முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

காவலர் தேர்வு

சில நாட்களுக்கு முன் தினத்தந்தி நாளிதழில், காவலர் தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் வெளியாகியிருந்தன. அதில், கீழ்க்கண்ட வினா ஒன்று இடம் பெற்றிருந்தது. கேள்வி : ஒரு தேர்வில், வினாத்தாளில் 90 கேள்விகள் இடம் பெற்றுள்ளன. அனைத்து கேள்விகளுக்கும் கட்டாயம் பதிலளிக்கவேண்டும். ஒவ்வொரு சரியான பதிலுக்கும் 2 மதிப்பெண்கள் வழங்கப்படும். ஒவ்வொரு தவறான பதிலுக்கும் 3 மதிப்பெண்கள் கழிக்கப்படும். தேர்வை எழுதிய ஒரு மாணவன், 15 மதிப்பெண்கள் பெறுகிறான் எனில், அந்த மாணவன் எத்தனை கேள்விகளுக்கு சரியான விடையளித்திருப்பான்? இந்தக்கேள்விக்கு விடையாக 4 வாய்ப்புகள் (options) வழங்கப்பட்டிருந்தன. அந்த வாய்ப்புகளைக் கொண்டு சிற்சில மனக்கணக்குகளோடு, விடையை யூகித்து எழுதமுடியலாம். வாய்ப்புகள் ஏதுமின்றி, எங்கள் வீட்டின் உரிமையாளர், திரு. ஸ்ரீநிவாசன் எவ்வாறு விடையைக் கண்டுபிடித்தார்? முதலில், சரியான விடைகள்= 60 என்றால், தவறானவை = 30                             ...

நீட் (NEET) தேர்வு

நீட் (NEET) தேர்வு : நரியின் சாயம் வெளுத்தது ! in கல்வி, தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம், நீதிமன்றம், புதிய ஜனநாயகம், மருத்துவம் by வினவு , September 30, 2016 தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட்) தகுதியும் திறமையும் கொண்ட மாணவர்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம் என்று உச்சநீதி மன்றம் உருவாக்கிய தோற்றம், வெறும் வார்த்தை ஜாலமென்றும் மோசடியென்றும் அம்பலமாகிவிட்டது.

காஷ்மீர் இடைத்தேர்தல்

காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் பாராளுமன்ற தொகுதிக்கு 2014– ம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் ஆளும் மக்கள் ஜனநாயக கட்சி வேட்பாளராக தாரிக் ஹமீது காரா போட்டியிட்டு வெற்றி பெற்றார் . கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தை சேர்ந்த பர்கான் வானி கொல்லப்பட்டதால் காஷ்மீரில் வன்முறை வெடித்தது . இந்த வன்முறை, தொடர்ந்து பல நாட்கள் நீடித்தது . இதை தடுக்க ஆளும் கட்சி தவறியதாக கூறி தாரிக் ஹமீது காரா தன்னுடைய எம் . பி . பதவியை ராஜினாமா செய்தார் . பின்னர் அவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார் . இதையடுத்து ஸ்ரீநகர் பாராளுமன்ற தொகுதிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி இடைத்தேர்தல் நடந்தது . இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்ததாக ஊடகங்கள் மூலம் தெரிவிக்கப்பட்டது . எனினும் அதையும் மீறி பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தன . பல்வேறு இடங்களில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவங்களில் 8 பேர் பலியாகினர் . பொதுமக்கள் பலர் காயம் அடைந்தனர் . பல வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன . ஸ்ரீநகர் தொகுதியில் தொட...

பூக்கள் - வண்டுகள்

ஒரு தோட்டத்தில் சில பூக்கள் பூத்திருந்தன. அங்கே வந்த வண்டுகள், அந்தப் பூக்களில் உட்கார்ந்தன. ஒரு வண்டு மட்டும், அமர்வதற்கு ஒரு பூ இல்லாமல் தவித்தது. எனவே, வண்டுகள் எல்லாம் சேர்ந்து ஒரு யோசனை செய்தன. ஒவ்வொரு பூவிலும் இரண்டு இரண்டு பேராக உட்காரலாம் என்று முடிவு செய்து, அவ்வாறே செய்தன. முடிவில் ஒரு பூ மட்டும், தன்மேல் அமர்வதற்கு வண்டு ஏதும் இல்லாமல் தனியே புலம்பிக்கொண்டிருந்தது. அப்படியென்றால், அந்தத் தோட்டத்தில் எத்தனை பூக்கள் பூத்திருந்தன? அந்தத் தோட்டத்தி ற்கு எத்தனை வண்டுகள் வந் திருந்தன ? இந்தக் கணக்கை ‘அல்ஜீப்ரா’ வின் (Algebra) உதவியோடு அணுக முயற்சிப்போம். வண்டுகள் தனித்தனியே உட்காரும்போது : வண்டுகள் எண்ணிக்கை x என்க. பூக்கள் எண்ணிக்கை y என்க. பூக்களின் எண்ணிக்கையை விட, வண்டுகளின் எண்ணிக்கை 1(ஒன்று) அதிகம். எனவே, X – Y =1    ----------1 ஜோடிகளாக உட்காரும்போது : ஜோடிகளின் எண்ணிக்கை X/2 என்க பூக்கள் எண்ணிக்கை Y என்க. ஜோடிகளின் எண்ணிக்கையை விட , பூக்களின் எண்ணிக்கை 1( ஒன்று) அதிகம். எனவே , X/2 – Y = -1 ---------2 X   – Y = ...