சில நாட்களுக்கு முன் தினத்தந்தி நாளிதழில், காவலர் தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் வெளியாகியிருந்தன. அதில், கீழ்க்கண்ட வினா ஒன்று இடம் பெற்றிருந்தது. கேள்வி : ஒரு தேர்வில், வினாத்தாளில் 90 கேள்விகள் இடம் பெற்றுள்ளன. அனைத்து கேள்விகளுக்கும் கட்டாயம் பதிலளிக்கவேண்டும். ஒவ்வொரு சரியான பதிலுக்கும் 2 மதிப்பெண்கள் வழங்கப்படும். ஒவ்வொரு தவறான பதிலுக்கும் 3 மதிப்பெண்கள் கழிக்கப்படும். தேர்வை எழுதிய ஒரு மாணவன், 15 மதிப்பெண்கள் பெறுகிறான் எனில், அந்த மாணவன் எத்தனை கேள்விகளுக்கு சரியான விடையளித்திருப்பான்? இந்தக்கேள்விக்கு விடையாக 4 வாய்ப்புகள் (options) வழங்கப்பட்டிருந்தன. அந்த வாய்ப்புகளைக் கொண்டு சிற்சில மனக்கணக்குகளோடு, விடையை யூகித்து எழுதமுடியலாம். வாய்ப்புகள் ஏதுமின்றி, எங்கள் வீட்டின் உரிமையாளர், திரு. ஸ்ரீநிவாசன் எவ்வாறு விடையைக் கண்டுபிடித்தார்? முதலில், சரியான விடைகள்= 60 என்றால், தவறானவை = 30 ...