மதிப்பிற்குரிய சான்றோர்களுக்கு வணக்கம். நம் மாநிலத்தின் பள்ளிக் கொள்கைகளுக்காக, என்னுடைய நீண்ட நாள் கனவுகளை, என்னுடைய ஆலோசனைகளாகத் தெரிவிக்கிறேன். 1.கணிதம், அறிவியல், சமூக அறிவியல், ஆகிய பாடங்கள் மூன்றாம் வகுப்பு முதல் ஆங்கில வழியில் கற்பிக்கப்பட வேண்டும். தமிழில் கற்பிக்க முடியும் என்றாலும் தமிழ்நாட்டுக்கு வெளியே என்ன பலன் கிடைத்துவிடும்? 2. ஐந்தாம் வகுப்பு முதல் ஆங்கில மொழியுடன் இந்திமொழியும் அறிமுகம் செய்யப்பட வேண்டும். 10 முதல் 25 மதிப்பெண்கள் இந்திக்கு என்று அளிக்கலாம். இதன் மூலம் ஒன்றிய அரசிலும் ஒன்றிய அரசின் வேலைவாய்ப்புகளிலும் தமிழர்கள் கோலோச்ச முடியும். இந்தி ஆசிரியர்கள் கட்டாயம் தமிழ் இலக்கணம் அறிந்திருக்க வேண்டும். அரசியல் கட்சிகள் கட்டாயம் எதிர்ப்பார்கள். ஆனால், மக்கள் கண்டிப்பாக மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வார்கள். 3. மற்ற பாடங்கள் ஆங்கிலத்தில் நடத்தப்படுவதால் இயற்கையாகவே ஆங்கில அறிவு கிடைத்துவிடும். எனவே, 9 மற்றும்10 ஆம் வகுப்பில் ஆங்கிலம், இந்திக்கு தலா 50 மதிப்பெண்கள் என்று தேர்வு நடத்தலாம். 4. எனினும், பள்ளி மாணவர்கள் அதி...
பல் சுவை தமிழ் இணையம். இலக்கியம், இலக்கணம், கவிதைகள், சிந்தனைகள், கணித விளையாட்டுகள் அனைத்தும் காணக்கிடைக்கும்.