" நான் வந்துட்டேன்னு சொல்லு " என்று சூப்பர் ஸ்டார் குரல் கொடுத்ததும் அரங்கமே அதிர்கிறது. என்ன காரணம்? அவரது ரசிகர்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. ஆனால், தமிழ்நாட்டு ரசிகர்களைப் பற்றி பணம் பண்ணும் கும்பல் நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறது.
ஒருநாள் கலைஞர் தொலைக்காட்சியில், பேராசிரியர் சுப.வீ. அவர்கள், தான் படித்த ஒரு புத்தகத்தின் மீதான தனது மதிப்புரையை வழங்கிக்கொண்டிருந்தார். புத்தகத்தின் ஆசிரியர், தமிழில் சில தேவையற்ற இலக்கண விதிகள் உள்ளதாகவும், மலையாளப் பேச்சு வழக்கு போல அவை மாற்றப்படவேண்டும் என்றும் எழுதியிருந்ததை பேராசிரியர் அவர்களும் ஏற்றுக்கொள்வது போல பேசியது, எனக்கு சற்றே அதிர்ச்சி ஏற்படுத்துவதாக இருந்தது. குறிப்பாக வினைமுற்று விகுதிகளைப் பற்றித்தான் பேசினார்.