முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நீட் (NEET) தேர்வு

நீட் (NEET) தேர்வு : நரியின் சாயம் வெளுத்தது ! in கல்வி, தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம், நீதிமன்றம், புதிய ஜனநாயகம், மருத்துவம் by வினவு , September 30, 2016 தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட்) தகுதியும் திறமையும் கொண்ட மாணவர்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம் என்று உச்சநீதி மன்றம் உருவாக்கிய தோற்றம், வெறும் வார்த்தை ஜாலமென்றும் மோசடியென்றும் அம்பலமாகிவிட்டது.

காஷ்மீர் இடைத்தேர்தல்

காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் பாராளுமன்ற தொகுதிக்கு 2014– ம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் ஆளும் மக்கள் ஜனநாயக கட்சி வேட்பாளராக தாரிக் ஹமீது காரா போட்டியிட்டு வெற்றி பெற்றார் . கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தை சேர்ந்த பர்கான் வானி கொல்லப்பட்டதால் காஷ்மீரில் வன்முறை வெடித்தது . இந்த வன்முறை, தொடர்ந்து பல நாட்கள் நீடித்தது . இதை தடுக்க ஆளும் கட்சி தவறியதாக கூறி தாரிக் ஹமீது காரா தன்னுடைய எம் . பி . பதவியை ராஜினாமா செய்தார் . பின்னர் அவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார் . இதையடுத்து ஸ்ரீநகர் பாராளுமன்ற தொகுதிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி இடைத்தேர்தல் நடந்தது . இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்ததாக ஊடகங்கள் மூலம் தெரிவிக்கப்பட்டது . எனினும் அதையும் மீறி பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தன . பல்வேறு இடங்களில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவங்களில் 8 பேர் பலியாகினர் . பொதுமக்கள் பலர் காயம் அடைந்தனர் . பல வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன . ஸ்ரீநகர் தொகுதியில் தொட...

பூக்கள் - வண்டுகள்

ஒரு தோட்டத்தில் சில பூக்கள் பூத்திருந்தன. அங்கே வந்த வண்டுகள், அந்தப் பூக்களில் உட்கார்ந்தன. ஒரு வண்டு மட்டும், அமர்வதற்கு ஒரு பூ இல்லாமல் தவித்தது. எனவே, வண்டுகள் எல்லாம் சேர்ந்து ஒரு யோசனை செய்தன. ஒவ்வொரு பூவிலும் இரண்டு இரண்டு பேராக உட்காரலாம் என்று முடிவு செய்து, அவ்வாறே செய்தன. முடிவில் ஒரு பூ மட்டும், தன்மேல் அமர்வதற்கு வண்டு ஏதும் இல்லாமல் தனியே புலம்பிக்கொண்டிருந்தது. அப்படியென்றால், அந்தத் தோட்டத்தில் எத்தனை பூக்கள் பூத்திருந்தன? அந்தத் தோட்டத்தி ற்கு எத்தனை வண்டுகள் வந் திருந்தன ? இந்தக் கணக்கை ‘அல்ஜீப்ரா’ வின் (Algebra) உதவியோடு அணுக முயற்சிப்போம். வண்டுகள் தனித்தனியே உட்காரும்போது : வண்டுகள் எண்ணிக்கை x என்க. பூக்கள் எண்ணிக்கை y என்க. பூக்களின் எண்ணிக்கையை விட, வண்டுகளின் எண்ணிக்கை 1(ஒன்று) அதிகம். எனவே, X – Y =1    ----------1 ஜோடிகளாக உட்காரும்போது : ஜோடிகளின் எண்ணிக்கை X/2 என்க பூக்கள் எண்ணிக்கை Y என்க. ஜோடிகளின் எண்ணிக்கையை விட , பூக்களின் எண்ணிக்கை 1( ஒன்று) அதிகம். எனவே , X/2 – Y = -1 ---------2 X   – Y = ...

ரசம் - செய்முறை

சிட்டம்மா ரசம் வைக்கிறதையே கொட்டக் கொட்டப்பாத்துக்கிட்டிருக்கா எமிலி. எப்பிடியாச்சும் அந்த 'சூப்பு' வைக்கிற சூத்திரத்தக் கண்டுபுடிச்சாகணும் அவளுக்கு. இடுப்புல கொசுவத்த இழுத்துச் சொருகி ஆரம்பிச்சிட்டா சிட்டம்மா. குத்துச் சொம்புல தண்ணி ஊத்தி ஒரு புடிச்சபுளி எடுத்து, ஒரு தக்காளியும் சேத்துக் கரகரன்னு கரைச்சு ஊற வச்சா. அதுல உப்புத்தூளை அள்ளி எறிஞ்சா. அதத் துண்டா எடுத்துத் தூர வச்சுட்டா. மிளகு சீரகம் ரெண்டையும் அம்மில வச்சு நச்சு நச்சுன்னு நசுக்குனா. பள்ளிக்கூடத்துல வாத்தியாரு தன் பிள்ளைய அடிக்கிறமாதிரி, வெள்ளைப் பூண்டைத் தட்டியும் தட்டாம வச்சுக்கிட்டா. மூணையுமமொண்ணு சேத்தா. வடச்சட்டியில கடலெண்ணைய ஊத்தி எளஞ்சூட்டுல சுட வச்சா. கடுகு உளுந்தம்பருப்பு ரெண்டையும் எடுத்து எறிஞ்சா கொதிக்கிற எண்ணை மேல. அதுக சட்டுபுட்டுன்னு வெடிச்சு சட்டிக்குள்ள தீபாவளி கொண்டாடுதுக. இப்ப... கிள்ளி வச்ச பட்டமொளகாயும் கருவேப்பிலையும் போட்டுச் செல்லமா வதக்குனா. நான் கறுப்பாப் போகப் போறேன்னு கருவேப்பிலை சொன்னடும் நிறுத்திட்டா. நசுக்கி வச்ச மிளகு சீரகம் பூண்டு மூணையும் இப்ப உள்ள போட்டா. அட்டத்துல நின்னு எல...

வேலைக்காரன் - வேளக்காரன்

வேலைக்காரன் காதலா காதலா என்ற திரைப்படத்தில், கமல்ஹாசன், "முருகர் கையில்கூடத்தான் வேல் இருக்கிறது. அதனால் அவரை வேலக்காரன் (வேலைக்காரன்) என்று சொல்ல முடியுமா?" என்று கேட்பதாக ஒரு வசனம் வரும். பாரதி போன்ற கவியுள்ளங்கொண்ட மெய்யன்பர்களுக்கு வேண்டுமானால் கண்ணன் போன்ற கடவுளரும் சேவகராகலாம். நம்மைப்போன்ற சாதாரணர், முருகனை வேலைக்காரன் என்று சொல்ல முடியுமா? கண்டிப்பாக முடியாது. ஆனால், வேளக்காரன் என்று சொல்லலாம். எப்படி? வேளக்காரன் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், தஞ்சாவூரில், ஓரிரவுப்பொழுதில், கோட்டையின் பிரதான வாசலில் ஆதித்தகரிகாலனின் தூதன் வந்தியத்தேவன் கோட்டையை நோட்டம் பார்த்தபடி நின்றுகொண்டிருந்தான். அப்போது, வாசல் வழியே, புழுதியைக்கிளப்பிக்கொண்டு ஒரு குதிரைப்படை, புயல்போல் வெளியேறியது. குதிரை மேலிருந்த வீரர்கள் ஏக களேபரம் செய்தபடி வந்தனர். மரியாதையோடு வீதியின் ஓரமாய் நின்ற மக்களிடம் வம்பிழுத்தபடியும், கடைகளில் இருந்த பொருட்களையெடுத்து விளையாண்டும், வீணடித்தும், கேலியும் கிண்டலுமாய் சத்தம் செய்துகொண்டும் சென்றனர். இத்தனைக்கும், அவர்கள் பேரில் தஞ்சை மக்களுக்கு எந்தக்கோபமும் ஏற்பட...

காட்டு நதி

காட்டு நதி   இந்தப்பயணம் குறிக்கோளில்லாமல் தொடங்கியதுதான்.              --------- என்னைப்பெற்றெடுத்த புனித வயிறு, சிறு குன்றுதான் என்றாலும் எனக்கதுதான் இமயம்.            --------- காதலனுடன் ஓடிவந்த கன்னிப்பெண்ணின் பயம் கலந்த ஆர்வம், நான் ஓடிவந்தபோது எனக்குமிருந்தது. பாறைகளில் குதித்தோடி வந்த எனக்கு, மலையடிவாரம் முடிந்ததும் திசை தெரியவில்லை. சரிவுகளில் திசை திருப்பப்பட்டேன். சமவெளிகளில் மனம் போனபடி பயணம் செய்தேன். வழிதவறிய குழந்தையிடம் பரிவுகாட்டும் பெரியவரைப்போல் அந்தக்காடுகள்தான் என்னை அரவணைத்தன. யாருக்கும் வழிவிடாத காடுகள், தலவனைக்கண்ட தொண்டரைப்போல் எனக்குப் பாதை தந்தன. என் இளமை முழுதும் அந்தக் காடுகளிலேயே கழிந்தது, பால காண்டம், ஆரண்ய காண்டம் இரண்டுமே எனக்கு சுந்தர காண்டம்தான். யுத்த காண்டமும் தொடங்கியது. நான் தடுக்கப்பட்டேன். திருப்பப்பட்டேன். திருடப்ப...

Disc change

தட்டு விளையா ட்டு :                      Place for Help Place : B                              மேலே Place A என்ற இடத்தில் மூன்று தட்டுக்கள் உள்ளன. இவற்றை place B க்கு முழுவதுமாக எடுத்துச்செல்லவேண்டும். கீழே உள்ள விதிமுறைகளையும் மனதில் கொள்ளவேண்டும். விதிமுறைகள் : 1.ஒவ்வொரு தட்டாக மட்டுமே எடுக்கவேண்டும். 2.Place for Help –இலும் தட்டுக்களை வைக்கலாம், எடுக்கலாம். (ஒவ்வொரு தட்டாக மட்டுமே) 3.எக்காரணத்தைக்கொண்டும், சிறிய தட்டின் மேல் பெரிய தட்டை வைக்கக்கூடாது. 4.ஒரு தட்டை, ஒருமுறை தொட்டால், ஒரு step என்று கணக்கிடப்படும். 5.ஏழு steps களில் ஆட்டத்தை முடிக்கவேண்டும். தயாராகிவிட்டீர்களா? வெற்றி உங்களுக்கே! ஐயங்களிருந்தால், தயக்கமின்றி தொடர்புகொள்ளுங்கள். அதிக எண்ணிக்கையிலான தட்டுக்களை வைத்து விளையாடிப்பாருங்கள். ...