முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

இந்திய வானம்

நண்பர் எஸ்.லோகநாதன், சமீபத்தில் படித்த நூலின் சிறுபகுதியை நமக்கு மின்னஞ்சல் செய்துள்ளார். அவர் அனுப்பிய செய்தி, அப்படியே தரப்படுகிறது. இந்திய வானம்-21 எஸ்.இராமகிருஷ்ண ஓவியங்கள்: ரமேஷ் ஆச்சார்யா இட்லி ஒழிக! ஒடிசாவில் உள்ள சில்கா ஏரியைக் காண்பதற் காகச் சென்றிருந்தேன். மிகப் பெரிய ஏரி அது. படகில் சென்றால் டால்பின்கள் துள்ளுவதைக் காணலாம். கடலைப்போல கண்கொள்ள முடியாத பரப்பளவு தண்ணீர் விரிந்துகிடக்கிறது. குளிர்காலத்தில் வெளிநாட்டுப் பறவைகள் இங்கே கூட்டம் கூட்டமாக வந்து சேர்கின்றன. சில்கா ஏரியில் சிறியதும் பெரியதுமாக நிறையத் தீவுகள் உள்ளன. ஒன்றில் பெரிய காளி கோயில் இருக்கிறது. காலை 10 மணி அளவில் படகில் ஏறி, மதியம் வரை சுற்றிக்கொண்டே இருந்தோம். டால்பின்கள், கண்கள் முன்னே துள்ளியோடி மறைந்தன. சில்கா ஏரி கடலில் சங்கமிக்கும் சத்படா பகுதிக்குப் போய் இறங்கி, மணலில் நடந்து சுற்றினோம். மதியம் 2:30 மணி இருக்கும். நல்ல பசி. சில்கா கெஸ்ட் ஹவுஸில் சாப்பிடச் சென்றோம். ஆட்கள் யாருமே இல்லை. காத்திருக்கவைத்து, சாப்பிடுவதற்காக ரொட்டியும் தால் மக்கனியும் கடாய் பனீரும் தந்தார்கள். அவ்வளவு நேரம் காத்தி...

ஆட்டுக்குட்டி

 சமீபத்தில், 'கெத்து'  படத்திற்கு வரிவிலக்கு அளிப்பது தொடர்பான வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்தது. கெத்து என்ற சொல் , தமிழே அல்ல என்று தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது .கெத்து என்ற சொல், திருப்புகழில் உள்ளது என்று தயாரிப்பாளர் தரப்பில் வாதிடப்பட்டது. நிறைய பிறமொழிச்சொற்கள் தமிழில் கலந்துள்ளன. அவற்றையெல்லாம் தமிழாகக்கருதமுடியாது என்று சொல்லி எடுத்துக்காட்டிற்கு மேசை என்ற சொல் அரசின் தமிழ்த்துறை  சார்பில் சொல்லப்பட்டது. கொடுமை என்னவென்றால், மேசை என்ற சொல் தூய தமிழ்ச்சொல்லாகும். சற்று உயர்ந்த இடத்தை அல்லது பகுதியை 'மிசை' என்ற வேர்ச்சொல் குறிக்கும். 'சிந்து நதியின் மிசை' என்பதில் மிசை என்பது, நதியின் அருகே உள்ள, நதியைவிட சற்று உயர்ந்த கரைப்பகுதியைக் குறிக்கும். தமிழை விட வடமொழியே சிறந்தது என்று நினைத்த ஏமாளிகள் இன்றைவிட முற்காலத்தில் அதிகம் இருந்தனர்.  அவர்கள், தேவையின்றி   ஜ, ஷ, ஸ, ஹ  போன்ற எழுத்துக்களை தமிழ்ச்சொற்களில் சேர்த்துப்பேசினர்.  அவர்கள்தான் மேசையை 'மேஜை' ஆக்கினர். சமீபத்திய தமிழ் ஆர்வலர்கள், table என்ற சொல்லுக்கு , வடமொழியில் ...

வர்க்க சிந்தனை

வர்க்கங்கள் சென்ற பதிவில் வாசுகி உமாநாத் பற்றி எழுதியதால், இந்த பதிவில் வர்க்கங்களைப்பற்றி எழுதும்படி ஆகிவிட்டது. 16 என்ற வர்க்க எண்ணிலிருந்து தொடங்குவோம். 16+9=25.  25 ஒரு வர்க்க எண். 25+11=36 36+13=49 49+15=64 நான் சொல்ல வந்த செய்தி புரிந்துகொள்ளப்பட்டிருக்கும் என்று நம்புகிறேன். இது என்னுடைய சின்ன வயது ஆராய்ச்சி(?). அடுத்தடுத்த இரு வர்க்க எண்களின் வித்தியாசம் தெரிந்தபின் அதற்கும் அடுத்த வர்க்க எண்ணைக் கண்டுபிடித்துவிடலாம். இரு நாட்களுக்கு முன், இந்த ஆராய்ச்சியில் மேலும் ஒரு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது, ஒரு எண், வர்க்க எண் என்று தெரிந்தால் போதும். அதற்கடுத்த எண்ணைக் கண்டுபிடிக்கமுடியும். மீண்டும் 16 ஐ எடுத்துக்கொள்வோம். 16 இன் வர்க்கமூலம் 4. 4 X 2 = 8 8 + 1 = 9 16 + 9 = 25. 25 ஒரு வர்க்க எண். 64 இன் வர்க்கமூலம் 8. 8 X 2 =16 16 + 1 = 17 64 + 17 = 81. போரடித்துவிட்டேனா? வர்க்கங்களைப்பற்றி சிந்திப்பது நன்மை தருவதே. நன்றி! அன்புடன், தே.சிவகுமார்.

வாசுகி உமாநாத்

வாசுகி உமாநாத் உங்களில் எத்தனை பேருக்கு வாசுகி உமாநாத்தைத்தெரியும்? பெண்ணியம் தொடர்பான தொலைக்காட்சி விவாதங்களில் கலந்துகொண்டு, கருத்துக்களைத்தெளிவாகவும், ஆணித்தரமாகவும் எடுத்துவைப்பதில் வல்லவர். அவரைப்பற்றி தெரிந்துகொண்டு உங்களுக்கு என்ன பயன் கிடைக்கப்போகிறதென்று எனக்குத்தெரியாது. ஆனால், தொலைக்காட்சியில் அவரைப்பார்க்கும்போது, என் நினைவுகள் என்னைப்பின்னோக்கி அழைத்துச்செல்வதைப்பற்றி, எழுதியே ஆகவேண்டும்.  1980 ஆம் ஆண்டு (என்று நினைக்கிறேன்) நடைபெற்ற சட்டமன்றத்தேர்தலில் CPI(M) சார்பாக வாசுகி உமாநாத்தின் தந்தை, திரு R.உமாநாத் அவர்கள்  எங்கள் நாகப்பட்டினம் சட்டமன்றத்தொகுதியில் போட்டியிட்டார். அப்போது, நாங்கள் வசித்த வடக்கு நல்லியான் தோட்டத்திற்கு, பிரச்சாரத்திற்கு வந்திருந்தார் வாசுகி அவர்கள். தெற்கு நல்லியான் தோட்டம் என்பது, ஒரு முழுத்தெரு, ஒரு குறுக்குத்தெரு, ஒரு குறுக்குச்சந்து. வடக்கு நல்லியான் தோட்டம் என்பது, ஒன்னரைத்தெரு, ஒரு குறுக்குச்சந்து, மகம் ரோட்டின் தெற்கு ஓரம். ஆஸ்பத்திரி ரோட்டின் கிழக்கு ஓரம், இரண்டுக்கும் பொதுவானது. ஒருநாள்,மேல்பகுதி மூடப்படாத ...

பழமொழி அறிவோம்!

1.உயர உயரப்பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.    A hog is armour but still hog. 2.சூடு கண்ட பூனை அடுப்பண்டை போகாது.    A burnt child dreads fire. 3.புயலுக்குப்பின் அமைதி.    A calm before the storm. 4.ஒரு வேலைக்கு இரு வேலை.    A work ill done must be twice done. 5.சிறு துறும்பும் பல் குத்த உதவும்.    All fish that comes to the best.

மாணவன் திறமை

மாணவன் திறமை : ஒரு மாணவனின் கல்விப்புலமை எப்போது முழுமை பெறுகிறது என்று பவணந்தி முனிவர் கீழ்க்கண்டவாறு விளக்குகிறார். “ஒருகுறி கேட்போன் இருகால் கேட்பின் பெருக நூலில் பிழைபா டிலனே”   (42) ஒரு பாடத்தை ஒருமுறைக்கு இருமுறை கேட்டவன் பெரும்பாலும் பிழையில்லாமல் கற்றுக்கொள்வான். ***** “முக்கால் கேட்பின் முறையறிந் துரைக்கும்”   (43) ஒரு பாடத்தை மூன்று முறை கேட்டவன் தான் கற்றதோடு, பிறர்க்கும் முறையோடு கற்றுத்தரும் திறமை பெறுவான். ***** “ஆசான் உரைத்தது அமைவரக் கொளினும் காற்கூ றல்லது பற்றல னாகும்”    (44) ஆசான் உரைத்ததை குற்றமறக்கற்றவன் எனினும், அவருடைய திறமையில் கால் பங்கையே பெற்றிருப்பான். அதற்கதிகமாகப்பெற முடியாது. ***** “அவ்வினை யாளரொடு பயில்வகை ஒருகால் செவ்விதின் உரைப்ப அவ்விரு காலும் மையறு புலமை மாண்புடைத் தாகும்”   (45) உடன் பயிலும் மாணவர்களோடு சேர்ந்து பயில்வதால், மேலும் கால் பங்கு அறிவு பெறுவான். தானே மற்றவர்க்கும் பாடம் சொல்லுதலால், முழுப்புலமை பெறுவான்.

இரட்டுற மொழிதல்

ஆடும் குதிரையும் கொம்புஇலையே  தீனிதின்னும்  கொண்டதன்மேல்  வெட்டுதலால் அம்புவியில்  நல்நடையது  ஆதலால் - உம்பர்களும் தேடுநல்  சோலைத்  திருமலைரா  யன்வரையில் ஆடும்  குதிரையும்நேர்  ஆம்.                                                -கவி  காளமேகம். (கி.பி. 15ஆம் நூற்றாண்டு) உம்பர்கள் - தேவர்கள் தேவர்களும் விரும்பி வரக்கூடிய, சோலைகள் நிறைந்த திருமலைராயன் மலையில் ஆடும் குதிரையும் சமமாகும். ஆடு :            நுனிக்கொம்பில் உள்ள இலைகளை இரையாகத்தின்னும். (கொம்புஇலையே  தீனி) இடையனிடமிருந்து விலைக்கு வாங்கிய பிறகு, இறைச்சிக்காக வெட்டப்படும். (தன்மேல்  வெட்டுதலால்)  நல்ல கால்நடைச்செல்வமாகும். (நல்நடையது) குதிரை :    ...