவலர் தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் வெளியாகியிருந்தன. அதில், கீழ்க்கண்ட வினா ஒன்று இடம் பெற்றிருந்தது. கேள்வி : ஒரு தேர்வில், வினாத்தாளில் 90 கேள்விகள் இடம் பெற்றுள்ளன. அனைத்து கேள்விகளுக்கும் கட்டாயம் பதிலளிக்கவேண்டும். ஒவ்வொரு சரியான பதிலுக்கும் 2 மதிப்பெண்கள் வழங்கப்படும். ஒவ்வொரு தவறான பதிலுக்கும் 3 மதிப்பெண்கள் கழிக்கப்படும். தேர்வை எழுதிய ஒரு மாணவன், 15 மதிப்பெண்கள் பெறுகிறான் எனில், அந்த மாணவன் எத்தனை கேள்விகளுக்கு சரியான விடையளித்திருப்பான்? இந்தக்கேள்விக்கு விடையாக 4 வாய்ப்புகள் (options) வழங்கப்பட்டிருந்தன. அந்த வாய்ப்புகளைக் கொண்டு சிற்சில மனக்கணக்குகளோடு, விடையை யூகித்து எழுதமுடியலாம். வாய்ப்புகள் ஏதுமின்றி, எங்கள் வீட்டின் உரிமையாளர், திரு. ஸ்ரீநிவாசன் எவ்வாறு விடையைக் கண்டுபிடித்தார்? முதலில், சரியான விடைகள்= 60 என்றால், தவறானவை = 30                             ...

ரசம் - செய்முறை

சிட்டம்மா ரசம் வைக்கிறதையே கொட்டக் கொட்டப்பாத்துக்கிட்டிருக்கா எமிலி. எப்பிடியாச்சும் அந்த 'சூப்பு' வைக்கிற சூத்திரத்தக் கண்டுபுடிச்சாகணும் அவளுக்கு. இடுப்புல கொசுவத்த இழுத்துச் சொருகி ஆரம்பிச்சிட்டா சிட்டம்மா. குத்துச் சொம்புல தண்ணி ஊத்தி ஒரு புடிச்சபுளி எடுத்து, ஒரு தக்காளியும் சேத்துக் கரகரன்னு கரைச்சு ஊற வச்சா. அதுல உப்புத்தூளை அள்ளி எறிஞ்சா. அதத் துண்டா எடுத்துத் தூர வச்சுட்டா. மிளகு சீரகம் ரெண்டையும் அம்மில வச்சு நச்சு நச்சுன்னு நசுக்குனா. பள்ளிக்கூடத்துல வாத்தியாரு தன் பிள்ளைய அடிக்கிறமாதிரி, வெள்ளைப் பூண்டைத் தட்டியும் தட்டாம வச்சுக்கிட்டா. மூணையுமமொண்ணு சேத்தா. வடச்சட்டியில கடலெண்ணைய ஊத்தி எளஞ்சூட்டுல சுட வச்சா. கடுகு உளுந்தம்பருப்பு ரெண்டையும் எடுத்து எறிஞ்சா கொதிக்கிற எண்ணை மேல. அதுக சட்டுபுட்டுன்னு வெடிச்சு சட்டிக்குள்ள தீபாவளி கொண்டாடுதுக. இப்ப... கிள்ளி வச்ச பட்டமொளகாயும் கருவேப்பிலையும் போட்டுச் செல்லமா வதக்குனா. நான் கறுப்பாப் போகப் போறேன்னு கருவேப்பிலை சொன்னடும் நிறுத்திட்டா. நசுக்கி வச்ச மிளகு சீரகம் பூண்டு மூணையும் இப்ப உள்ள போட்டா. அட்டத்துல நின்னு எல...

வேலைக்காரன் - வேளக்காரன்

வேலைக்காரன் காதலா காதலா என்ற திரைப்படத்தில், கமல்ஹாசன், "முருகர் கையில்கூடத்தான் வேல் இருக்கிறது. அதனால் அவரை வேலக்காரன் (வேலைக்காரன்) என்று சொல்ல முடியுமா?" என்று கேட்பதாக ஒரு வசனம் வரும். பாரதி போன்ற கவியுள்ளங்கொண்ட மெய்யன்பர்களுக்கு வேண்டுமானால் கண்ணன் போன்ற கடவுளரும் சேவகராகலாம். நம்மைப்போன்ற சாதாரணர், முருகனை வேலைக்காரன் என்று சொல்ல முடியுமா? கண்டிப்பாக முடியாது. ஆனால், வேளக்காரன் என்று சொல்லலாம். எப்படி? வேளக்காரன் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், தஞ்சாவூரில், ஓரிரவுப்பொழுதில், கோட்டையின் பிரதான வாசலில் ஆதித்தகரிகாலனின் தூதன் வந்தியத்தேவன் கோட்டையை நோட்டம் பார்த்தபடி நின்றுகொண்டிருந்தான். அப்போது, வாசல் வழியே, புழுதியைக்கிளப்பிக்கொண்டு ஒரு குதிரைப்படை, புயல்போல் வெளியேறியது. குதிரை மேலிருந்த வீரர்கள் ஏக களேபரம் செய்தபடி வந்தனர். மரியாதையோடு வீதியின் ஓரமாய் நின்ற மக்களிடம் வம்பிழுத்தபடியும், கடைகளில் இருந்த பொருட்களையெடுத்து விளையாண்டும், வீணடித்தும், கேலியும் கிண்டலுமாய் சத்தம் செய்துகொண்டும் சென்றனர். இத்தனைக்கும், அவர்கள் பேரில் தஞ்சை மக்களுக்கு எந்தக்கோபமும் ஏற்பட...

வாசுகி உமாநாத்

வாசுகி உமாநாத் உங்களில் எத்தனை பேருக்கு வாசுகி உமாநாத்தைத்தெரியும்? பெண்ணியம் தொடர்பான தொலைக்காட்சி விவாதங்களில் கலந்துகொண்டு, கருத்துக்களைத்தெளிவாகவும், ஆணித்தரமாகவும் எடுத்துவைப்பதில் வல்லவர். அவரைப்பற்றி தெரிந்துகொண்டு உங்களுக்கு என்ன பயன் கிடைக்கப்போகிறதென்று எனக்குத்தெரியாது. ஆனால், தொலைக்காட்சியில் அவரைப்பார்க்கும்போது, என் நினைவுகள் என்னைப்பின்னோக்கி அழைத்துச்செல்வதைப்பற்றி, எழுதியே ஆகவேண்டும்.  1980 ஆம் ஆண்டு (என்று நினைக்கிறேன்) நடைபெற்ற சட்டமன்றத்தேர்தலில் CPI(M) சார்பாக வாசுகி உமாநாத்தின் தந்தை, திரு R.உமாநாத் அவர்கள்  எங்கள் நாகப்பட்டினம் சட்டமன்றத்தொகுதியில் போட்டியிட்டார். அப்போது, நாங்கள் வசித்த வடக்கு நல்லியான் தோட்டத்திற்கு, பிரச்சாரத்திற்கு வந்திருந்தார் வாசுகி அவர்கள். தெற்கு நல்லியான் தோட்டம் என்பது, ஒரு முழுத்தெரு, ஒரு குறுக்குத்தெரு, ஒரு குறுக்குச்சந்து. வடக்கு நல்லியான் தோட்டம் என்பது, ஒன்னரைத்தெரு, ஒரு குறுக்குச்சந்து, மகம் ரோட்டின் தெற்கு ஓரம். ஆஸ்பத்திரி ரோட்டின் கிழக்கு ஓரம், இரண்டுக்கும் பொதுவானது. ஒருநாள்,மேல்பகுதி மூடப்படாத ...