முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன், 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காட்டு நதி

காட்டு நதி   இந்தப்பயணம் குறிக்கோளில்லாமல் தொடங்கியதுதான்.              --------- என்னைப்பெற்றெடுத்த புனித வயிறு, சிறு குன்றுதான் என்றாலும் எனக்கதுதான் இமயம்.            --------- காதலனுடன் ஓடிவந்த கன்னிப்பெண்ணின் பயம் கலந்த ஆர்வம், நான் ஓடிவந்தபோது எனக்குமிருந்தது. பாறைகளில் குதித்தோடி வந்த எனக்கு, மலையடிவாரம் முடிந்ததும் திசை தெரியவில்லை. சரிவுகளில் திசை திருப்பப்பட்டேன். சமவெளிகளில் மனம் போனபடி பயணம் செய்தேன். வழிதவறிய குழந்தையிடம் பரிவுகாட்டும் பெரியவரைப்போல் அந்தக்காடுகள்தான் என்னை அரவணைத்தன. யாருக்கும் வழிவிடாத காடுகள், தலவனைக்கண்ட தொண்டரைப்போல் எனக்குப் பாதை தந்தன. என் இளமை முழுதும் அந்தக் காடுகளிலேயே கழிந்தது, பால காண்டம், ஆரண்ய காண்டம் இரண்டுமே எனக்கு சுந்தர காண்டம்தான். யுத்த காண்டமும் தொடங்கியது. நான் தடுக்கப்பட்டேன். திருப்பப்பட்டேன். திருடப்ப...