வினா விடைப்பாட்டு இரட்டுற மொழிதல் மற்றும் வஞ்சப்புகழ்ச்சி அணிகளில் செய்யுட்களைப்பாடுவதில் புகழ் பெற்றவர் காளமேகப்புலவர் என்பது, நாமனைவரும் அறிந்ததே. அதேபோல், கேட்ட கேள்விக்கு, பொட்டிலடித்ததுபோல் விடையளிப்பதிலும் அவருக்கு நிகர் அவரே. ஸ்ரீரங்கத்தில், ஒரு வைணவர், 'பெருமாள் உலகத்தை உண்டபோது, சிவன் எங்கேயிருந்தார்' என்று காளமேகரிடம் கேட்டார். அதற்கு, "அருந்தினான் அண்டம்எலாம் அன்றுமால் ஈசன் இருந்தபடி ஏதுஎன்று இயம்பப் - பொருந்திப் பருங்கவளம் யானைகொளப் பாகன்அதன் மீதே இருந்தபடி ஈசன்இருந் தான்" என்று பதில் சொன்னார். 'பெருங்கவளமாகிய உணவை யானை உட்கொள்ளும்போது, யானையின் பாகன், யானையின்மீதே அமர்ந்திருந்ததுபோன்ற நிலையில் சிவனும் இருந்தார் ' என்பது பொருள். இந்த நேரத்தில் ஒரு கதை நினைவுக்கு வருகிறது. பொன்னியின் செல்வனில், கல்கி அவர்கள், கதைக்குள் கதையாக ஒரு கதை சொல்லியிருப்பார். சைவ,வைணவச்சண்டைகள் நிறைந்த ஒரு காலத்தில், ஒரு வைணவன், சிவன் கோயில் ஓரமாகச்சென்றுகொண்டிருந்தான். அப்போது, அவன் தலையில் ஒரு கல் வந்து விழுந்தது. கோபமாக நிமிர்ந்து பார்த்தான். கோயிலின...
பல் சுவை தமிழ் இணையம். இலக்கியம், இலக்கணம், கவிதைகள், சிந்தனைகள், கணித விளையாட்டுகள் அனைத்தும் காணக்கிடைக்கும்.