முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பூக்கள் - வண்டுகள்



ஒரு தோட்டத்தில் சில பூக்கள் பூத்திருந்தன. அங்கே வந்த வண்டுகள், அந்தப் பூக்களில் உட்கார்ந்தன. ஒரு வண்டு மட்டும், அமர்வதற்கு ஒரு பூ இல்லாமல் தவித்தது. எனவே, வண்டுகள் எல்லாம் சேர்ந்து ஒரு யோசனை செய்தன. ஒவ்வொரு பூவிலும் இரண்டு இரண்டு பேராக உட்காரலாம் என்று முடிவு செய்து, அவ்வாறே செய்தன. முடிவில் ஒரு பூ மட்டும், தன்மேல் அமர்வதற்கு வண்டு ஏதும் இல்லாமல் தனியே புலம்பிக்கொண்டிருந்தது.

அப்படியென்றால், அந்தத் தோட்டத்தில் எத்தனை பூக்கள் பூத்திருந்தன?
அந்தத் தோட்டத்திற்கு எத்தனை வண்டுகள் வந்திருந்தன?

இந்தக் கணக்கை ‘அல்ஜீப்ரா’ வின் (Algebra) உதவியோடு அணுக முயற்சிப்போம்.

வண்டுகள் தனித்தனியே உட்காரும்போது :
வண்டுகள் எண்ணிக்கை x என்க.
பூக்கள் எண்ணிக்கை y என்க.
பூக்களின் எண்ணிக்கையை விட, வண்டுகளின் எண்ணிக்கை 1(ஒன்று) அதிகம். எனவே,
X – Y =1   ----------1
ஜோடிகளாக உட்காரும்போது :
ஜோடிகளின் எண்ணிக்கை X/2 என்க
பூக்கள் எண்ணிக்கை Y என்க.
ஜோடிகளின் எண்ணிக்கையை விட, பூக்களின் எண்ணிக்கை 1(ஒன்று) அதிகம். எனவே,
X/2 – Y = -1 ---------2
X  – Y = 1   ------1
X/2 – Y = -1   ----2
         (1) – (2)                X/2 = 2
                                X = 4
X = 1 என சமன்பாடு (1) இல் பிரதியிட,
4 – Y = 1
4 – 1 = Y
   Y = 3
எனவே,
பூக்களின் எண்ணிக்கை = 3
வண்டுகளின் எண்ணிக்கை = 4


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உவமையணி

உவமை அணிக்கான இலக்கணம் : ஒரு பொருளை அல்லது செயலை, எடுத்துக்காட்டோடு சிறப்பாகச் சொல்வதே உவமையணி ஆகும். மேலும், உவமை அணியில் "போல" என்னும் உவம உருபு வெளிப்படையாக அமைந்திருக்கும். உவமையணி பற்றிய விளக்கத்தை, என் மகனின் பத்தாம் வகுப்பு தமிழ்க்குறிப்பேட்டில் தற்செயலாகக் கண்டேன். இனி, குறிப்பேட்டில் உள்ளபடி. கீழ்க்கண்ட குறளில் பயின்றுவரும் அணி எது? கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து அணிச்சுட்டல் :     இதில் உவமையணி பயின்று  வந்துள்ளது. அணியிலக்கணம் :     ஒரு பொருளை அதே தன்மையுடைய மற்றொரு பொருளோடு ஒப்பிட்டு கூறுவது உவமையணி எனப்படும்.    இதில் உவமை, உவமேயம், உவம உருபு வெளிப்படையாய் வரும். குறள் விளக்கம் :     வாய்ப்பற்ற காலத்தில் கொக்கைப்போல் அமைதியாக காத்திருத்தல் வேண்டும். உரிய காலம் வாய்த்ததும் கொக்கைப்போல் விரைந்து செயலைச் செய்து முடித்தல் வேண்டும். பொருத்தம் உவமானம் :         "கொக்கொக்க கூம்பும் பருவத்து"     வாய்ப்பற்ற காலத்தில் கொ...

வினைமுற்று விகுதி

    ஒருநாள் கலைஞர் தொலைக்காட்சியில், பேராசிரியர் சுப.வீ. அவர்கள், தான் படித்த ஒரு புத்தகத்தின் மீதான தனது மதிப்புரையை வழங்கிக்கொண்டிருந்தார். புத்தகத்தின் ஆசிரியர், தமிழில்  சில தேவையற்ற இலக்கண விதிகள் உள்ளதாகவும், மலையாளப் பேச்சு வழக்கு போல அவை மாற்றப்படவேண்டும் என்றும் எழுதியிருந்ததை பேராசிரியர் அவர்களும் ஏற்றுக்கொள்வது போல பேசியது, எனக்கு சற்றே அதிர்ச்சி ஏற்படுத்துவதாக இருந்தது. குறிப்பாக வினைமுற்று விகுதிகளைப் பற்றித்தான் பேசினார்.

அகரம்

" அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு " ஒரு திருக்குறள் சொல்லேன் என்று யாராவது சொன்னால், நமக்கு உடனே நினைவுக்கு வருவது இந்த குறள் தான். இந்த குறளைப் பற்றி நமக்கு என்னென்ன வெல்லாம் தெரியும் என்று கொஞ்சம் பார்க்கலாமா?