ஆடும் குதிரையும்
கொம்புஇலையே தீனிதின்னும் கொண்டதன்மேல் வெட்டுதலால்
அம்புவியில் நல்நடையது ஆதலால் - உம்பர்களும்
தேடுநல் சோலைத் திருமலைரா யன்வரையில்
ஆடும் குதிரையும்நேர் ஆம்.
-கவி காளமேகம். (கி.பி. 15ஆம் நூற்றாண்டு)
உம்பர்கள் - தேவர்கள்
தேவர்களும் விரும்பி வரக்கூடிய, சோலைகள் நிறைந்த திருமலைராயன் மலையில் ஆடும் குதிரையும் சமமாகும்.
ஆடு :
நுனிக்கொம்பில் உள்ள இலைகளை இரையாகத்தின்னும். (கொம்புஇலையே தீனி)
இடையனிடமிருந்து விலைக்கு வாங்கிய பிறகு, இறைச்சிக்காக வெட்டப்படும். (தன்மேல் வெட்டுதலால்)
நல்ல கால்நடைச்செல்வமாகும். (நல்நடையது)
குதிரை :
கொம்பு இல்லாதது.(கொம்புஇலையே)
நன்றாக தீனி தின்னும். அதன்மீதேறிச்சென்று, பகைவர்கள் வெட்டப்படுகின்றனர். ( கொண்டதன்மேல் வெட்டுதலால்)
நன்றாக நடக்க(ஓட)க்கூடியது. (நல்நடையது)
கருத்துகள்
கருத்துரையிடுக