முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காட்டு நதி

காட்டு நதி

 

இந்தப்பயணம் குறிக்கோளில்லாமல்
தொடங்கியதுதான்.
             ---------

என்னைப்பெற்றெடுத்த
புனித வயிறு, சிறு
குன்றுதான் என்றாலும்
எனக்கதுதான் இமயம்.

           ---------

காதலனுடன் ஓடிவந்த
கன்னிப்பெண்ணின்
பயம் கலந்த ஆர்வம்,
நான் ஓடிவந்தபோது
எனக்குமிருந்தது.

பாறைகளில்
குதித்தோடி வந்த எனக்கு,
மலையடிவாரம்
முடிந்ததும்
திசை தெரியவில்லை.

சரிவுகளில்
திசை திருப்பப்பட்டேன்.

சமவெளிகளில்
மனம் போனபடி
பயணம் செய்தேன்.

வழிதவறிய குழந்தையிடம்
பரிவுகாட்டும்
பெரியவரைப்போல்
அந்தக்காடுகள்தான்
என்னை அரவணைத்தன.

யாருக்கும் வழிவிடாத
காடுகள்,
தலவனைக்கண்ட
தொண்டரைப்போல்
எனக்குப்
பாதை தந்தன.

என் இளமை முழுதும்
அந்தக் காடுகளிலேயே
கழிந்தது,

பால காண்டம்,
ஆரண்ய காண்டம்
இரண்டுமே எனக்கு
சுந்தர காண்டம்தான்.

யுத்த காண்டமும்
தொடங்கியது.
நான்
தடுக்கப்பட்டேன்.
திருப்பப்பட்டேன்.
திருடப்பட்டேன்.
அழுக்காக்கப்பட்டேன்.

என்னுள் கலந்த
ஓடைகளால்
என் தனித்தன்மை
தன்மானமிழந்தது.

என் இரத்தம்
வயல்களில் வடிக்கப்பட்டதால்
என் ஜீவநாடி
தளர்ந்தது.

இதோ...
என் பயணம்
முடியப்போகிறது.

நான் வந்து சேர்ந்துவிட்டேனா?
என்று
அலைகள் வந்துவந்து
பார்த்துச்செல்கின்றன.

ஒரு நதியின் கடமைகள்
அனைத்தையும்
முடித்தபின்னும்
எனக்குள் ஒரு
வெறுமை.

அதோ...
அந்தக்கடல் பரப்பில்
இந்த வெறுமையும்
நிரம்பிவிடும்.
----------------------------------------------
                                       அன்புடன்,
                                       சிவகுமார்.
                                   -------------------------

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உவமையணி

உவமை அணிக்கான இலக்கணம் : ஒரு பொருளை அல்லது செயலை, எடுத்துக்காட்டோடு சிறப்பாகச் சொல்வதே உவமையணி ஆகும். மேலும், உவமை அணியில் "போல" என்னும் உவம உருபு வெளிப்படையாக அமைந்திருக்கும். உவமையணி பற்றிய விளக்கத்தை, என் மகனின் பத்தாம் வகுப்பு தமிழ்க்குறிப்பேட்டில் தற்செயலாகக் கண்டேன். இனி, குறிப்பேட்டில் உள்ளபடி. கீழ்க்கண்ட குறளில் பயின்றுவரும் அணி எது? கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து அணிச்சுட்டல் :     இதில் உவமையணி பயின்று  வந்துள்ளது. அணியிலக்கணம் :     ஒரு பொருளை அதே தன்மையுடைய மற்றொரு பொருளோடு ஒப்பிட்டு கூறுவது உவமையணி எனப்படும்.    இதில் உவமை, உவமேயம், உவம உருபு வெளிப்படையாய் வரும். குறள் விளக்கம் :     வாய்ப்பற்ற காலத்தில் கொக்கைப்போல் அமைதியாக காத்திருத்தல் வேண்டும். உரிய காலம் வாய்த்ததும் கொக்கைப்போல் விரைந்து செயலைச் செய்து முடித்தல் வேண்டும். பொருத்தம் உவமானம் :         "கொக்கொக்க கூம்பும் பருவத்து"     வாய்ப்பற்ற காலத்தில் கொ...

வினைமுற்று விகுதி

    ஒருநாள் கலைஞர் தொலைக்காட்சியில், பேராசிரியர் சுப.வீ. அவர்கள், தான் படித்த ஒரு புத்தகத்தின் மீதான தனது மதிப்புரையை வழங்கிக்கொண்டிருந்தார். புத்தகத்தின் ஆசிரியர், தமிழில்  சில தேவையற்ற இலக்கண விதிகள் உள்ளதாகவும், மலையாளப் பேச்சு வழக்கு போல அவை மாற்றப்படவேண்டும் என்றும் எழுதியிருந்ததை பேராசிரியர் அவர்களும் ஏற்றுக்கொள்வது போல பேசியது, எனக்கு சற்றே அதிர்ச்சி ஏற்படுத்துவதாக இருந்தது. குறிப்பாக வினைமுற்று விகுதிகளைப் பற்றித்தான் பேசினார்.

அகரம்

" அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு " ஒரு திருக்குறள் சொல்லேன் என்று யாராவது சொன்னால், நமக்கு உடனே நினைவுக்கு வருவது இந்த குறள் தான். இந்த குறளைப் பற்றி நமக்கு என்னென்ன வெல்லாம் தெரியும் என்று கொஞ்சம் பார்க்கலாமா?