" சீருடை அணிந்த காவலர்களின் மேல் கை வைப்பது என்பது வன்முறையின் உச்சம் " இதுதான் தலைவரின் சமீபத்திய உளறல். நமக்கு எழும் முதல் கேள்வி இதுதான் : சீருடை அணியாத காவலர்கள் மேல் கை வைத்தால் பரவாயில்லையா? இந்தக் கேள்வி ஏதோ வீம்புக்காகக் கேட்கப்படுவதாகத் தோன்றலாம். இந்த நாட்டின் உண்மையான காவலர்கள், சீருடை எதுவும் அணிவதில்லை. அவர்களுக்கு, உழைப்பாளிகள், பாட்டாளிகள், விவசாயக்கூலிகள் என்று பல பெயர்கள் உள்ளன. அவர்களிடம் உறிஞ்சப்பட்ட இரத்தம்தான், சீருடை மனிதர்களுக்கும், அவர்களின் எஜமானர்களுக்கும் சம்பளம் என்ற பெயரிலும், மது எதிர்ப்பு போராட்டம் எஜமானர்களின் எஜமானர்களான கார்பரேட் முதலைகளுக்கு லாபம் என்ற பெயரிலும் பிரித்துக்கொள்ளப்படுகிறது. இப்போது சொல்லுங்கள். சீருடை அணியாத காவலர்கள் மேல் கை வைத்தால் பரவாயில்லையா? சரி. வன்முறையின் உச்சம் என்பது எது? சகல அதிகாரமும் ஆயுத பலமும் கொண்ட ஒரு கூட்டம், அப்பாவிகளின் மேல் நடத்தும் கொலை வெறித்தாக்குதலா? அல்லது எதிர் தாக்குதலா? எது வன்முறையின் உச்சம்? செம்மரம் வெட்ட வந்தார்கள் என்று சொல்லி, கூலித்தொழிலாளர்களை கொன்று சாய்த்தார்களே...அதுதான் வன்முறைய...