முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இதயம்

          உறங்கும் போது மனித மூளையில் சில பகுதிகள் மட்டும் செயல்படாது. காரணம் நாம் ஓய்வில் இருக்கிறோம். ஆனால் நம் இறுதி மூச்சு வரை செயல்படும் ஒரே உறுப்பு இதயம். மனித இதயம் லப்-டப் லப்-டப் என நிமிடத்திற்கு 72முறை துடிக்கிறது.           வில்லியம் ஹார்வே (William Harvey), 1578-1657, என்னும் ஓர் ஆங்கில மருத்துவரால் தான் முதன் முதலில் குருதி ஓட்டம், குருதியின் பண்புகள் மற்றும் இதயத்தின் செயல்பாடுகள் போன்றவை கண்டறியப்பட்டது.

ரஜினியின் குரல் - 2

" சீருடை அணிந்த காவலர்களின் மேல் கை வைப்பது என்பது வன்முறையின் உச்சம் " இதுதான் தலைவரின் சமீபத்திய உளறல். நமக்கு எழும் முதல் கேள்வி இதுதான் : சீருடை அணியாத காவலர்கள் மேல் கை வைத்தால் பரவாயில்லையா? இந்தக் கேள்வி ஏதோ வீம்புக்காகக் கேட்கப்படுவதாகத் தோன்றலாம். இந்த நாட்டின் உண்மையான காவலர்கள், சீருடை எதுவும் அணிவதில்லை. அவர்களுக்கு, உழைப்பாளிகள், பாட்டாளிகள், விவசாயக்கூலிகள் என்று பல பெயர்கள் உள்ளன. அவர்களிடம் உறிஞ்சப்பட்ட இரத்தம்தான், சீருடை மனிதர்களுக்கும், அவர்களின் எஜமானர்களுக்கும் சம்பளம் என்ற பெயரிலும், மது எதிர்ப்பு போராட்டம் எஜமானர்களின் எஜமானர்களான கார்பரேட் முதலைகளுக்கு லாபம் என்ற பெயரிலும் பிரித்துக்கொள்ளப்படுகிறது. இப்போது சொல்லுங்கள். சீருடை அணியாத காவலர்கள் மேல் கை வைத்தால் பரவாயில்லையா? சரி. வன்முறையின் உச்சம் என்பது எது? சகல அதிகாரமும் ஆயுத பலமும் கொண்ட ஒரு கூட்டம், அப்பாவிகளின் மேல் நடத்தும் கொலை வெறித்தாக்குதலா? அல்லது எதிர் தாக்குதலா? எது வன்முறையின் உச்சம்? செம்மரம் வெட்ட வந்தார்கள் என்று சொல்லி, கூலித்தொழிலாளர்களை கொன்று சாய்த்தார்களே...அதுதான் வன்முறைய...

கமல் : இடதுசாரியா? வலதுசாரியா?

​ கமல் தன்னுடைய கட்சியின் தொடக்க நிகழ்ச்சியில், கட்சியின் கொள்கைகளை அறிவிப்பார் என்று காத்திருந்த எல்லோருமே ஏமாந்துபோனார்கள் என்றுதான் சொல்லவேண்டும். தான், ஒரு இடதுசாரியா? வலதுசாரியா? என்று  சொல்லாவிட்டாலும் பரவாயில்லை. நான், இரண்டுக்கும் 'மய்ய' த்தில் இருக்கிறேன் என்று சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்? நீங்க நல்லவரா? இல்ல கெட்டவரா? என்று கேட்டால், தெரியலையேப்பா என்று சொன்னால் ஏற்றுக்கொள்ளலாம். ' இரண்டுக்கும் நடுவானவன் ' என்று சொல்லும்போது எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்? இடதுசாரிகளின் கொள்கைகள் எவை? வலதுசாரிகள் யார்? இவர்களில் யார் நல்லவர்கள்? இந்தக் கேள்விகளுக்கான விடைகள், இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஃபிரான்சில் தொடங்குகின்றன. 1789 முதல் 1799 ஆம் ஆண்டுகளில் நடந்த ஃபிரெஞ்சுப் புரட்சியின்போது, அந்நாட்டின் அரசவையில் (இந்தியாவின் பாராளுமன்றம் போன்றது), முடியாட்சியின் பெயரிலான முதலாளித்துவ சர்வாதிகாரத்தை ஆதரித்தவர்கள் வலதுபக்க இருக்கைகளிலும், குடியரசின் மக்கள் அதிகாரத்தை ஆதரித்தவர்கள், இடது பக்க இருக்கைகளிலும் அமர்ந்திருந்தனர். இடது வலது என்ற சொல்லாடல் இ...

சிரிப்பதை நிறுத்து

கேவலம்..... மனிதக் கூட்டம் நாங்கள்.

ரஜினியின் குரல்

    " நான் வந்துட்டேன்னு சொல்லு " என்று சூப்பர் ஸ்டார் குரல் கொடுத்ததும் அரங்கமே அதிர்கிறது. என்ன காரணம்? அவரது ரசிகர்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. ஆனால், தமிழ்நாட்டு ரசிகர்களைப் பற்றி பணம் பண்ணும் கும்பல் நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறது.

வினைமுற்று விகுதி

    ஒருநாள் கலைஞர் தொலைக்காட்சியில், பேராசிரியர் சுப.வீ. அவர்கள், தான் படித்த ஒரு புத்தகத்தின் மீதான தனது மதிப்புரையை வழங்கிக்கொண்டிருந்தார். புத்தகத்தின் ஆசிரியர், தமிழில்  சில தேவையற்ற இலக்கண விதிகள் உள்ளதாகவும், மலையாளப் பேச்சு வழக்கு போல அவை மாற்றப்படவேண்டும் என்றும் எழுதியிருந்ததை பேராசிரியர் அவர்களும் ஏற்றுக்கொள்வது போல பேசியது, எனக்கு சற்றே அதிர்ச்சி ஏற்படுத்துவதாக இருந்தது. குறிப்பாக வினைமுற்று விகுதிகளைப் பற்றித்தான் பேசினார்.