மாணவன் திறமை : ஒரு மாணவனின் கல்விப்புலமை எப்போது முழுமை பெறுகிறது என்று பவணந்தி முனிவர் கீழ்க்கண்டவாறு விளக்குகிறார். “ஒருகுறி கேட்போன் இருகால் கேட்பின் பெருக நூலில் பிழைபா டிலனே” (42) ஒரு பாடத்தை ஒருமுறைக்கு இருமுறை கேட்டவன் பெரும்பாலும் பிழையில்லாமல் கற்றுக்கொள்வான். ***** “முக்கால் கேட்பின் முறையறிந் துரைக்கும்” (43) ஒரு பாடத்தை மூன்று முறை கேட்டவன் தான் கற்றதோடு, பிறர்க்கும் முறையோடு கற்றுத்தரும் திறமை பெறுவான். ***** “ஆசான் உரைத்தது அமைவரக் கொளினும் காற்கூ றல்லது பற்றல னாகும்” (44) ஆசான் உரைத்ததை குற்றமறக்கற்றவன் எனினும், அவருடைய திறமையில் கால் பங்கையே பெற்றிருப்பான். அதற்கதிகமாகப்பெற முடியாது. ***** “அவ்வினை யாளரொடு பயில்வகை ஒருகால் செவ்விதின் உரைப்ப அவ்விரு காலும் மையறு புலமை மாண்புடைத் தாகும்” (45) உடன் பயிலும் மாணவர்களோடு சேர்ந்து பயில்வதால், மேலும் கால் பங்கு அறிவு பெறுவான். தானே மற்றவர்க்கும் பாடம் சொல்லுதலால், முழுப்புலமை பெறுவான்.
பல் சுவை தமிழ் இணையம். இலக்கியம், இலக்கணம், கவிதைகள், சிந்தனைகள், கணித விளையாட்டுகள் அனைத்தும் காணக்கிடைக்கும்.