நண்பர் எஸ்.லோகநாதன், சமீபத்தில் படித்த நூலின் சிறுபகுதியை நமக்கு மின்னஞ்சல் செய்துள்ளார். அவர் அனுப்பிய செய்தி, அப்படியே தரப்படுகிறது. இந்திய வானம்-21 எஸ்.இராமகிருஷ்ண ஓவியங்கள்: ரமேஷ் ஆச்சார்யா இட்லி ஒழிக! ஒடிசாவில் உள்ள சில்கா ஏரியைக் காண்பதற் காகச் சென்றிருந்தேன். மிகப் பெரிய ஏரி அது. படகில் சென்றால் டால்பின்கள் துள்ளுவதைக் காணலாம். கடலைப்போல கண்கொள்ள முடியாத பரப்பளவு தண்ணீர் விரிந்துகிடக்கிறது. குளிர்காலத்தில் வெளிநாட்டுப் பறவைகள் இங்கே கூட்டம் கூட்டமாக வந்து சேர்கின்றன. சில்கா ஏரியில் சிறியதும் பெரியதுமாக நிறையத் தீவுகள் உள்ளன. ஒன்றில் பெரிய காளி கோயில் இருக்கிறது. காலை 10 மணி அளவில் படகில் ஏறி, மதியம் வரை சுற்றிக்கொண்டே இருந்தோம். டால்பின்கள், கண்கள் முன்னே துள்ளியோடி மறைந்தன. சில்கா ஏரி கடலில் சங்கமிக்கும் சத்படா பகுதிக்குப் போய் இறங்கி, மணலில் நடந்து சுற்றினோம். மதியம் 2:30 மணி இருக்கும். நல்ல பசி. சில்கா கெஸ்ட் ஹவுஸில் சாப்பிடச் சென்றோம். ஆட்கள் யாருமே இல்லை. காத்திருக்கவைத்து, சாப்பிடுவதற்காக ரொட்டியும் தால் மக்கனியும் கடாய் பனீரும் தந்தார்கள். அவ்வளவு நேரம் காத்தி...
பல் சுவை தமிழ் இணையம். இலக்கியம், இலக்கணம், கவிதைகள், சிந்தனைகள், கணித விளையாட்டுகள் அனைத்தும் காணக்கிடைக்கும்.