முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆட்டுக்குட்டி

 சமீபத்தில், 'கெத்து'  படத்திற்கு வரிவிலக்கு அளிப்பது தொடர்பான வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்தது. கெத்து என்ற சொல் , தமிழே அல்ல என்று தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது .கெத்து என்ற சொல், திருப்புகழில் உள்ளது என்று தயாரிப்பாளர் தரப்பில் வாதிடப்பட்டது.

நிறைய பிறமொழிச்சொற்கள் தமிழில் கலந்துள்ளன. அவற்றையெல்லாம் தமிழாகக்கருதமுடியாது என்று சொல்லி எடுத்துக்காட்டிற்கு மேசை என்ற சொல் அரசின் தமிழ்த்துறை  சார்பில் சொல்லப்பட்டது.

கொடுமை என்னவென்றால், மேசை என்ற சொல் தூய தமிழ்ச்சொல்லாகும்.
சற்று உயர்ந்த இடத்தை அல்லது பகுதியை 'மிசை' என்ற வேர்ச்சொல் குறிக்கும்.

'சிந்து நதியின் மிசை' என்பதில் மிசை என்பது, நதியின் அருகே உள்ள, நதியைவிட சற்று உயர்ந்த கரைப்பகுதியைக் குறிக்கும்.
தமிழை விட வடமொழியே சிறந்தது என்று நினைத்த ஏமாளிகள் இன்றைவிட முற்காலத்தில் அதிகம் இருந்தனர்.
 அவர்கள், தேவையின்றி   ஜ, ஷ, ஸ, ஹ  போன்ற எழுத்துக்களை தமிழ்ச்சொற்களில் சேர்த்துப்பேசினர்.  அவர்கள்தான் மேசையை 'மேஜை' ஆக்கினர்.

சமீபத்திய தமிழ் ஆர்வலர்கள், table என்ற சொல்லுக்கு , வடமொழியில் மேஜை என்றிருக்க , தமிழில் இணையான சொல்லில்லையே என்று தேவையில்லாமல் வருந்தி, மீண்டும் மேசை ஆக்கினர்.

இதேபோல், தொலைக்காட்சியில் M.S.தோனி தோன்றும் TVS Star City விளம்பரம் காண நேர்ந்தது. தமிழர் திருநாளை சிறப்பிக்கும் வகையில் தோனி அவர்கள் வேட்டி அணிந்திருந்தார்.ஓரிரு தமிழ் வார்த்தைகளும் இடம் பெற்றிருந்தன. பிரபுதேவா, தோனியிடம், 'தல, வேஷ்டி problem?' என்று கேட்கிறார்.

மேசை, மேஜை ஆனது போலத்தான் , வேட்டி, வேஷ்டி ஆகிவிட்டது.

'தேவையில்லாமல் வேட்டியை வேஷ்டி என்று சொல்கிறார்களே ' என்று பாரதிதாசனிடம் கேட்டதற்கு, அவர் சொன்னார்,
"என்ன செய்வது? இவர்கள், ஆட்டுக்குட்டியை, ஆஷ்டுக்குஷ்டி என்றுகூடச்சொல்வார்கள் "

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உவமையணி

உவமை அணிக்கான இலக்கணம் : ஒரு பொருளை அல்லது செயலை, எடுத்துக்காட்டோடு சிறப்பாகச் சொல்வதே உவமையணி ஆகும். மேலும், உவமை அணியில் "போல" என்னும் உவம உருபு வெளிப்படையாக அமைந்திருக்கும். உவமையணி பற்றிய விளக்கத்தை, என் மகனின் பத்தாம் வகுப்பு தமிழ்க்குறிப்பேட்டில் தற்செயலாகக் கண்டேன். இனி, குறிப்பேட்டில் உள்ளபடி. கீழ்க்கண்ட குறளில் பயின்றுவரும் அணி எது? கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து அணிச்சுட்டல் :     இதில் உவமையணி பயின்று  வந்துள்ளது. அணியிலக்கணம் :     ஒரு பொருளை அதே தன்மையுடைய மற்றொரு பொருளோடு ஒப்பிட்டு கூறுவது உவமையணி எனப்படும்.    இதில் உவமை, உவமேயம், உவம உருபு வெளிப்படையாய் வரும். குறள் விளக்கம் :     வாய்ப்பற்ற காலத்தில் கொக்கைப்போல் அமைதியாக காத்திருத்தல் வேண்டும். உரிய காலம் வாய்த்ததும் கொக்கைப்போல் விரைந்து செயலைச் செய்து முடித்தல் வேண்டும். பொருத்தம் உவமானம் :         "கொக்கொக்க கூம்பும் பருவத்து"     வாய்ப்பற்ற காலத்தில் கொ...

வினைமுற்று விகுதி

    ஒருநாள் கலைஞர் தொலைக்காட்சியில், பேராசிரியர் சுப.வீ. அவர்கள், தான் படித்த ஒரு புத்தகத்தின் மீதான தனது மதிப்புரையை வழங்கிக்கொண்டிருந்தார். புத்தகத்தின் ஆசிரியர், தமிழில்  சில தேவையற்ற இலக்கண விதிகள் உள்ளதாகவும், மலையாளப் பேச்சு வழக்கு போல அவை மாற்றப்படவேண்டும் என்றும் எழுதியிருந்ததை பேராசிரியர் அவர்களும் ஏற்றுக்கொள்வது போல பேசியது, எனக்கு சற்றே அதிர்ச்சி ஏற்படுத்துவதாக இருந்தது. குறிப்பாக வினைமுற்று விகுதிகளைப் பற்றித்தான் பேசினார்.

அகரம்

" அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு " ஒரு திருக்குறள் சொல்லேன் என்று யாராவது சொன்னால், நமக்கு உடனே நினைவுக்கு வருவது இந்த குறள் தான். இந்த குறளைப் பற்றி நமக்கு என்னென்ன வெல்லாம் தெரியும் என்று கொஞ்சம் பார்க்கலாமா?