வேலைக்காரன் காதலா காதலா என்ற திரைப்படத்தில், கமல்ஹாசன், "முருகர் கையில்கூடத்தான் வேல் இருக்கிறது. அதனால் அவரை வேலக்காரன் (வேலைக்காரன்) என்று சொல்ல முடியுமா?" என்று கேட்பதாக ஒரு வசனம் வரும். பாரதி போன்ற கவியுள்ளங்கொண்ட மெய்யன்பர்களுக்கு வேண்டுமானால் கண்ணன் போன்ற கடவுளரும் சேவகராகலாம். நம்மைப்போன்ற சாதாரணர், முருகனை வேலைக்காரன் என்று சொல்ல முடியுமா? கண்டிப்பாக முடியாது. ஆனால், வேளக்காரன் என்று சொல்லலாம். எப்படி? வேளக்காரன் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், தஞ்சாவூரில், ஓரிரவுப்பொழுதில், கோட்டையின் பிரதான வாசலில் ஆதித்தகரிகாலனின் தூதன் வந்தியத்தேவன் கோட்டையை நோட்டம் பார்த்தபடி நின்றுகொண்டிருந்தான். அப்போது, வாசல் வழியே, புழுதியைக்கிளப்பிக்கொண்டு ஒரு குதிரைப்படை, புயல்போல் வெளியேறியது. குதிரை மேலிருந்த வீரர்கள் ஏக களேபரம் செய்தபடி வந்தனர். மரியாதையோடு வீதியின் ஓரமாய் நின்ற மக்களிடம் வம்பிழுத்தபடியும், கடைகளில் இருந்த பொருட்களையெடுத்து விளையாண்டும், வீணடித்தும், கேலியும் கிண்டலுமாய் சத்தம் செய்துகொண்டும் சென்றனர். இத்தனைக்கும், அவர்கள் பேரில் தஞ்சை மக்களுக்கு எந்தக்கோபமும் ஏற்பட...
பல் சுவை தமிழ் இணையம். இலக்கியம், இலக்கணம், கவிதைகள், சிந்தனைகள், கணித விளையாட்டுகள் அனைத்தும் காணக்கிடைக்கும்.