முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ரசம் - செய்முறை



சிட்டம்மா ரசம் வைக்கிறதையே கொட்டக் கொட்டப்பாத்துக்கிட்டிருக்கா எமிலி. எப்பிடியாச்சும் அந்த 'சூப்பு' வைக்கிற சூத்திரத்தக் கண்டுபுடிச்சாகணும் அவளுக்கு.

இடுப்புல கொசுவத்த இழுத்துச் சொருகி ஆரம்பிச்சிட்டா சிட்டம்மா. குத்துச் சொம்புல தண்ணி ஊத்தி ஒரு புடிச்சபுளி எடுத்து, ஒரு தக்காளியும் சேத்துக் கரகரன்னு கரைச்சு ஊற வச்சா. அதுல உப்புத்தூளை அள்ளி எறிஞ்சா. அதத் துண்டா எடுத்துத் தூர வச்சுட்டா. மிளகு சீரகம் ரெண்டையும் அம்மில வச்சு நச்சு நச்சுன்னு நசுக்குனா. பள்ளிக்கூடத்துல வாத்தியாரு தன் பிள்ளைய அடிக்கிறமாதிரி, வெள்ளைப் பூண்டைத் தட்டியும் தட்டாம வச்சுக்கிட்டா. மூணையுமமொண்ணு சேத்தா. வடச்சட்டியில கடலெண்ணைய ஊத்தி எளஞ்சூட்டுல சுட வச்சா. கடுகு உளுந்தம்பருப்பு ரெண்டையும் எடுத்து எறிஞ்சா கொதிக்கிற எண்ணை மேல. அதுக சட்டுபுட்டுன்னு வெடிச்சு சட்டிக்குள்ள தீபாவளி கொண்டாடுதுக. இப்ப... கிள்ளி வச்ச பட்டமொளகாயும் கருவேப்பிலையும் போட்டுச் செல்லமா வதக்குனா. நான் கறுப்பாப் போகப் போறேன்னு கருவேப்பிலை சொன்னடும் நிறுத்திட்டா. நசுக்கி வச்ச மிளகு சீரகம் பூண்டு மூணையும் இப்ப உள்ள போட்டா.

அட்டத்துல நின்னு எல்லாத்தையும் எட்டி எட்டிப் பாத்துக்கிட்டிருக்கா எமிலி. 'இது என்ன இது அமெரிக்கா அறியாத கூத்து'ன்னு ஆச்சரியப்பட்டு நிக்கிறா.

இப்ப... கரைச்சு வச்ச புளித்தண்ணிய எடுத்தா சிட்டம்மா. அதுல பொதுக்குன்னு கையவிட்டுக் கொதுக்குகள ஒதுக்கிப் புழிஞ்சு எறிஞ்சா. அடுப்புச் சட்டியில ஊத்துனா புளித்தண்ணிய.

மாமியா மாதிரி தகதகன்னு எரிஞ்சுக்கிட்டிருந்த நெருப்பப் புதுப் பொண்ணு மாதிரி அடக்கி வாசிக்க வச்சா. ஒரே சீரா எரிச்சா. அது பொதுபொதுன்னு சூடாகி பொத்துனாப்புல நுரை கட்டவும் ஒரு மல்லித்தழைய உள்ள போட்டுக் கொதிக்குமுன்ன எறக்கிட்டா. ஆவி பறக்காம மூடி போட்டு ஒரு ஓரமா வச்சுட்டா.

"செய்முறை இருக்கட்டும். ரசம் என்ற பானத்துக்குள் இத்தனை உள்ளீடுகளா?" திக்கு முக்காடித் திகைச்சுப் போனா எமிலி.

"மூன்றாம் உலகப்போர்"
 - நாவலில் கவிஞர் வைரமுத்து.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உவமையணி

உவமை அணிக்கான இலக்கணம் : ஒரு பொருளை அல்லது செயலை, எடுத்துக்காட்டோடு சிறப்பாகச் சொல்வதே உவமையணி ஆகும். மேலும், உவமை அணியில் "போல" என்னும் உவம உருபு வெளிப்படையாக அமைந்திருக்கும். உவமையணி பற்றிய விளக்கத்தை, என் மகனின் பத்தாம் வகுப்பு தமிழ்க்குறிப்பேட்டில் தற்செயலாகக் கண்டேன். இனி, குறிப்பேட்டில் உள்ளபடி. கீழ்க்கண்ட குறளில் பயின்றுவரும் அணி எது? கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து அணிச்சுட்டல் :     இதில் உவமையணி பயின்று  வந்துள்ளது. அணியிலக்கணம் :     ஒரு பொருளை அதே தன்மையுடைய மற்றொரு பொருளோடு ஒப்பிட்டு கூறுவது உவமையணி எனப்படும்.    இதில் உவமை, உவமேயம், உவம உருபு வெளிப்படையாய் வரும். குறள் விளக்கம் :     வாய்ப்பற்ற காலத்தில் கொக்கைப்போல் அமைதியாக காத்திருத்தல் வேண்டும். உரிய காலம் வாய்த்ததும் கொக்கைப்போல் விரைந்து செயலைச் செய்து முடித்தல் வேண்டும். பொருத்தம் உவமானம் :         "கொக்கொக்க கூம்பும் பருவத்து"     வாய்ப்பற்ற காலத்தில் கொ...

வினைமுற்று விகுதி

    ஒருநாள் கலைஞர் தொலைக்காட்சியில், பேராசிரியர் சுப.வீ. அவர்கள், தான் படித்த ஒரு புத்தகத்தின் மீதான தனது மதிப்புரையை வழங்கிக்கொண்டிருந்தார். புத்தகத்தின் ஆசிரியர், தமிழில்  சில தேவையற்ற இலக்கண விதிகள் உள்ளதாகவும், மலையாளப் பேச்சு வழக்கு போல அவை மாற்றப்படவேண்டும் என்றும் எழுதியிருந்ததை பேராசிரியர் அவர்களும் ஏற்றுக்கொள்வது போல பேசியது, எனக்கு சற்றே அதிர்ச்சி ஏற்படுத்துவதாக இருந்தது. குறிப்பாக வினைமுற்று விகுதிகளைப் பற்றித்தான் பேசினார்.

அகரம்

" அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு " ஒரு திருக்குறள் சொல்லேன் என்று யாராவது சொன்னால், நமக்கு உடனே நினைவுக்கு வருவது இந்த குறள் தான். இந்த குறளைப் பற்றி நமக்கு என்னென்ன வெல்லாம் தெரியும் என்று கொஞ்சம் பார்க்கலாமா?