தேவன் வருவாரா ? - ஜெயகாந்தன் பொழுது சாய்ந்து வெகு நேரமாகிவிட்டது . கூலி வேலைக்குப் போயிருந்த ' சித்தாள் ' பெண்கள் எல்லோரும் வீடு திரும்பி விட்டார்கள் . இன்னும் அழகம்மாளை மட்டும் காணவில்லை . குடிசைக்குள் … தனக்கும் அழகம்மாளுக்கும் சோறு பொங்கி , குழம்பு காய்ச்சும் வேலையில் … அடுப்புப் புகையில் குனிந்திருந்த கிழவி ஆரோக்கியம் முந்தானையில் முகத்தைத் துடைத்துக்கொண்டு , குடிசைக்கு வெளியே வந்து தலை நிமிர்ந்து பார்க்கும்போது நிலவு கிளம்பி இருந்தது . ' நேரம் இருட்டிப் போச்சுதே , இந்தப் பொண்ணு எங்கே போனா ?" கிழவிக்கு நெஞ்சு படபடத்தது . இவ்வளவு நேரமாகியும் அவள் வீடு வந்து சேராமலிருந்ததில்லை . சேரித் தெருவில் யாரோ போவது தெரிந்தது . " அதாரு ? சின்னப் பொண்ணா ... ஏ , சின்னப் பொண்ணு ' எங்க அழகம்மா எங்கே ? உங்க கூட வரலியா ?...." " நாங்கல்லாம் ஒண்ணாத்தான் வந்தோம் ஆயா ..... வழியிலே எங்கனாச்சும் பூட்டாளோ என்னமோ , தெரிலியே ....." குடிசையின் கதவை இழுத்து மூடிவிட்டு , தெருவில் இறங்கி...
பல் சுவை தமிழ் இணையம். இலக்கியம், இலக்கணம், கவிதைகள், சிந்தனைகள், கணித விளையாட்டுகள் அனைத்தும் காணக்கிடைக்கும்.