முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

வர்க்க சிந்தனை

வர்க்கங்கள் சென்ற பதிவில் வாசுகி உமாநாத் பற்றி எழுதியதால், இந்த பதிவில் வர்க்கங்களைப்பற்றி எழுதும்படி ஆகிவிட்டது. 16 என்ற வர்க்க எண்ணிலிருந்து தொடங்குவோம். 16+9=25.  25 ஒரு வர்க்க எண். 25+11=36 36+13=49 49+15=64 நான் சொல்ல வந்த செய்தி புரிந்துகொள்ளப்பட்டிருக்கும் என்று நம்புகிறேன். இது என்னுடைய சின்ன வயது ஆராய்ச்சி(?). அடுத்தடுத்த இரு வர்க்க எண்களின் வித்தியாசம் தெரிந்தபின் அதற்கும் அடுத்த வர்க்க எண்ணைக் கண்டுபிடித்துவிடலாம். இரு நாட்களுக்கு முன், இந்த ஆராய்ச்சியில் மேலும் ஒரு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது, ஒரு எண், வர்க்க எண் என்று தெரிந்தால் போதும். அதற்கடுத்த எண்ணைக் கண்டுபிடிக்கமுடியும். மீண்டும் 16 ஐ எடுத்துக்கொள்வோம். 16 இன் வர்க்கமூலம் 4. 4 X 2 = 8 8 + 1 = 9 16 + 9 = 25. 25 ஒரு வர்க்க எண். 64 இன் வர்க்கமூலம் 8. 8 X 2 =16 16 + 1 = 17 64 + 17 = 81. போரடித்துவிட்டேனா? வர்க்கங்களைப்பற்றி சிந்திப்பது நன்மை தருவதே. நன்றி! அன்புடன், தே.சிவகுமார்.

வாசுகி உமாநாத்

வாசுகி உமாநாத் உங்களில் எத்தனை பேருக்கு வாசுகி உமாநாத்தைத்தெரியும்? பெண்ணியம் தொடர்பான தொலைக்காட்சி விவாதங்களில் கலந்துகொண்டு, கருத்துக்களைத்தெளிவாகவும், ஆணித்தரமாகவும் எடுத்துவைப்பதில் வல்லவர். அவரைப்பற்றி தெரிந்துகொண்டு உங்களுக்கு என்ன பயன் கிடைக்கப்போகிறதென்று எனக்குத்தெரியாது. ஆனால், தொலைக்காட்சியில் அவரைப்பார்க்கும்போது, என் நினைவுகள் என்னைப்பின்னோக்கி அழைத்துச்செல்வதைப்பற்றி, எழுதியே ஆகவேண்டும்.  1980 ஆம் ஆண்டு (என்று நினைக்கிறேன்) நடைபெற்ற சட்டமன்றத்தேர்தலில் CPI(M) சார்பாக வாசுகி உமாநாத்தின் தந்தை, திரு R.உமாநாத் அவர்கள்  எங்கள் நாகப்பட்டினம் சட்டமன்றத்தொகுதியில் போட்டியிட்டார். அப்போது, நாங்கள் வசித்த வடக்கு நல்லியான் தோட்டத்திற்கு, பிரச்சாரத்திற்கு வந்திருந்தார் வாசுகி அவர்கள். தெற்கு நல்லியான் தோட்டம் என்பது, ஒரு முழுத்தெரு, ஒரு குறுக்குத்தெரு, ஒரு குறுக்குச்சந்து. வடக்கு நல்லியான் தோட்டம் என்பது, ஒன்னரைத்தெரு, ஒரு குறுக்குச்சந்து, மகம் ரோட்டின் தெற்கு ஓரம். ஆஸ்பத்திரி ரோட்டின் கிழக்கு ஓரம், இரண்டுக்கும் பொதுவானது. ஒருநாள்,மேல்பகுதி மூடப்படாத ...

பழமொழி அறிவோம்!

1.உயர உயரப்பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.    A hog is armour but still hog. 2.சூடு கண்ட பூனை அடுப்பண்டை போகாது.    A burnt child dreads fire. 3.புயலுக்குப்பின் அமைதி.    A calm before the storm. 4.ஒரு வேலைக்கு இரு வேலை.    A work ill done must be twice done. 5.சிறு துறும்பும் பல் குத்த உதவும்.    All fish that comes to the best.

மாணவன் திறமை

மாணவன் திறமை : ஒரு மாணவனின் கல்விப்புலமை எப்போது முழுமை பெறுகிறது என்று பவணந்தி முனிவர் கீழ்க்கண்டவாறு விளக்குகிறார். “ஒருகுறி கேட்போன் இருகால் கேட்பின் பெருக நூலில் பிழைபா டிலனே”   (42) ஒரு பாடத்தை ஒருமுறைக்கு இருமுறை கேட்டவன் பெரும்பாலும் பிழையில்லாமல் கற்றுக்கொள்வான். ***** “முக்கால் கேட்பின் முறையறிந் துரைக்கும்”   (43) ஒரு பாடத்தை மூன்று முறை கேட்டவன் தான் கற்றதோடு, பிறர்க்கும் முறையோடு கற்றுத்தரும் திறமை பெறுவான். ***** “ஆசான் உரைத்தது அமைவரக் கொளினும் காற்கூ றல்லது பற்றல னாகும்”    (44) ஆசான் உரைத்ததை குற்றமறக்கற்றவன் எனினும், அவருடைய திறமையில் கால் பங்கையே பெற்றிருப்பான். அதற்கதிகமாகப்பெற முடியாது. ***** “அவ்வினை யாளரொடு பயில்வகை ஒருகால் செவ்விதின் உரைப்ப அவ்விரு காலும் மையறு புலமை மாண்புடைத் தாகும்”   (45) உடன் பயிலும் மாணவர்களோடு சேர்ந்து பயில்வதால், மேலும் கால் பங்கு அறிவு பெறுவான். தானே மற்றவர்க்கும் பாடம் சொல்லுதலால், முழுப்புலமை பெறுவான்.

இரட்டுற மொழிதல்

ஆடும் குதிரையும் கொம்புஇலையே  தீனிதின்னும்  கொண்டதன்மேல்  வெட்டுதலால் அம்புவியில்  நல்நடையது  ஆதலால் - உம்பர்களும் தேடுநல்  சோலைத்  திருமலைரா  யன்வரையில் ஆடும்  குதிரையும்நேர்  ஆம்.                                                -கவி  காளமேகம். (கி.பி. 15ஆம் நூற்றாண்டு) உம்பர்கள் - தேவர்கள் தேவர்களும் விரும்பி வரக்கூடிய, சோலைகள் நிறைந்த திருமலைராயன் மலையில் ஆடும் குதிரையும் சமமாகும். ஆடு :            நுனிக்கொம்பில் உள்ள இலைகளை இரையாகத்தின்னும். (கொம்புஇலையே  தீனி) இடையனிடமிருந்து விலைக்கு வாங்கிய பிறகு, இறைச்சிக்காக வெட்டப்படும். (தன்மேல்  வெட்டுதலால்)  நல்ல கால்நடைச்செல்வமாகும். (நல்நடையது) குதிரை :    ...

கவி காளமேகம்

வினா விடைப்பாட்டு  இரட்டுற மொழிதல் மற்றும் வஞ்சப்புகழ்ச்சி அணிகளில் செய்யுட்களைப்பாடுவதில் புகழ் பெற்றவர் காளமேகப்புலவர் என்பது, நாமனைவரும் அறிந்ததே. அதேபோல், கேட்ட கேள்விக்கு, பொட்டிலடித்ததுபோல் விடையளிப்பதிலும் அவருக்கு நிகர் அவரே. ஸ்ரீரங்கத்தில், ஒரு வைணவர், 'பெருமாள் உலகத்தை உண்டபோது, சிவன் எங்கேயிருந்தார்' என்று காளமேகரிடம் கேட்டார். அதற்கு, "அருந்தினான் அண்டம்எலாம் அன்றுமால் ஈசன் இருந்தபடி ஏதுஎன்று இயம்பப் - பொருந்திப் பருங்கவளம் யானைகொளப் பாகன்அதன் மீதே இருந்தபடி ஈசன்இருந் தான்" என்று பதில் சொன்னார். 'பெருங்கவளமாகிய உணவை யானை உட்கொள்ளும்போது, யானையின் பாகன், யானையின்மீதே அமர்ந்திருந்ததுபோன்ற நிலையில் சிவனும் இருந்தார் ' என்பது பொருள். இந்த நேரத்தில் ஒரு கதை நினைவுக்கு வருகிறது. பொன்னியின் செல்வனில், கல்கி அவர்கள், கதைக்குள் கதையாக ஒரு கதை சொல்லியிருப்பார். சைவ,வைணவச்சண்டைகள் நிறைந்த ஒரு காலத்தில், ஒரு வைணவன், சிவன் கோயில் ஓரமாகச்சென்றுகொண்டிருந்தான். அப்போது, அவன் தலையில் ஒரு கல் வந்து விழுந்தது. கோபமாக நிமிர்ந்து பார்த்தான். கோயிலின...

காயங்கள் ஆறட்டும்

நம்மிருவருக்கும் புதிதல்ல நெருப்பு. ஒருவரையொருவர் வார்த்தைகளால் சுட்டுக்கொண்டோம். பார்வைகளால் எரித்துக்கொண்டோம். வெம்மை தாங்காமல் விலகிச்சென்றோம். பாதையில் சந்திக்க நேர்ந்தால் பழைய நினைவுகள் சுடும்.  *   *   * காதல் யாகம் செய்ததற்காக, சாதி ... நம் வீட்டுக்கூரையில் தீ வைத்தது. உன்னைக்காப்பற்ற நான் நினைத்தேன். எனவே... காதலைத்தொடர்ந்தேன். என்னைக்காப்பற்ற நீ நினைத்தாய். எனவே...உன் காதலை மறைத்தாய். அதன் பின், ஒருவரையொருவர் வார்த்தைகளால் சுட்டுக்கொண்டோம். பார்வைகளால் எரித்துக்கொண்டோம். வெம்மை தாங்காமல் விலகிச்சென்றோம். ஒருவழியாய்... நாமிருவரும் சேர்ந்து... காதலுக்குத்தீ வைத்தோம்.                                                 ...