மாணவன் திறமை :
ஒரு மாணவனின் கல்விப்புலமை
எப்போது முழுமை பெறுகிறது என்று பவணந்தி முனிவர் கீழ்க்கண்டவாறு விளக்குகிறார்.
“ஒருகுறி கேட்போன் இருகால் கேட்பின்பெருக நூலில் பிழைபா டிலனே” (42)
ஒரு பாடத்தை ஒருமுறைக்கு
இருமுறை கேட்டவன் பெரும்பாலும் பிழையில்லாமல் கற்றுக்கொள்வான்.
*****
“முக்கால் கேட்பின் முறையறிந் துரைக்கும்” (43)
ஒரு பாடத்தை மூன்று
முறை கேட்டவன் தான் கற்றதோடு, பிறர்க்கும் முறையோடு கற்றுத்தரும் திறமை பெறுவான்.
*****
“ஆசான் உரைத்தது அமைவரக் கொளினும்காற்கூ றல்லது பற்றல னாகும்” (44)
ஆசான் உரைத்ததை
குற்றமறக்கற்றவன் எனினும், அவருடைய திறமையில் கால் பங்கையே பெற்றிருப்பான். அதற்கதிகமாகப்பெற
முடியாது.
*****
“அவ்வினை யாளரொடு பயில்வகை ஒருகால்செவ்விதின் உரைப்ப அவ்விரு காலும்மையறு புலமை மாண்புடைத் தாகும்” (45)
உடன்
பயிலும் மாணவர்களோடு சேர்ந்து பயில்வதால், மேலும் கால் பங்கு அறிவு பெறுவான். தானே
மற்றவர்க்கும் பாடம் சொல்லுதலால், முழுப்புலமை பெறுவான்.
கருத்துகள்
கருத்துரையிடுக