ஆசிரியர் குறிப்பு :
தமிழின் இலக்கண நூலாகிய நன்னூலை எழுதியவர் பவணந்தி முனிவர்.
இவர் சமண சமயத்தைச்சார்ந்தவர் என்று அறியப்படுகிறது. பழங்காலத்திய தென்னாட்டுச்சமணர்களின் பெயர்கள் நந்தி என்ற சொல்லுடன் இணைந்தேயிருக்கும்.பவணந்தி எழுதிய நன்னூல், தொல்காப்பியத்தை அடிப்படையாகக்கொண்டது.
எழுத்தின் பிறப்பு :
தமிழ் எழுத்துக்கள் உச்சரிக்கப்படும்போது, அவை நம் உடலின் எந்த பாகத்திலிருந்து உற்பத்தியாகின்றன என்பதை இவ்வாறு விளக்குகிறார்."அவ்வழி,பொருள் :
ஆவி இடைமை இடமிட றாகும்
மேவு மென்மைமூக் குறம்பெறும் வன்மை"
உயிரெழுத்துக்களும் ய,ர,ல,வ,ழ,ள எனும் இடையின எழுத்துக்களும் கழுத்தில் (தொண்டை)தோன்றும்.
ங,ஞ,ண,ந,ம,ன எனும் மெல்லின எழுத்துக்கள் மூக்கில் தோன்றும்.
க,ச,ட,த,ப,ற எனும் வல்லின எழுத்துக்கள் நெஞ்சிலிருந்து பிறக்கும்.
ஆயுத எழுத்து தலையில் பிறப்பெடுக்கும்.
நன்றி! மீண்டும் சந்திப்போம்.
அன்புடன்,
சிவகுமார்.
குறிப்பு : தங்கள் எண்ணங்களை எழுதுங்கள்.
தொடர்ந்து எழுது!!!!!
பதிலளிநீக்கு