முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காவலர் தேர்வு



சில நாட்களுக்கு முன் தினத்தந்தி நாளிதழில், காவலர் தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் வெளியாகியிருந்தன. அதில், கீழ்க்கண்ட வினா ஒன்று இடம் பெற்றிருந்தது.
கேள்வி :
ஒரு தேர்வில், வினாத்தாளில் 90 கேள்விகள் இடம் பெற்றுள்ளன.
அனைத்து கேள்விகளுக்கும் கட்டாயம் பதிலளிக்கவேண்டும்.
ஒவ்வொரு சரியான பதிலுக்கும் 2 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
ஒவ்வொரு தவறான பதிலுக்கும் 3 மதிப்பெண்கள் கழிக்கப்படும்.
தேர்வை எழுதிய ஒரு மாணவன், 15 மதிப்பெண்கள் பெறுகிறான் எனில், அந்த மாணவன் எத்தனை கேள்விகளுக்கு சரியான விடையளித்திருப்பான்?
இந்தக்கேள்விக்கு விடையாக 4 வாய்ப்புகள் (options) வழங்கப்பட்டிருந்தன. அந்த வாய்ப்புகளைக் கொண்டு சிற்சில மனக்கணக்குகளோடு, விடையை யூகித்து எழுதமுடியலாம்.
வாய்ப்புகள் ஏதுமின்றி, எங்கள் வீட்டின் உரிமையாளர், திரு. ஸ்ரீநிவாசன் எவ்வாறு விடையைக் கண்டுபிடித்தார்?
முதலில், சரியான விடைகள்= 60 என்றால், தவறானவை = 30
                                60 * 2 = 120
                           30 * 3 =  90
                         120 – 90 =  30 > பெற்ற மதிப்பெண்கள்
சரியான விடைகள்= 55 என்றால், தவறானவை = 35
                                55 * 2 = 110
                           35 * 3 = 105
                         110 – 105 =  5 < பெற்ற மதிப்பெண்கள்
, சரியான விடைகள்= 57 என்றால், தவறானவை = 33
                                57 * 2 = 114
                           33 * 3 =  99
                         114 – 99 =  15 = பெற்ற மதிப்பெண்கள்
நுழைவுத்தேர்வு எழுத இதுபோன்ற முறைகள் சில நேரங்களில் கை கொடுக்கும். எல்லா நேரங்களிலும் அல்ல.
எடுத்துக்காட்டாக,
ராமுவும் சோமுவும் இந்தியாவைச் சுற்றிவருவதற்காக, திட்டமிடப்பட்ட ஒரே பாதையில் ஆளுக்கொரு மிதிவண்டியில் ஒரே நாளில் கிளம்புகின்றனர். ராமு, ஒரு நாளைக்கு 30 கி.மீ என்ற வேகத்தில் செல்கிறான். சோமுவோ, முதல் நாள் ஒரு கி.மீ மட்டுமே செல்கிறான். அடுத்தநாள், அவனுடைய வேகம் 2 கி.மீ / நாள். மூன்றாவது நாள், 3 கி.மீ / நாள். இவ்வாறு அவனுடைய வேகம், ஒவ்வொரு கிலோமீட்டராக அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
கேள்வி இதுதான். சோமு, ராமுவைத்தொடுவானா? எத்தனையாவது நாளில், எத்தனையாவது கிலோமீட்டரில் சந்திப்பு நிகழும்? திரு. ஸ்ரீநிவாசன் அவர்கள் எத்தனை நாட்களில் விடையை கண்டுபிடிப்பார்?
நாம் மீண்டும் முதல் கணக்குக்கே வருவோம்.
மாணவன் எழுதிய சரியான விடைகள் = X என்போம்
 தவறான விடைகள் = Y என்போம்
X + Y    = 90----------------------( 1 )
சரியான விடைகளுக்கான மதிப்பெண்கள் = 2X
தவறான விடைகளுக்கான மதிப்பெண்கள் = 3Y
அதாவது,
 2X - 3Y = 15-----------------( 2 )
 X  + Y = 90-----------------( 1 )
( 1 ) * 2-----à         2X  +2Y = 180-----------------( 3 )
( 2 ) * 1-----à         2X - 3Y = 15---------------( 4 )
( 3 ) – ( 4 ) --------à          5Y = 165
                           Y = 165 / 5
                             = 33
தவறான விடைகள் = 33
சரியான விடைகள் = 90 – 33 = 57

மிதிவண்டி கணக்குக்கான விடையை மற்றுமொரு பதிவில் காணலாம்.
                            வாழ்த்துக்கள் !!
குறிப்பு : தற்போது காவலராயிருக்கும் எத்தனை பேருக்கு இது போன்ற கணக்குகள் இருப்பது தெரியும்?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உவமையணி

உவமை அணிக்கான இலக்கணம் : ஒரு பொருளை அல்லது செயலை, எடுத்துக்காட்டோடு சிறப்பாகச் சொல்வதே உவமையணி ஆகும். மேலும், உவமை அணியில் "போல" என்னும் உவம உருபு வெளிப்படையாக அமைந்திருக்கும். உவமையணி பற்றிய விளக்கத்தை, என் மகனின் பத்தாம் வகுப்பு தமிழ்க்குறிப்பேட்டில் தற்செயலாகக் கண்டேன். இனி, குறிப்பேட்டில் உள்ளபடி. கீழ்க்கண்ட குறளில் பயின்றுவரும் அணி எது? கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து அணிச்சுட்டல் :     இதில் உவமையணி பயின்று  வந்துள்ளது. அணியிலக்கணம் :     ஒரு பொருளை அதே தன்மையுடைய மற்றொரு பொருளோடு ஒப்பிட்டு கூறுவது உவமையணி எனப்படும்.    இதில் உவமை, உவமேயம், உவம உருபு வெளிப்படையாய் வரும். குறள் விளக்கம் :     வாய்ப்பற்ற காலத்தில் கொக்கைப்போல் அமைதியாக காத்திருத்தல் வேண்டும். உரிய காலம் வாய்த்ததும் கொக்கைப்போல் விரைந்து செயலைச் செய்து முடித்தல் வேண்டும். பொருத்தம் உவமானம் :         "கொக்கொக்க கூம்பும் பருவத்து"     வாய்ப்பற்ற காலத்தில் கொ...

வினைமுற்று விகுதி

    ஒருநாள் கலைஞர் தொலைக்காட்சியில், பேராசிரியர் சுப.வீ. அவர்கள், தான் படித்த ஒரு புத்தகத்தின் மீதான தனது மதிப்புரையை வழங்கிக்கொண்டிருந்தார். புத்தகத்தின் ஆசிரியர், தமிழில்  சில தேவையற்ற இலக்கண விதிகள் உள்ளதாகவும், மலையாளப் பேச்சு வழக்கு போல அவை மாற்றப்படவேண்டும் என்றும் எழுதியிருந்ததை பேராசிரியர் அவர்களும் ஏற்றுக்கொள்வது போல பேசியது, எனக்கு சற்றே அதிர்ச்சி ஏற்படுத்துவதாக இருந்தது. குறிப்பாக வினைமுற்று விகுதிகளைப் பற்றித்தான் பேசினார்.

அகரம்

" அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு " ஒரு திருக்குறள் சொல்லேன் என்று யாராவது சொன்னால், நமக்கு உடனே நினைவுக்கு வருவது இந்த குறள் தான். இந்த குறளைப் பற்றி நமக்கு என்னென்ன வெல்லாம் தெரியும் என்று கொஞ்சம் பார்க்கலாமா?