முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

கல்விக் கொள்கை ஆலோசனைகள்

   மதிப்பிற்குரிய சான்றோர்களுக்கு வணக்கம். நம் மாநிலத்தின் பள்ளிக் கொள்கைகளுக்காக, என்னுடைய நீண்ட நாள் கனவுகளை, என்னுடைய ஆலோசனைகளாகத் தெரிவிக்கிறேன்.  1.கணிதம், அறிவியல், சமூக அறிவியல், ஆகிய பாடங்கள் மூன்றாம் வகுப்பு முதல் ஆங்கில வழியில் கற்பிக்கப்பட வேண்டும். தமிழில் கற்பிக்க முடியும் என்றாலும் தமிழ்நாட்டுக்கு வெளியே என்ன பலன் கிடைத்துவிடும்?   2. ஐந்தாம் வகுப்பு முதல் ஆங்கில மொழியுடன் இந்திமொழியும் அறிமுகம் செய்யப்பட வேண்டும். 10 முதல் 25 மதிப்பெண்கள் இந்திக்கு என்று அளிக்கலாம். இதன் மூலம் ஒன்றிய அரசிலும் ஒன்றிய அரசின் வேலைவாய்ப்புகளிலும் தமிழர்கள் கோலோச்ச முடியும். இந்தி ஆசிரியர்கள் கட்டாயம் தமிழ் இலக்கணம் அறிந்திருக்க வேண்டும். அரசியல் கட்சிகள் கட்டாயம் எதிர்ப்பார்கள். ஆனால், மக்கள் கண்டிப்பாக மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வார்கள்.   3. மற்ற பாடங்கள் ஆங்கிலத்தில் நடத்தப்படுவதால் இயற்கையாகவே ஆங்கில அறிவு கிடைத்துவிடும். எனவே, 9 மற்றும்10 ஆம் வகுப்பில் ஆங்கிலம், இந்திக்கு தலா 50 மதிப்பெண்கள் என்று தேர்வு நடத்தலாம்.   4. எனினும், பள்ளி மாணவர்கள் அதி...

மாணவர்களுக்கு கணிதம்

தமிழ் நாட்டுப் பள்ளி மாணவர்களுக்கு கணிதம் கற்றுத்தரும் எண்ணிலடங்கா சேனல்கள் ( You Tube Channels) யூ ட்யூபில் காணக்கிடைக்கின்றன. அவற்றில் ஒன்று, Fun Maths .

அகரம்

" அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு " ஒரு திருக்குறள் சொல்லேன் என்று யாராவது சொன்னால், நமக்கு உடனே நினைவுக்கு வருவது இந்த குறள் தான். இந்த குறளைப் பற்றி நமக்கு என்னென்ன வெல்லாம் தெரியும் என்று கொஞ்சம் பார்க்கலாமா?

ஹமுராபியின் சட்டங்கள்

நம்முடைய பள்ளிப் பாடப்புத்தகத்தில், ஹமுராபி என்ற மன்னரைப்பற்றி சில வரிகள் படித்திருப்போம். பாபிலோனின் அரசரான ஹமுராபி, அவருடைய பெருமைமிகு சட்டங்களால் வரலாற்றில் நிலைபெற்று வாழ்கிறார். இந்த உலகம் அறிந்த வரை, உலகத்தின் மிகப் பழமையான ஆவணப்படுத்தப்பட்ட சட்டங்கள், ஹமுராபியின் சட்டங்களே.

இதயம்

          உறங்கும் போது மனித மூளையில் சில பகுதிகள் மட்டும் செயல்படாது. காரணம் நாம் ஓய்வில் இருக்கிறோம். ஆனால் நம் இறுதி மூச்சு வரை செயல்படும் ஒரே உறுப்பு இதயம். மனித இதயம் லப்-டப் லப்-டப் என நிமிடத்திற்கு 72முறை துடிக்கிறது.           வில்லியம் ஹார்வே (William Harvey), 1578-1657, என்னும் ஓர் ஆங்கில மருத்துவரால் தான் முதன் முதலில் குருதி ஓட்டம், குருதியின் பண்புகள் மற்றும் இதயத்தின் செயல்பாடுகள் போன்றவை கண்டறியப்பட்டது.

ரஜினியின் குரல் - 2

" சீருடை அணிந்த காவலர்களின் மேல் கை வைப்பது என்பது வன்முறையின் உச்சம் " இதுதான் தலைவரின் சமீபத்திய உளறல். நமக்கு எழும் முதல் கேள்வி இதுதான் : சீருடை அணியாத காவலர்கள் மேல் கை வைத்தால் பரவாயில்லையா? இந்தக் கேள்வி ஏதோ வீம்புக்காகக் கேட்கப்படுவதாகத் தோன்றலாம். இந்த நாட்டின் உண்மையான காவலர்கள், சீருடை எதுவும் அணிவதில்லை. அவர்களுக்கு, உழைப்பாளிகள், பாட்டாளிகள், விவசாயக்கூலிகள் என்று பல பெயர்கள் உள்ளன. அவர்களிடம் உறிஞ்சப்பட்ட இரத்தம்தான், சீருடை மனிதர்களுக்கும், அவர்களின் எஜமானர்களுக்கும் சம்பளம் என்ற பெயரிலும், மது எதிர்ப்பு போராட்டம் எஜமானர்களின் எஜமானர்களான கார்பரேட் முதலைகளுக்கு லாபம் என்ற பெயரிலும் பிரித்துக்கொள்ளப்படுகிறது. இப்போது சொல்லுங்கள். சீருடை அணியாத காவலர்கள் மேல் கை வைத்தால் பரவாயில்லையா? சரி. வன்முறையின் உச்சம் என்பது எது? சகல அதிகாரமும் ஆயுத பலமும் கொண்ட ஒரு கூட்டம், அப்பாவிகளின் மேல் நடத்தும் கொலை வெறித்தாக்குதலா? அல்லது எதிர் தாக்குதலா? எது வன்முறையின் உச்சம்? செம்மரம் வெட்ட வந்தார்கள் என்று சொல்லி, கூலித்தொழிலாளர்களை கொன்று சாய்த்தார்களே...அதுதான் வன்முறைய...

கமல் : இடதுசாரியா? வலதுசாரியா?

​ கமல் தன்னுடைய கட்சியின் தொடக்க நிகழ்ச்சியில், கட்சியின் கொள்கைகளை அறிவிப்பார் என்று காத்திருந்த எல்லோருமே ஏமாந்துபோனார்கள் என்றுதான் சொல்லவேண்டும். தான், ஒரு இடதுசாரியா? வலதுசாரியா? என்று  சொல்லாவிட்டாலும் பரவாயில்லை. நான், இரண்டுக்கும் 'மய்ய' த்தில் இருக்கிறேன் என்று சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்? நீங்க நல்லவரா? இல்ல கெட்டவரா? என்று கேட்டால், தெரியலையேப்பா என்று சொன்னால் ஏற்றுக்கொள்ளலாம். ' இரண்டுக்கும் நடுவானவன் ' என்று சொல்லும்போது எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்? இடதுசாரிகளின் கொள்கைகள் எவை? வலதுசாரிகள் யார்? இவர்களில் யார் நல்லவர்கள்? இந்தக் கேள்விகளுக்கான விடைகள், இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஃபிரான்சில் தொடங்குகின்றன. 1789 முதல் 1799 ஆம் ஆண்டுகளில் நடந்த ஃபிரெஞ்சுப் புரட்சியின்போது, அந்நாட்டின் அரசவையில் (இந்தியாவின் பாராளுமன்றம் போன்றது), முடியாட்சியின் பெயரிலான முதலாளித்துவ சர்வாதிகாரத்தை ஆதரித்தவர்கள் வலதுபக்க இருக்கைகளிலும், குடியரசின் மக்கள் அதிகாரத்தை ஆதரித்தவர்கள், இடது பக்க இருக்கைகளிலும் அமர்ந்திருந்தனர். இடது வலது என்ற சொல்லாடல் இ...