முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நன்னூல் (எழுத்ததிகாரம்)

ஆசிரியர் குறிப்பு : 

    தமிழின் இலக்கண நூலாகிய நன்னூலை எழுதியவர் பவணந்தி முனிவர்.
    இவர் சமண சமயத்தைச்சார்ந்தவர் என்று அறியப்படுகிறது. பழங்காலத்திய தென்னாட்டுச்சமணர்களின் பெயர்கள் நந்தி என்ற சொல்லுடன் இணைந்தேயிருக்கும்.
    பவணந்தி எழுதிய நன்னூல், தொல்காப்பியத்தை அடிப்படையாகக்கொண்டது.

எழுத்தின் பிறப்பு :

    தமிழ் எழுத்துக்கள் உச்சரிக்கப்படும்போது, அவை நம் உடலின் எந்த பாகத்திலிருந்து உற்பத்தியாகின்றன என்பதை இவ்வாறு விளக்குகிறார்.
    "அவ்வழி,
    ஆவி இடைமை இடமிட றாகும்
    மேவு மென்மைமூக் குறம்பெறும் வன்மை"
    பொருள் :
    உயிரெழுத்துக்களும் ய,ர,ல,வ,ழ,ள எனும் இடையின எழுத்துக்களும் கழுத்தில் (தொண்டை)தோன்றும்.
    ங,ஞ,ண,ந,ம,ன எனும் மெல்லின எழுத்துக்கள் மூக்கில் தோன்றும்.
    க,ச,ட,த,ப,ற எனும் வல்லின எழுத்துக்கள் நெஞ்சிலிருந்து பிறக்கும்.
    ஆயுத எழுத்து தலையில் பிறப்பெடுக்கும்.
    நன்றி! மீண்டும் சந்திப்போம்.
    அன்புடன்,
    சிவகுமார்.
    குறிப்பு : தங்கள் எண்ணங்களை எழுதுங்கள்.

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உவமையணி

உவமை அணிக்கான இலக்கணம் : ஒரு பொருளை அல்லது செயலை, எடுத்துக்காட்டோடு சிறப்பாகச் சொல்வதே உவமையணி ஆகும். மேலும், உவமை அணியில் "போல" என்னும் உவம உருபு வெளிப்படையாக அமைந்திருக்கும். உவமையணி பற்றிய விளக்கத்தை, என் மகனின் பத்தாம் வகுப்பு தமிழ்க்குறிப்பேட்டில் தற்செயலாகக் கண்டேன். இனி, குறிப்பேட்டில் உள்ளபடி. கீழ்க்கண்ட குறளில் பயின்றுவரும் அணி எது? கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து அணிச்சுட்டல் :     இதில் உவமையணி பயின்று  வந்துள்ளது. அணியிலக்கணம் :     ஒரு பொருளை அதே தன்மையுடைய மற்றொரு பொருளோடு ஒப்பிட்டு கூறுவது உவமையணி எனப்படும்.    இதில் உவமை, உவமேயம், உவம உருபு வெளிப்படையாய் வரும். குறள் விளக்கம் :     வாய்ப்பற்ற காலத்தில் கொக்கைப்போல் அமைதியாக காத்திருத்தல் வேண்டும். உரிய காலம் வாய்த்ததும் கொக்கைப்போல் விரைந்து செயலைச் செய்து முடித்தல் வேண்டும். பொருத்தம் உவமானம் :         "கொக்கொக்க கூம்பும் பருவத்து"     வாய்ப்பற்ற காலத்தில் கொ...

வினைமுற்று விகுதி

    ஒருநாள் கலைஞர் தொலைக்காட்சியில், பேராசிரியர் சுப.வீ. அவர்கள், தான் படித்த ஒரு புத்தகத்தின் மீதான தனது மதிப்புரையை வழங்கிக்கொண்டிருந்தார். புத்தகத்தின் ஆசிரியர், தமிழில்  சில தேவையற்ற இலக்கண விதிகள் உள்ளதாகவும், மலையாளப் பேச்சு வழக்கு போல அவை மாற்றப்படவேண்டும் என்றும் எழுதியிருந்ததை பேராசிரியர் அவர்களும் ஏற்றுக்கொள்வது போல பேசியது, எனக்கு சற்றே அதிர்ச்சி ஏற்படுத்துவதாக இருந்தது. குறிப்பாக வினைமுற்று விகுதிகளைப் பற்றித்தான் பேசினார்.

அகரம்

" அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு " ஒரு திருக்குறள் சொல்லேன் என்று யாராவது சொன்னால், நமக்கு உடனே நினைவுக்கு வருவது இந்த குறள் தான். இந்த குறளைப் பற்றி நமக்கு என்னென்ன வெல்லாம் தெரியும் என்று கொஞ்சம் பார்க்கலாமா?