முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பொம்மை

  பொம்மை                                                                         - ஜெயகாந்தன்    அந்த வீதியிலேயே பெரிய வீடு கிருஷ்ண மந்திரம் . பெரிய வீடு என்றாலும் நாற்புறமும் மதிலால் வளைக்கப்பட்ட இந்தக் காலத்து பங்களா அல்ல ; பழைய காலத்து மாளிகை . வீட்டின் முன்புறம் சலவைக் கற்கள் பதித்த பெரிய திண்ணைகளும் ரேழியும் உண்டு . அந்த வீட்டுப் பெரியவரின் பேத்திக் குழந்தையாக ராணி பிறக்கும் வரை , திண்ணைகளும் ரேழியும் சுதந்திரமாகத்தான் இருந்தன . பேத்திக் குழந்தை தவழ ஆரம்பித்து , ஒருநாள் தவழ்ந்துகொண்டே வந்து வாசலில் இறங்கி விட்ட பிறகு , அதைப் பார்த்துக்கொண்டே வந்து வண்டியில் இறங்கிய பெரியவர் , குழந்தையை வாரியெடுத்துக்கொண்டு ...