முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

சிரிப்பதை நிறுத்து

கேவலம்..... மனிதக் கூட்டம் நாங்கள்.

ரஜினியின் குரல்

    " நான் வந்துட்டேன்னு சொல்லு " என்று சூப்பர் ஸ்டார் குரல் கொடுத்ததும் அரங்கமே அதிர்கிறது. என்ன காரணம்? அவரது ரசிகர்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. ஆனால், தமிழ்நாட்டு ரசிகர்களைப் பற்றி பணம் பண்ணும் கும்பல் நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறது.

வினைமுற்று விகுதி

    ஒருநாள் கலைஞர் தொலைக்காட்சியில், பேராசிரியர் சுப.வீ. அவர்கள், தான் படித்த ஒரு புத்தகத்தின் மீதான தனது மதிப்புரையை வழங்கிக்கொண்டிருந்தார். புத்தகத்தின் ஆசிரியர், தமிழில்  சில தேவையற்ற இலக்கண விதிகள் உள்ளதாகவும், மலையாளப் பேச்சு வழக்கு போல அவை மாற்றப்படவேண்டும் என்றும் எழுதியிருந்ததை பேராசிரியர் அவர்களும் ஏற்றுக்கொள்வது போல பேசியது, எனக்கு சற்றே அதிர்ச்சி ஏற்படுத்துவதாக இருந்தது. குறிப்பாக வினைமுற்று விகுதிகளைப் பற்றித்தான் பேசினார்.

உவமையணி

உவமை அணிக்கான இலக்கணம் : ஒரு பொருளை அல்லது செயலை, எடுத்துக்காட்டோடு சிறப்பாகச் சொல்வதே உவமையணி ஆகும். மேலும், உவமை அணியில் "போல" என்னும் உவம உருபு வெளிப்படையாக அமைந்திருக்கும். உவமையணி பற்றிய விளக்கத்தை, என் மகனின் பத்தாம் வகுப்பு தமிழ்க்குறிப்பேட்டில் தற்செயலாகக் கண்டேன். இனி, குறிப்பேட்டில் உள்ளபடி. கீழ்க்கண்ட குறளில் பயின்றுவரும் அணி எது? கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து அணிச்சுட்டல் :     இதில் உவமையணி பயின்று  வந்துள்ளது. அணியிலக்கணம் :     ஒரு பொருளை அதே தன்மையுடைய மற்றொரு பொருளோடு ஒப்பிட்டு கூறுவது உவமையணி எனப்படும்.    இதில் உவமை, உவமேயம், உவம உருபு வெளிப்படையாய் வரும். குறள் விளக்கம் :     வாய்ப்பற்ற காலத்தில் கொக்கைப்போல் அமைதியாக காத்திருத்தல் வேண்டும். உரிய காலம் வாய்த்ததும் கொக்கைப்போல் விரைந்து செயலைச் செய்து முடித்தல் வேண்டும். பொருத்தம் உவமானம் :         "கொக்கொக்க கூம்பும் பருவத்து"     வாய்ப்பற்ற காலத்தில் கொ...

காவலர் தேர்வு

சில நாட்களுக்கு முன் தினத்தந்தி நாளிதழில், காவலர் தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் வெளியாகியிருந்தன. அதில், கீழ்க்கண்ட வினா ஒன்று இடம் பெற்றிருந்தது. கேள்வி : ஒரு தேர்வில், வினாத்தாளில் 90 கேள்விகள் இடம் பெற்றுள்ளன. அனைத்து கேள்விகளுக்கும் கட்டாயம் பதிலளிக்கவேண்டும். ஒவ்வொரு சரியான பதிலுக்கும் 2 மதிப்பெண்கள் வழங்கப்படும். ஒவ்வொரு தவறான பதிலுக்கும் 3 மதிப்பெண்கள் கழிக்கப்படும். தேர்வை எழுதிய ஒரு மாணவன், 15 மதிப்பெண்கள் பெறுகிறான் எனில், அந்த மாணவன் எத்தனை கேள்விகளுக்கு சரியான விடையளித்திருப்பான்? இந்தக்கேள்விக்கு விடையாக 4 வாய்ப்புகள் (options) வழங்கப்பட்டிருந்தன. அந்த வாய்ப்புகளைக் கொண்டு சிற்சில மனக்கணக்குகளோடு, விடையை யூகித்து எழுதமுடியலாம். வாய்ப்புகள் ஏதுமின்றி, எங்கள் வீட்டின் உரிமையாளர், திரு. ஸ்ரீநிவாசன் எவ்வாறு விடையைக் கண்டுபிடித்தார்? முதலில், சரியான விடைகள்= 60 என்றால், தவறானவை = 30                             ...

நீட் (NEET) தேர்வு

நீட் (NEET) தேர்வு : நரியின் சாயம் வெளுத்தது ! in கல்வி, தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம், நீதிமன்றம், புதிய ஜனநாயகம், மருத்துவம் by வினவு , September 30, 2016 தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட்) தகுதியும் திறமையும் கொண்ட மாணவர்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம் என்று உச்சநீதி மன்றம் உருவாக்கிய தோற்றம், வெறும் வார்த்தை ஜாலமென்றும் மோசடியென்றும் அம்பலமாகிவிட்டது.

காஷ்மீர் இடைத்தேர்தல்

காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் பாராளுமன்ற தொகுதிக்கு 2014– ம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் ஆளும் மக்கள் ஜனநாயக கட்சி வேட்பாளராக தாரிக் ஹமீது காரா போட்டியிட்டு வெற்றி பெற்றார் . கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தை சேர்ந்த பர்கான் வானி கொல்லப்பட்டதால் காஷ்மீரில் வன்முறை வெடித்தது . இந்த வன்முறை, தொடர்ந்து பல நாட்கள் நீடித்தது . இதை தடுக்க ஆளும் கட்சி தவறியதாக கூறி தாரிக் ஹமீது காரா தன்னுடைய எம் . பி . பதவியை ராஜினாமா செய்தார் . பின்னர் அவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார் . இதையடுத்து ஸ்ரீநகர் பாராளுமன்ற தொகுதிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி இடைத்தேர்தல் நடந்தது . இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்ததாக ஊடகங்கள் மூலம் தெரிவிக்கப்பட்டது . எனினும் அதையும் மீறி பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தன . பல்வேறு இடங்களில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவங்களில் 8 பேர் பலியாகினர் . பொதுமக்கள் பலர் காயம் அடைந்தனர் . பல வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன . ஸ்ரீநகர் தொகுதியில் தொட...