முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜனவரி, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வர்க்க சிந்தனை

வர்க்கங்கள் சென்ற பதிவில் வாசுகி உமாநாத் பற்றி எழுதியதால், இந்த பதிவில் வர்க்கங்களைப்பற்றி எழுதும்படி ஆகிவிட்டது. 16 என்ற வர்க்க எண்ணிலிருந்து தொடங்குவோம். 16+9=25.  25 ஒரு வர்க்க எண். 25+11=36 36+13=49 49+15=64 நான் சொல்ல வந்த செய்தி புரிந்துகொள்ளப்பட்டிருக்கும் என்று நம்புகிறேன். இது என்னுடைய சின்ன வயது ஆராய்ச்சி(?). அடுத்தடுத்த இரு வர்க்க எண்களின் வித்தியாசம் தெரிந்தபின் அதற்கும் அடுத்த வர்க்க எண்ணைக் கண்டுபிடித்துவிடலாம். இரு நாட்களுக்கு முன், இந்த ஆராய்ச்சியில் மேலும் ஒரு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது, ஒரு எண், வர்க்க எண் என்று தெரிந்தால் போதும். அதற்கடுத்த எண்ணைக் கண்டுபிடிக்கமுடியும். மீண்டும் 16 ஐ எடுத்துக்கொள்வோம். 16 இன் வர்க்கமூலம் 4. 4 X 2 = 8 8 + 1 = 9 16 + 9 = 25. 25 ஒரு வர்க்க எண். 64 இன் வர்க்கமூலம் 8. 8 X 2 =16 16 + 1 = 17 64 + 17 = 81. போரடித்துவிட்டேனா? வர்க்கங்களைப்பற்றி சிந்திப்பது நன்மை தருவதே. நன்றி! அன்புடன், தே.சிவகுமார்.

வாசுகி உமாநாத்

வாசுகி உமாநாத் உங்களில் எத்தனை பேருக்கு வாசுகி உமாநாத்தைத்தெரியும்? பெண்ணியம் தொடர்பான தொலைக்காட்சி விவாதங்களில் கலந்துகொண்டு, கருத்துக்களைத்தெளிவாகவும், ஆணித்தரமாகவும் எடுத்துவைப்பதில் வல்லவர். அவரைப்பற்றி தெரிந்துகொண்டு உங்களுக்கு என்ன பயன் கிடைக்கப்போகிறதென்று எனக்குத்தெரியாது. ஆனால், தொலைக்காட்சியில் அவரைப்பார்க்கும்போது, என் நினைவுகள் என்னைப்பின்னோக்கி அழைத்துச்செல்வதைப்பற்றி, எழுதியே ஆகவேண்டும்.  1980 ஆம் ஆண்டு (என்று நினைக்கிறேன்) நடைபெற்ற சட்டமன்றத்தேர்தலில் CPI(M) சார்பாக வாசுகி உமாநாத்தின் தந்தை, திரு R.உமாநாத் அவர்கள்  எங்கள் நாகப்பட்டினம் சட்டமன்றத்தொகுதியில் போட்டியிட்டார். அப்போது, நாங்கள் வசித்த வடக்கு நல்லியான் தோட்டத்திற்கு, பிரச்சாரத்திற்கு வந்திருந்தார் வாசுகி அவர்கள். தெற்கு நல்லியான் தோட்டம் என்பது, ஒரு முழுத்தெரு, ஒரு குறுக்குத்தெரு, ஒரு குறுக்குச்சந்து. வடக்கு நல்லியான் தோட்டம் என்பது, ஒன்னரைத்தெரு, ஒரு குறுக்குச்சந்து, மகம் ரோட்டின் தெற்கு ஓரம். ஆஸ்பத்திரி ரோட்டின் கிழக்கு ஓரம், இரண்டுக்கும் பொதுவானது. ஒருநாள்,மேல்பகுதி மூடப்படாத ...