முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மாணவன் திறமை

மாணவன் திறமை : ஒரு மாணவனின் கல்விப்புலமை எப்போது முழுமை பெறுகிறது என்று பவணந்தி முனிவர் கீழ்க்கண்டவாறு விளக்குகிறார். “ஒருகுறி கேட்போன் இருகால் கேட்பின் பெருக நூலில் பிழைபா டிலனே”   (42) ஒரு பாடத்தை ஒருமுறைக்கு இருமுறை கேட்டவன் பெரும்பாலும் பிழையில்லாமல் கற்றுக்கொள்வான். ***** “முக்கால் கேட்பின் முறையறிந் துரைக்கும்”   (43) ஒரு பாடத்தை மூன்று முறை கேட்டவன் தான் கற்றதோடு, பிறர்க்கும் முறையோடு கற்றுத்தரும் திறமை பெறுவான். ***** “ஆசான் உரைத்தது அமைவரக் கொளினும் காற்கூ றல்லது பற்றல னாகும்”    (44) ஆசான் உரைத்ததை குற்றமறக்கற்றவன் எனினும், அவருடைய திறமையில் கால் பங்கையே பெற்றிருப்பான். அதற்கதிகமாகப்பெற முடியாது. ***** “அவ்வினை யாளரொடு பயில்வகை ஒருகால் செவ்விதின் உரைப்ப அவ்விரு காலும் மையறு புலமை மாண்புடைத் தாகும்”   (45) உடன் பயிலும் மாணவர்களோடு சேர்ந்து பயில்வதால், மேலும் கால் பங்கு அறிவு பெறுவான். தானே மற்றவர்க்கும் பாடம் சொல்லுதலால், முழுப்புலமை பெறுவான்.

இரட்டுற மொழிதல்

ஆடும் குதிரையும் கொம்புஇலையே  தீனிதின்னும்  கொண்டதன்மேல்  வெட்டுதலால் அம்புவியில்  நல்நடையது  ஆதலால் - உம்பர்களும் தேடுநல்  சோலைத்  திருமலைரா  யன்வரையில் ஆடும்  குதிரையும்நேர்  ஆம்.                                                -கவி  காளமேகம். (கி.பி. 15ஆம் நூற்றாண்டு) உம்பர்கள் - தேவர்கள் தேவர்களும் விரும்பி வரக்கூடிய, சோலைகள் நிறைந்த திருமலைராயன் மலையில் ஆடும் குதிரையும் சமமாகும். ஆடு :            நுனிக்கொம்பில் உள்ள இலைகளை இரையாகத்தின்னும். (கொம்புஇலையே  தீனி) இடையனிடமிருந்து விலைக்கு வாங்கிய பிறகு, இறைச்சிக்காக வெட்டப்படும். (தன்மேல்  வெட்டுதலால்)  நல்ல கால்நடைச்செல்வமாகும். (நல்நடையது) குதிரை :    ...

கவி காளமேகம்

வினா விடைப்பாட்டு  இரட்டுற மொழிதல் மற்றும் வஞ்சப்புகழ்ச்சி அணிகளில் செய்யுட்களைப்பாடுவதில் புகழ் பெற்றவர் காளமேகப்புலவர் என்பது, நாமனைவரும் அறிந்ததே. அதேபோல், கேட்ட கேள்விக்கு, பொட்டிலடித்ததுபோல் விடையளிப்பதிலும் அவருக்கு நிகர் அவரே. ஸ்ரீரங்கத்தில், ஒரு வைணவர், 'பெருமாள் உலகத்தை உண்டபோது, சிவன் எங்கேயிருந்தார்' என்று காளமேகரிடம் கேட்டார். அதற்கு, "அருந்தினான் அண்டம்எலாம் அன்றுமால் ஈசன் இருந்தபடி ஏதுஎன்று இயம்பப் - பொருந்திப் பருங்கவளம் யானைகொளப் பாகன்அதன் மீதே இருந்தபடி ஈசன்இருந் தான்" என்று பதில் சொன்னார். 'பெருங்கவளமாகிய உணவை யானை உட்கொள்ளும்போது, யானையின் பாகன், யானையின்மீதே அமர்ந்திருந்ததுபோன்ற நிலையில் சிவனும் இருந்தார் ' என்பது பொருள். இந்த நேரத்தில் ஒரு கதை நினைவுக்கு வருகிறது. பொன்னியின் செல்வனில், கல்கி அவர்கள், கதைக்குள் கதையாக ஒரு கதை சொல்லியிருப்பார். சைவ,வைணவச்சண்டைகள் நிறைந்த ஒரு காலத்தில், ஒரு வைணவன், சிவன் கோயில் ஓரமாகச்சென்றுகொண்டிருந்தான். அப்போது, அவன் தலையில் ஒரு கல் வந்து விழுந்தது. கோபமாக நிமிர்ந்து பார்த்தான். கோயிலின...

காயங்கள் ஆறட்டும்

நம்மிருவருக்கும் புதிதல்ல நெருப்பு. ஒருவரையொருவர் வார்த்தைகளால் சுட்டுக்கொண்டோம். பார்வைகளால் எரித்துக்கொண்டோம். வெம்மை தாங்காமல் விலகிச்சென்றோம். பாதையில் சந்திக்க நேர்ந்தால் பழைய நினைவுகள் சுடும்.  *   *   * காதல் யாகம் செய்ததற்காக, சாதி ... நம் வீட்டுக்கூரையில் தீ வைத்தது. உன்னைக்காப்பற்ற நான் நினைத்தேன். எனவே... காதலைத்தொடர்ந்தேன். என்னைக்காப்பற்ற நீ நினைத்தாய். எனவே...உன் காதலை மறைத்தாய். அதன் பின், ஒருவரையொருவர் வார்த்தைகளால் சுட்டுக்கொண்டோம். பார்வைகளால் எரித்துக்கொண்டோம். வெம்மை தாங்காமல் விலகிச்சென்றோம். ஒருவழியாய்... நாமிருவரும் சேர்ந்து... காதலுக்குத்தீ வைத்தோம்.                                                 ...

நன்னூல் (எழுத்ததிகாரம்)

ஆசிரியர் குறிப்பு :       தமிழின் இலக்கண நூலாகிய நன்னூலை எழுதியவர் பவணந்தி முனிவர்.     இவர் சமண சமயத்தைச்சார்ந்தவர் என்று அறியப்படுகிறது. பழங்காலத்திய தென்னாட்டுச்சமணர்களின் பெயர்கள் நந்தி என்ற சொல்லுடன் இணைந்தேயிருக்கும்.     பவணந்தி எழுதிய நன்னூல், தொல்காப்பியத்தை அடிப்படையாகக்கொண்டது. எழுத்தின் பிறப்பு :     தமிழ் எழுத்துக்கள் உச்சரிக் கப்படும்போது, அவை நம் உடலின் எந்த பாகத்திலிருந்து உற்பத்தியாகின்றன என்பதை இவ்வாறு விளக்குகிறார்.     "அவ்வழி,     ஆவி இடைமை இடமிட றாகும்     மேவு மென்மைமூக் குறம்பெறும் வன்மை"     பொருள் :     உயிரெழுத்துக்களும் ய,ர,ல,வ,ழ,ள எனும் இடையின எழுத்துக்களும் கழுத்தில் (தொண்டை)தோன்றும்.     ங,ஞ,ண,ந,ம,ன எனும் மெல்லின எழுத்துக்கள் மூக்கில் தோன்றும்.     க,ச,ட,த,ப,ற எனும் வல்லின எழுத்துக்கள் நெஞ்சிலிருந்து பிறக்கும்.     ஆயுத எழுத்து தலையில் பிறப்பெடுக்கும். ...

கலை வாணியே!

மங்கல நல்வீணை        கரங்களில் ஏந்தியே  கல்வியருள் புரிவாய்        கலை வாணியே... மெய்ஞ்ஞானப் பார்வை        யொளி தினம் வீசியே.. அஞ்ஞானம் போக்கிடுவாய்        கலை வாணியே... வெண்தாமரையி லமர்ந்த        செந்தாமரையே... சான்றோர் நாவிலமர்ந்த        விண்தாமரையே... உலகொளி நீக்கி        அனைவர்க்கும் உள்ளோளி  அருள்வாய்        கலைவாணியே..!