முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வாசுகி உமாநாத்

வாசுகி உமாநாத்

உங்களில் எத்தனை பேருக்கு வாசுகி உமாநாத்தைத்தெரியும்?
பெண்ணியம் தொடர்பான தொலைக்காட்சி விவாதங்களில் கலந்துகொண்டு, கருத்துக்களைத்தெளிவாகவும், ஆணித்தரமாகவும் எடுத்துவைப்பதில் வல்லவர்.

அவரைப்பற்றி தெரிந்துகொண்டு உங்களுக்கு என்ன பயன் கிடைக்கப்போகிறதென்று எனக்குத்தெரியாது.
ஆனால், தொலைக்காட்சியில் அவரைப்பார்க்கும்போது, என் நினைவுகள் என்னைப்பின்னோக்கி அழைத்துச்செல்வதைப்பற்றி, எழுதியே ஆகவேண்டும்.

 1980 ஆம் ஆண்டு (என்று நினைக்கிறேன்) நடைபெற்ற சட்டமன்றத்தேர்தலில் CPI(M) சார்பாக வாசுகி உமாநாத்தின் தந்தை, திரு R.உமாநாத் அவர்கள்  எங்கள் நாகப்பட்டினம் சட்டமன்றத்தொகுதியில் போட்டியிட்டார். அப்போது, நாங்கள் வசித்த வடக்கு நல்லியான் தோட்டத்திற்கு, பிரச்சாரத்திற்கு வந்திருந்தார் வாசுகி அவர்கள்.

தெற்கு நல்லியான் தோட்டம் என்பது, ஒரு முழுத்தெரு, ஒரு குறுக்குத்தெரு, ஒரு குறுக்குச்சந்து.
வடக்கு நல்லியான் தோட்டம் என்பது, ஒன்னரைத்தெரு, ஒரு குறுக்குச்சந்து, மகம் ரோட்டின் தெற்கு ஓரம்.
ஆஸ்பத்திரி ரோட்டின் கிழக்கு ஓரம், இரண்டுக்கும் பொதுவானது.

ஒருநாள்,மேல்பகுதி மூடப்படாத ஒரு ZEEP, சிங்கமாகாளியம்மன் கோயிலருகில் வந்து நின்றது. சட்டென்று ஒரு கூட்டம் கூடியது. நெடுநெடுவென்று நீண்டு வளர்ந்திருந்த வாசுகி, ஜீப்பில் நின்றபடி பேசியபோது பாதி உடம்பு ஜீப்புக்கு மேலேயிருந்தது. சிவப்புதான் என்றாலும், அப்பா அளவுக்கு இல்லை என்று பேசிக்கொண்டார்கள். உச்சி வெய்யிலில் வேர்க்க வேர்க்க, அவ்வப்போது தாவணியையும் சரிசெய்துகொண்டு அழகாகப்பேசினார். எங்கள் பாமர மக்கள், உரிய மரியாதையோடு, அவர் பேச்சை கேட்டுக்கொண்டனர்.

இன்னொருநாள் அவருடைய அப்பா வந்தார். யாரிடமோ வாங்கி, நடராஜனின் அம்மாவின் ஆரத்தித்தட்டில் ஐம்பது ரூபாய் வைத்ததாய் ஞாபகம்.

நாகப்பட்டினத்தில் cpi (m) க்கு செல்வாக்கு இருந்தபோதும், எங்கள் 15 வது வார்டில் சொல்லிக்கொள்ளும்படியில்லை. அநத எட்டு வயதில் எனக்குத்தெரிந்து எங்கள் அப்பா மட்டும்தான் மார்க்ஸிஸ்ட்.நானும் அண்ணனுமே ADMK.

ஒருநாள், பெரிய கூட்டமாக, வீடுவீடாக பிரச்சாரம் செய்யக்கிளம்பினார்கள். கூட்டணிக்கட்சிக்காக நானும் அண்ணனும் இணைந்துகொண்டோம். இருவருக்கும் நோட்டீஸ் கொடுக்கும் வேலை. எங்க அப்பா எல்லோரையும் கும்பிட்டுக்கொண்டே வந்தார். தெருவெல்லாம் சுற்றி கூக்ஸ் ரோடு (COOKS ROAD) வழியாக பீச் ரோட்டில் ஏறி, நான் படித்துக்கொண்டிருந்த அந்தோணியார் ஸ்கூலை பெருமையோடு கடந்து பிரச்சாரத்தை முடித்தோம்.

அப்பா, சைக்கிள் வீலின் ரிம்மில் சிவப்பு காகிதத்தைச்சுற்றி, உள்ளே ஒரு முக்கோணமும், அதனுள்ளே அரிவாள் சுத்தி நட்சத்திர சின்னத்தையும் பொருத்தி,
மெய்ன் ரோட்டின் ஓரத்தில் வைத்தார்.

ரிட்டையர்ட் வாத்தியார் முருகையன், உமாநாத் ஜெயிச்சிட்டா எல்லாருக்கும்  குடும்பக்கட்டுப்பாடு அவசியம்னு உங்க அப்பா சொல்றாருடா என்றார்.
முக்கோணத்தை தலைகீழா வச்சா கிண்டலடிக்காம இருப்பாங்களா? என்று உணர பல வருடங்கள் ஆனது.

பின்குறிப்பு : உமாநாத் அவர்கள் வெற்றி பெற்றார்.
புரட்சித்தலைவர் ஆட்சி அமைத்தார்.

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உவமையணி

உவமை அணிக்கான இலக்கணம் : ஒரு பொருளை அல்லது செயலை, எடுத்துக்காட்டோடு சிறப்பாகச் சொல்வதே உவமையணி ஆகும். மேலும், உவமை அணியில் "போல" என்னும் உவம உருபு வெளிப்படையாக அமைந்திருக்கும். உவமையணி பற்றிய விளக்கத்தை, என் மகனின் பத்தாம் வகுப்பு தமிழ்க்குறிப்பேட்டில் தற்செயலாகக் கண்டேன். இனி, குறிப்பேட்டில் உள்ளபடி. கீழ்க்கண்ட குறளில் பயின்றுவரும் அணி எது? கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து அணிச்சுட்டல் :     இதில் உவமையணி பயின்று  வந்துள்ளது. அணியிலக்கணம் :     ஒரு பொருளை அதே தன்மையுடைய மற்றொரு பொருளோடு ஒப்பிட்டு கூறுவது உவமையணி எனப்படும்.    இதில் உவமை, உவமேயம், உவம உருபு வெளிப்படையாய் வரும். குறள் விளக்கம் :     வாய்ப்பற்ற காலத்தில் கொக்கைப்போல் அமைதியாக காத்திருத்தல் வேண்டும். உரிய காலம் வாய்த்ததும் கொக்கைப்போல் விரைந்து செயலைச் செய்து முடித்தல் வேண்டும். பொருத்தம் உவமானம் :         "கொக்கொக்க கூம்பும் பருவத்து"     வாய்ப்பற்ற காலத்தில் கொ...

வினைமுற்று விகுதி

    ஒருநாள் கலைஞர் தொலைக்காட்சியில், பேராசிரியர் சுப.வீ. அவர்கள், தான் படித்த ஒரு புத்தகத்தின் மீதான தனது மதிப்புரையை வழங்கிக்கொண்டிருந்தார். புத்தகத்தின் ஆசிரியர், தமிழில்  சில தேவையற்ற இலக்கண விதிகள் உள்ளதாகவும், மலையாளப் பேச்சு வழக்கு போல அவை மாற்றப்படவேண்டும் என்றும் எழுதியிருந்ததை பேராசிரியர் அவர்களும் ஏற்றுக்கொள்வது போல பேசியது, எனக்கு சற்றே அதிர்ச்சி ஏற்படுத்துவதாக இருந்தது. குறிப்பாக வினைமுற்று விகுதிகளைப் பற்றித்தான் பேசினார்.

அகரம்

" அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு " ஒரு திருக்குறள் சொல்லேன் என்று யாராவது சொன்னால், நமக்கு உடனே நினைவுக்கு வருவது இந்த குறள் தான். இந்த குறளைப் பற்றி நமக்கு என்னென்ன வெல்லாம் தெரியும் என்று கொஞ்சம் பார்க்கலாமா?